Friday 26 April 2013

‘அன்னை பூமியின் அன்பு மகள்’


ராஜ் சர்மா

விருட்ச சாஸ்திரம்: பகுதி- 3

      



இந்த பூமியை உய்விக்க வந்த  புனிதர்கள் என்று சில மகான்களை மதங்கள் அடையாளம் காட்டும். அது போன்ற ஒருவர் இந்த மனுஷி. அன்னை பூமியின் அன்பு மகள்என்று இவரை விளிக்கலாம்.


உத்திரப்பிரதேசம் காசியாபத்தைச் சேர்ந்தவர் ராஜ்சர்மா. இந்த அறுபது வயதுப் பெண்மணி கடந்த 46 ஆண்டுகளில் ஏறக்குறையலட்சம் மரக்கன்றுகளை பள்ளிகள், கல்லூரிகள்,மதரஸாக்கள், ராணுவத்தினர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் உதவியுடன் நட்டுள்ளார். 

நான் மரங்களை எனது குழந்தைகளைப் போல விதைக்கிறேன்என்கிறார் இந்தப் புண்ணியவதி. ‘நாமும் ஏன் நமது குழந்தைகளும் கூட ஒருநாள் காலனிடம் சென்றுவிடலாம் ஆனால் நாம் நட்ட மரங்கள் நமது பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்என்கிறார் இவர். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் பாருங்கள்!.

             

நமது  இல்லத்தரசிகள் சமையலில் பயன்படுத்தி எறியும் காய்கறிக் கழிவுகளை சேகரித்து அவற்றை உரங்களாக மாற்றி மரங்கள் தழைத்து வளர வழிகாட்டியுள்ளார். தமது ஆயுட்காலத்திற்குள் குறைந்தது 10 லட்சம் மரங்களை நடுவதே தமது வாழ்வின் லட்சியம் என்கிறார். அதுமட்டுமல்ல தனது வாழ்நாளில் தனது இலக்கை அடையாவிட்டால் தனது குழந்தைகள் தனது லட்சியத்தை நிறைவேற்றவேண்டும் அப்போதுதான் அவர்கள் தனது சொத்துக்களை அடையமுடியும் என்று உயில எழுதி வைத்துள்ளார். தினசரி இருபது ரூபாயை தனது மரம் வளர்ப்பு முயற்சிக்கு  செலவிடுகிறார். இது சிறிய தொகையே என்றாலும் மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதற்கேற்ப இவரது முயற்சிகள் அமைகின்றன.



இவரது வீட்டைச் சுற்றிலும் மரங்கள்தான். பல்வேறு பறவைகள், அணில்களின் உறைவிடம் அவரது இல்லம்.


       


படத்தைப் பாருங்கள் இயற்கையோடு ஒன்றிவிட்ட இம்மனுஷியை விலங்குகள் கூட எவ்வளவு பிரியத்துடன் அணுகுகின்றன என்பது புரியும். காலங்களைக் கடந்த அழியாப் புகழ் பெற்ற மனிதர்களான காந்தி, காமராஜர், M.G.R போன்றோர் வரிசையில் இவரும் இப்போதே இடம் பிடித்துவிட்டது கண்கூடு.

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை

என்ற கண்ணதாசன் வரிகள் இவருக்கு 100 சதவீதம் பொருந்தும்.

இவரது பேட்டியைக் காணவும் மேலதிகத் தகவல்களைப் பெறவும்   இங்கு  சொடுக்குங்கள்.

இங்கிலாத்து போன்ற மேலை நாடுகளில் மரம்  நடுதலை ஒரு இயக்கமாகச் செய்கிறார்கள். அங்கு ஒரு மரத்தை சாதாரணமாக யாரும் வெட்டிவிடமுடியாது. அது கடும் தண்டனைக்குரிய குற்றம் அந்நாடுகளில், அதுமட்டுமல்ல ஒரு மரத்தை சாலைப்பணி விரிவாக்கத்திற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெட்டுமுன் நீதிமன்றங்களிடம் அதற்கான உத்தரவை பெறவேண்டும். கடந்த நூற்றாண்டின் இறுதியில் அங்கு குறிப்பிட்ட அகற்ற வேண்டிய மரத்தை வேரோடு பிடுங்கி வேறிடத்திற்கு இடமாற்றம் செய்ய  கனரக இயந்திரங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். (நமது நாட்டிலும் சாலைப்பணி விரிவாக்கம் போன்ற செயல்களுக்காக மரங்களை வெட்ட வேண்டிய   ஒரு மரத்திற்கு ஈடாக 10மரங்களை நடவேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.)

 

படத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள நரையன்குலம் - ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவமணிகளுடன் பள்ளி ஆசிரியர்கள் -  நன்றி தினமலர்.



 மரம் வளர்த்தலின் முக்கியத்துவத்தை பள்ளிகளில் சொல்லித் தருவதோடு அவற்றில் ஈடுபடுத்துவதையும் பள்ளியிலிருந்தே துவங்க வேண்டும். தமிழகத்து  பள்ளிகளில் நமது வளரிளம் தளிர்களின் பிஞ்சு நெஞ்சில் பேதமை எனும் விஷ விருக்ஷங்களை விதைத்து தங்களது சுயநலத்திற்கு பயன்படுத்தும் அரசியல்வாதிகளின் கயமைத்தனத்திளிருந்து  நமது குழந்தைகளை காப்பாற்றி அவர்களை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துவது நமது கடமை.

 ஜப்பான்சுவிட்சர்லாந்து போன்ற பல நாடுகள் துருவப்பணி உருகி தங்களது நாடுகளை காலி செய்யாமல் இருக்க இந்தியா  போன்ற பல நாடுகளுக்கு நிதியை வாரி வழங்குகின்றன. அவற்றை நமது அரசு,  வனத்துறை மற்றும் வேளாண அமைப்புகள் மூலமாக செயல்படுத்த முயற்சிக்கிறது. சில தவறான அதிகாரிகள் மற்றும் NGO க்களின் கூட்டுக் களவாணித்தனத்தால் அவை விழலுக்கு இறைக்கும் நீராக மாறுவதையும் கவலையுடன் கவனிக்க நேர்கிறது.

 பின்வரும் இணைய முகவரிகள் மற்றும் செல்பேசிகளின் மூலம் தொடர்புகொண்டு விருக்ஷங்களை இலவசமாகப் பெற்று நீங்கள் பயனடைவதுடன் உங்கள் பங்கை இந்த உலகிற்கு ஆற்றுங்கள்.

http://www.projectgreenhands.org/get-involved/volunteer

ஜக்கி வாசுதேவ் அவர்களின் இஷா மையத்தின் சார்பில் துவங்கி நடத்தப்பட்டு வரும் முன்னணி அமைப்பு. தமிழ்நாட்டில் செயல்படும் பிரதானமான அமைப்பு இதுதான்.தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் அவ்வமைப்பின் கிளைகள் உண்டு.

http://www.greencoimbatore.com/

கோவையைச் சேர்ந்த மற்றொரு அமைப்பு. கோவை வாசிகள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

http://www.ancienttreearchive.org/sponsor-a-tree/?gclid=COCI5PPr4LYCFUx_6wod-i8A_Q

சென்னையில் செயல்படும் அமைப்பு. சென்னை வாசிகள் மட்டும் தொடர்பு கொள்ளலாம்.

http://agritech.tnau.ac.in/ta/forestry/extension_centres_ta.html

தமிழக அரசின் வேலாண்மை அலுவலகங்கள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்டு. அவைகளைத் தொடர்புகொண்டால் அவர்கள் மரங்களை பெற ஏற்பாடு செய்வார்கள். இந்த இணைப்பில் பெரும்பாலான மாவட்டங்களின் தொடர்புடைய அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தொடர்புகொண்டு விபரங்களை அறியலாம்.

 
9894062532 or 9962673668

இந்த செல்பேசி எங்களுக்கு மரங்கள்  வேண்டி ஒரு குறுஞ்செய்தி (SMS)அனுப்புங்கள். உங்களை தொடர்புகொண்டு மரங்களை அளிப்பார்கள். சென்னைவாசிகள் மட்டும்

treebankofindia@gmail.com or sms 97898 92080
இந்த மின் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியோ அல்லது இந்த செல்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளவும். சென்னை வாசிகள் மட்டும்.

 +91-9894062532 சென்னை வாசிகள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மேஷ ராசியில் சனியும் குருவும் சந்திப்பார்கள். அதனையடுத்து வரும் அறுபது ஆண்டுகளிலும் ஒவ்வொரு ஆண்டுகளிலும் இவ்விரு கிரகங்களின் சஞ்சார நிலைகளுக்கேற்பவே இந்த வருஷாதி விருக்ஷங்களை வகுத்தளித்துள்ளார்கள் நமது முன்னோர்கள். குரு மற்றும் சனியின் நிலையை ஒட்டியே ஒருவரின் ஜீவன, குடும்ப &  பொருளாதாரச் சூழல் அமையும். எனவே குறிப்பிட்ட ஆண்டில் பிறந்தவர்கள் அவர்களுக்கான பிறந்த ஆண்டின் விருக்ஷங்களை நட்டு பராமரித்து வந்தால் அவர்களின் வாழ்க்கை சூழல் நன்கமையும்.
 பின்வருவன வருஷாதி விருக்ஷங்கள்.

  

வருஷாதி விருட்சங்கள்
1.பிரபவ             - கருங்காலி மரம்
2.விபவ              - அக்ரூட்மரம்
3.சுக்ல                - அசோக மரம்
4.பிரமோதூத     - அத்தி 
5.பிரஜோர்பத்தி பேயத்தி மரம்
6.ஆங்கீரஸ        - அரசுமரம்
7.ஸ்ரீமுக             - அரைநெல்லி
8.பவ                   - அலயாத்தி
9.யுவ                  - அழிஞ்சில் மரம்
10.தாது               - ஆச்சாமரம்
11ஈஸ்வர            - ஆலமரம்
12.வெகுதான்ய  இலந்தை மரம்
13.பிரமாதி         - தாளைபனைமரம்
14.விக்ரம           - இலுப்பை மரம்
15.விஷு            - ருத்திராட்சம்
16.சித்ரபானு      - எட்டி மரம்
17.சுபானு          - ஒதியம்
18.தாரண          - கடுக்காய் மரம்
19.பார்த்திப       - கருங்காலி மரம்
20.விய               - கருவேலமரம்
21.சர்வஜித்        - பரம்பை மரம்
22.சர்வதாரி       - குல்மோகூர்மரம்
23.விரோதி        - கூந்தல் பனை
24.விக்ருதி         - சரக்கொன்றை
25.கர                 - வாகை மரம்
26.நந்தன           - செண்பகம்
27.விஜய            - சந்தனம்
28.ஜய                - சிறுநாகப்பூ
29.மன்மத           - தூங்குமூஞசி மரம்
30.துர்முகி          - நஞ்சுகண்டாமரம்
31.ஹேவிளம்பி  - நந்தியாவட்டை
32.விளம்பி         - நாகலிங்கம் 
33.விகாரி          - நாவல்
34.சார்வரி          - நுணாமரம்
35.பிலவ            - நெல்லி மரம்
36.சுபகிருது       - பலா மரம்
37.சோபாகிருது - பவழமல்லி மரம்
38.குரோதி         - புங்கம் மரம்
39.விசுவாவசு    - புத்திரசீவிமரம்
40.பராபவ         - புரசுமரம்
41.பிலவங்க       - புளிய மரம்
42.கீலக             - புன்னை மரம்
43.சௌமிய       - பூவரசு மரம்   
44.சாதாரண       - மகிழமரம்
45.விரோதிகிருது -  மஞ்ச கடம்பை
46.பரிதாபி         - மராமரம்
47.பிரமாதீச       - மருதமரம்
48.ஆனந்த         - மலைவேம்பு
49.ராட்சஸ        - மாமரம்
50.நள                - முசுக்கொட்டை மரம்
51.பிங்கள         - முந்திரி
52.காளயுக்தி     - கொழுக்கட்டை மந்தாரை
53.ஸித்தார்த்தி  - தேவதாரு
54.ரௌத்ரி        - பனை மரம்
55.துன்மதி        - ராமன்சீதா
56.துந்துபி        - மஞ்சள் கொன்றை
57.ருத்ரோத்காரிசிம்சுபா
58.ரத்தாக்ஷி  - ஆலசி 
59.குரோதன    - சிவப்புமந்தாரை
60.அட்சய        - வெண்தேக்கு


மற்றுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
பழனியப்பன்.

Wednesday 17 April 2013

அன்னை பூமியின் அருந்தவப் புதல்வன்!

விருக்ஷ சாஸ்திரம்
பகுதி - 2


இத்தொடரின் முந்தைய பதிவை படிக்காதவர்கள் படித்துவிட்டு இங்கு தொடர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 



 ஜாதவ் பேயங்





அஸ்ஸாமில் பிரம்மபுத்ரா நதிப்படுகயிலமைந்த  ஜோர்ஹட் நகரைச் சார்ந்த கோகிலமுக் எனும் சிறு கிராமம்.  1979 ஆம்  ஆண்டில் ஒரு மழைக்காலம். நதி நூற்றுக்கணக்கான பாம்பு, ஓணான் உள்ளிட்ட பல  சிறு பிராணிகளையும் தனது கோர வெள்ளத்திற்குப் பலியாக்கி தனதுபடுகையில் வீசிவிட்டுச் சென்றிருந்தது.கலலை தோய்ந்த  கண்களுடன் அப்பிராணிகளின் இறந்த உடல்களைக் கவனித்துக்கொண்டிருந்தான் ஒரு பத்தாம் வகுப்புச் சிறுவன். அச்சிறு பிராணிகள் பாதுகாப்பாக வாழ மரங்கள் நிறைந்த சூரிய வெப்பத்தின் தாக்கம் குறைந்த வாழிடங்கள் இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது என அனுமானித்து அவற்றிற்கு மரங்கள் சூழ்ந்த வாழிடங்களை அடுத்த சில நாட்களில் நதியின் நடுவே அமைந்த மனற்படுகையில் அமைக்கத் துவங்கினான் அச்சிறுவன்.

ஆற்று மணலில் மரங்களை வளரச்செய்வது பைத்தியக்காரத்தனம் என எள்ளி நகையாடினர் ஊரார். செவ்வெரும்புகள் ஆற்று மணலைத் துளைத்து மணற்படுகைக்கு கீழுள்ள சத்துமிகுந்த மண்ணை மேல்நோக்கி உயிர்ப்பித்துக் கொண்டுவரும் என அறிந்து அதனை செயல்படுத்தினான். தேடித்தேடி மரங்களைக் கொணர்ந்து நட்டான். அவனது முயற்சிக்கு வந்த தடங்கல்கள் இருந்து அவனது வனத்தை பாதுகாக்க தனது கல்வியையும் துறந்தான். தனது எண்ணம் செயல் சிந்தனை ஆகிய அனைத்தையும் அவனது அப்பணிக்காக அர்பணித்தான்.

காலங்கள் கடந்தன. இடையே அவனுக்குத் திருமணம் நடந்து குழந்தைகளும் பிறந்தன. எனினும் அவன் தனது குடும்ப வாழ்க்கையின் பொருட்டு மரங்களை நேசிப்பதை விட்டுவிடவில்லை. தனது குடும்பத்தோடு அவ்வனத்தில் குடியேறினான் அம்மனிதன். பிற்பாடு தனது குழந்தைகளின் கல்விக்காக வனத்தை விட்டு வெளியேறினாலும் மரங்கள் அவனது உயிர்மூச்சானது. உள்ளூர் மக்கள் அவன் வளர்த்த மரங்களை தங்களது தேவைக்காக வெட்ட முற்பட்டபோது என்னை வெட்டித் தள்ளிவிட்டு இம்மரங்களை வெட்டுங்கள் எனக் கோரினான். அவனது மன உறுதி மக்களையும் மாற்றியது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன் மாவட்ட நிர்வாகம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நதிப்படுகையில் குடியமர்த்த முற்பட்டபோது அவனது நியாயமான எதிர்ப்பினை உணர்ந்து தனது முடிவிலிருந்து பின்வாங்கியது. 

2007 ஆம் ஆண்டில் ஒருநாள் குடியிருப்புகளை துவம்சம் செய்த யானைகளை தேடிச் சென்ற அரசு அதிகாரிகள் தங்களது கையிலிருந்த மேப்பில் உள்ளபடி இங்கே இருந்த  மணற்படுகை எங்கே எனத் தேடி கிராமத்தினர்களை விசாரித்தபோது அவர்கள் காட்டிய மனிதன்தான் முளை (கத்தோனி) என அவர்களால் பரிவுடன் அழைக்கப்படும் திரு. ஜாதவ் பேயங்.  அந்த எளிய மனிதனின்  35 வருட தனிப்பட்ட உழைப்பின் காரணமாக பிரம்மபுத்திரா நதிப்படுகையில் ஏறக்குறைய 550 ஹெக்டேருக்கும் மேலாக பறந்து விரிந்திருந்தது அந்த வனம். யானைகள், காண்டாமிருகங்கள் போன்ற  பல்வேறு  வனவிலங்குகளுக்கும் எண்ணற்ற பறவையினங்களுக்கும் அது ஒரு சொர்க்கபுரி. மரங்களின் மீதிருந்த பேயங்கின் ஆர்வத்தால் அவ்வதிகாரிகள் பரவசமடைந்து அவரை வெளி உலகிற்கு அடையாளம் காட்டினர்.

இன்று ஜாதவ் பேயங் இந்திய முகங்களில் ஒருவர். அவரது பால்ய வயதுகளுக்குப் பிறகு பார்த்தேயிராத பல்லாஸ் மீன் கழுகு போன்ற பறவை இனங்களை இன்று அவரது 53 வயதில் தனது  வனத்தில் பார்த்துப் பரவசமடைகிறார்.

(நான்கூட எனது பால்ய வயதில் பார்த்த செம்போத்து போன்ற பறவையினங்களை தற்போது காண முடியாதது கொடுமைதான்)

டெல்லியிலமைந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பேயன்கின் செயலை பாராட்டி அவரை ‘THE FOREST MAN OF ASSAM’ எனப் போற்றுகிறது. இன்று அரசின் CHIEF CONSERVATOR OF FORESTS (CCF)  மேலும் 600 ஹெக்டேர் நிலத்தை அவரது பொறுப்பில் கொடுத்து அவரமைத்த வனத்தோடு சேர்த்து வனங்களை உருவாக்க  அவரை கேட்டுக்கொண்டுள்ளது.

மழைக்காடுகளை வளர்க்காவிட்டால் ‘இமயமலையிலமைந்த பனி உருகிய பிறகு நமது நீராதாரங்கள் என்ன ஆகும்? நீராதாரங்களை நம்பியுள்ள மனிதனின் நிலை என்னவாகும்  என எண்ணிப் பாருங்கள்? ‘ என வினாக்களை  எழுப்புகிறார் இந்த எளிய மனிதர். அவரது இந்தச் சிந்தனைகளைத்தான் அவர் கல்லூரி சென்றிருந்தாலும் ‘global warming’ என்ற பெயரில் கற்றிருப்பார்.

இவரைப்பற்றி அறிய வந்தபோது எனது முகநூலில் (facebook) கடந்த வருடம் ‘அன்னை பூமியின் அருந்தவப் புதல்வன்’ எனத் தலைப்பிட்டு தகவல்களைப் பகிர்ந்திருந்தேன்.

திரு.ஜாதவ் பேயங் பற்றிய மேலதிகத் தகவல்களை இங்கு சொடுக்கி  தெரிந்து கொள்ளலாம்.

அவர் பற்றிய விக்கிபீடியா இணைப்புக்கு இங்கு சொடுக்குங்கள்.

நான்  சென்ற பதிவில் கூறியபடி  நக்ஷத்திர விருக்ஷங்கள் அந்தந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் மீது தாக்கங்களை ஏற்படுத்துவது எவ்வளவு உண்மையோ அதைவிட அந்தந்த நக்ஷத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள் மீது தெளிவான தாக்கங்களை ஏற்படுத்துவதும் முழு உண்மை.நக்ஷத்திரங்களின் வேறுபட்ட பாதங்களில் பிறந்தவர்களிடையே வேறுபட்ட குணாதிசயங்கள் அமைந்திருக்கும் . இதனை ஜாதகத்தில்  அம்ச சக்கரத்தைக் கொண்டு தெளிவாக  அறியலாம்.  ஆணுக்கும்  பெண்ணுக்கும் பார்க்கப்படும்   திருமண பொருத்தத்தில் பொருந்தக்கூடிய  நக்ஷத்திரத்தின் ஒரு பாதம் மற்றொரு பாதமானால் பொருந்தாது என இந்தகைய  குணாதிசய வேறுபாடுகளால்தான்   தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

எனவே இங்கு குறிப்படப்பட்டுள்ள  இந்த  விருக்ஷங்களில் அவரவர்களுக்குப் பொருந்தும் விருக்ஷங்களைத் தேர்ந்தெடுத்து நட்டுப் பராமரித்து உங்களது சிரமங்களிலிருந்து விடுபடு வேண்டுகிறேன். இந்தப் பூமி  செழிக்க  உங்களது பங்கையும் அளிக்கக்  வேண்டுகிறேன். 




நக்ஷத்ர விருட்சங்கள்


அஸ்வினி          - எட்டி
பரணி                 - நெல்லி
ரோகிணி           - நாவல்
 மிருகசீரிஷம்    - கருங்காலி
 திருவாதிரை     - செங்கருங்காலி
 புனர்பூசம்         - மூங்கில்
 பூசம்                   - அரசு
 ஆயில்யம்         - புன்னை
 மகம்                  - ஆல்
 பூரம்                  - பலாசம்
 உத்திரம்           - ஆத்தி
 ஹஸ்தம்            - அத்தி
 சித்திரை            - வில்வம்
 சுவாதி               - மருது
 விசாகம்             - விளா
 அனுஷம்           - மகிழ்
 கேட்டை           - பிராய்
 மூலம்                - மரா
 பூராடம்             - வஞ்சி
 உத்திராடம்       - பலா
 திருவோணம்    - எருக்கு
 அவிட்டம்          - வன்னி
 சதயம்                 - கடம்பு
 பூரட்டாதி          -தேவா
 உத்திரட்டாதி   - வேம்பு
 ரேவதி                - இலுப்பை 

நக்ஷத்ர விருட்சங்கள் (பாத வாரியாக)

அஸ்வினி
1 ம் பாதம் - எட்டி
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் – நண்டாஞ்சு

பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை 

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் – நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் -  நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் – வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் – நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி
 
ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் – பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் – பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா
 
உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்
 
ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் – புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் – தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் – தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் – வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் – ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் – எலுமிச்சை

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் – தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் – பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் – ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் – திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் – கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் – செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா ரேவதி

60 தமிழ் வருஷங்களுக்கான வருஷாதி விருக்ஷங்கள் மற்றும் விருக்ஷங்களை இலவசமாகவே பெறுவதற்கான வழிவகைகள் உட்பட மேலும் பல தகவல்களை  அடுத்த பதிவில் கூறுகிறேன்.





வாழ்த்துக்களுடன்,
பழனியப்பன்.