Wednesday 29 May 2013

குருப்பெயர்ச்சியும் மக்களின் எதிர்பார்ப்புகளும்


வாக்கியப்படி நேற்றும் 28.05.13 திருக்கணிதப்படி 31.05.13 அன்றும் குருப்பெயர்ச்சி .

இந்த குருப்பெயர்ச்சியாவது தங்களின் துயர்களைத் தீர்க்குமா?           தங்களால் இனியும் இந்த தேசத்தில் பாதுகாப்பாக வாழ இயலுமா?                தங்கள் குழந்தைகள் இந்த தேசத்தில் நேர்மையாக சம்பாதிக்க முடியுமா?        என்பது போன்ற எண்ணற்ற கேள்விகளை என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற வருபவர்கள் அனைவரும் கேட்கின்றனர். வயதானவர்கள் மற்றுமின்றி சாதாரண குடும்பஸ்தன் கூட தற்போது தேசத்தில் பாதுகாப்புக்கும், நேர்மைக்கு ஏற்பட்டிருக்கும் சோதனைகளினாலும் பெண்கள் – குழந்தைகளின் மீதான  தாக்குதல்களினாலும் அரண்டு போயிருப்பது கண்கூடு.

இந்தக் கேள்விகள் அணைத்திற்கும் பதில்  மேலே உள்ள நமது சுதந்திர பாரதத்தின் ஜாதகத்தில் உள்ளது.

என்னைப்போன்ற எண்ணற்ற ஜோதிட ஆய்வர்களாலும் தேச பக்தர்களாலும் நித்தம் அலசப்படும் ஜாதகம் இது.

தேச விடுதலையின் பொருட்டு நமது ஒட்டுமொத்த தேசத்தின் நலனுக்கான பிரதிநிதியாக கோடானு கோடி மக்கள் காந்திஜியைப் பார்த்தனர்.காந்திஜிக்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அது அவரது தனிப்பட்ட விஷயம். ஆனால் ஒரு தேசத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் நிகழ்வு நேரத்தில் தனது தனிப்பட்ட அபிப்ராயங்களை விலக்கிவிட்டு தேச நலனின் பொருட்டு நல்லதொரு நேரத்தை அவர் தெரிவு செய்திருக்க வேண்டும். எந்தப் புண்ணியவான் தேர்ந்தெடுத்தானோ அந்த நேரத்தை.

லக்னத்தில் ஒரு குரூர பாவி (ராகு) உட்சம். பரம சுபக்கிரகமான குரு பகவான் லக்னத்திற்கு ஆறில் மறைந்தது மகா கொடுமை. ஏனைய கிரகங்களும் யுத்த களத்தில் (லக்னத்திற்கு மூன்றில்). லக்னத்தில் பாவியான ராகு வலுவாக அமைத்ததால்தான் நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் உத்தம புத்திரர்களாக (!) இருக்கிறார்கள். அது மட்டுமா, சொந்த மக்களின் நலன்களை ஒதுக்கிவிட்டு அந்நியர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் கொடுமைகளுக்கெல்லாம் ராகுவே காரணம். சூழ்ச்சிக்காரர்களும் அயோக்கியர்களும் நமது தேசத்தை ஆள்வதற்கும் ராகுவே காரணம். பல வேறு தேசங்களால் சூழப்பட்ட சிறிய நாடுகள் கூட தங்கள் தேசத்திற்கும் தேச மக்களுக்கும் பாதுகாப்பான நல்லாச்சியை வழங்கிவரும் நிலையில், தங்கள் நலனே முக்கியம், மக்கள் எக்கேடு கெட்டால் என்ன? என துணிந்து அரசியல்வாதிகள் இந்த தேசத்தை கொள்ளையடித்துக் கொண்டிருப்பதற்கு ராகுவே காரணம். ரிஷப லக்னத்திற்கு பரம சுபனான சனி மூன்றில் கிரக யுத்தத்தில் அமைந்து சுதத்திரமடைந்த நாளின் கூட்டுத் தொகையும் ஆக (1+5+8+1+9+4+7 = 8) அமைந்தது  மக்களின் துயரங்களுக்கு விடிவே இல்லாமல் செய்துவிட்டது.
நமது தேசத்தை ஆள்பவர்கள் ராகுவின் அம்சங்களாகவே இருப்பதன் காரணம் சுதந்திர இந்தியாவின் லக்னத்தில் ராகு வலுவாக அமைந்ததனால்தான்.

ராகுவானவர்  சூழ்ச்சி, பித்தலாட்டம், விதவை, தாதாயிசம், கள்ளக்கடத்தல்,இஸ்லாமியம், மறைமுக செயல்பாடு, பின்னாலிருந்து இயக்குதல் (கேது – கிறிஸ்தவர்களைக் குறிக்கும்) போன்றவற்றைக் குறிக்கும்.

இந்தியாவை அதிகக் காலம் கட்டுப்பாட்டுடன் வெற்றிகரமாக ஆட்சி செய்தவர் இந்திரா பிரியதர்சினி என்ற இயற்பெயர் கொண்ட இந்திரா காந்தி. பெரோஷ்கான் என்ற இஸ்லாமியரைத் திருமணம்  செய்ய முஸ்லிமாக மதம் மாறி மைமூனா பேகம் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டவரே. காஷ்மீரி பண்டிட்கள் எந்த முஸ்லிம்களால் காஷ்மீரிலிருந்து விரட்டப் பட்டார்களோ அதே முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த பெரோஷ்கானை காஷ்மீரி பண்டிட் இனத்தைச் சேர்ந்த இந்திரா மனம் புரிந்தது காலத்தின் அதிசயங்களில் ஒன்றுதான். எனவே இஸ்லாமியப் பெண்மணியாக மதம் மாறிய இந்திரா  ஒரு முழுமையான ராகுவின் அம்சமே. பிற்பாடு தனது தாய் மதத்திற்கு இந்துவாக மாறி தனது கணவர் பெரோஷ்கானையும் இந்துவாக மதம் மாற்றி பெரோஸ் காந்தியாக்கினார். ஆனால் தேசத்தை ஆட்சிசெய்பவர் தனது அம்சமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரை ராகு விதவைப் பெண்மணியாக மாற்றிவிட்டது கொடுமை.(விதவைப் பெண் ராகுவின் அம்சம்). இந்தியாவை தற்போது பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருக்கும் சோனியா காந்தி, 13 ஆம் தேதி பிறந்த வாஜ்பாய் (1+3 = 4 ராகுவைக் குறிக்கும் எண்) உள்ளிட்ட அணைவரும் ராகுவின் அம்சங்கள்தான். இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர்களின் ஜாதகங்களை ஆராய்ந்தால் அவர்கள் ராகுவின் அம்சங்களாகவோ அல்லது ராகு திசை அல்லது ராகு புக்தியில் ஆட்சி செய்தவர்களாகவோ இருப்பதைக் காணலாம்.

இப்படி சனியாலும் ராகுவினாலும் ஆட்டுவிக்கப்பட்ட நமது தேசம் 2009 ன் மத்தியில் உலகை இயக்கும் சக்திகளுள் ஒன்றான வல்லரசாக மாறி விட்டதை சுதந்திர இந்தியாவின் ஜாதகம் உணர்த்துகிறது. தற்போது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு திசா புக்தியின் அடிப்படையிலும் கோள்சாரத்தினடிப்படையிலும் தேச மக்களுக்கு ஒரு நல்ல காலம் பிறந்துள்ளது. இந்த குருப் பெயர்ச்சி நமது தேசத்திற்கு செய்யவிருக்கும் நன்மைகள் பல.

அவற்றுள் ஒரு சில இதோ.

சூழ்ச்சி, பதுக்கல்,தாதாயிசம் படிப்படியாக ஒழிக்கப்படும்.
பொருளீட்ட குறுக்கு வழியைக் கையாளுபவர்கள் ஒடுக்கப்படுவர் & தண்டிக்கப்படுவர்.

தேச விரோத சக்திகளை ஒதுக்கி சிறந்த ஒரு முடிவை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளிக்க முன்வருவர்.

நீதித்துறை, கல்வி, மனித வளம் போன்ற துறைகள் சிறப்பாகச் சீரமைக்கப்படும்.

முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனின் பொருட்டு புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு அவை உடனடியான பயன்பாட்டுக்கு வரும்.

பெண்கள், குழந்தைகள் தொடர்பான வழக்குகள் தீவிர முனைப்புடன் செயல்படுத்தப்படும்.

தொலைக்காட்சி, பத்திரிகை, கம்ப்யூட்டர்  போன்ற ஊடகத்  துறைகளை மத்திய அரசு புதிய சட்டங்களை இயற்றி கட்டுப்படுத்தும்.

ராணுவம், காவல், உள்நாட்டுப் பாதுகாப்பில் நவீனத்துவம் புகுத்தப்படும்.

பாரம்பரியத் தொழில்களில் நவீனமான மாறுதல்கள் ஏற்படும்.

விவசாயம், நீர் மேலாண்மை போன்ற துறைகள் அயல்நாடுகளின் ஒத்துழைப்புடன் சிறப்பான மாறுதல்களைக் காணும்.

சிறு தொழில்கள் அரசின் கனிவான பார்வையால் முன்னேறும்.

தங்கத்தின் மதிப்பு கட்டுப்படுத்தப்படும்.

பங்கு வணிகம் மேலும் சில சீர்திருத்தங்களைக் காணும்.

மேலை நாடுகள் தங்களது இந்திய பங்குச் சந்தை முதலீடுகளை பெருமளவில் குறைத்துக் கொள்ளும்.(தனகாரகன் குரு இந்தியாவின் கடக ராசிக்கு 12 ல் மறைவதால் இது ஏற்படும்)

இதனால் ஏற்படும் பாதிப்புகளை சில சிரமங்களுடன் தேசம் 

சமாளித்துவிடும்.(கடக ராசிக்கு 6 ஆமதிபதி குரு 12 ல் மறைவதால் விபரீத ராஜயோகம் செயல்படும்)




காங்கிரஸ் கட்சி  ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தியாவை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதைக் கண்டு உலக நாடுகள் ஆச்சரியப்படும்.

சிறு, குறும் கட்சிகள் தலையெடுக்காமல் காங்கிரஸ் பார்த்துக் கொள்ளும்.
காங்கிரசின் சூழ்ச்சியால் தாங்கள் சிதறுண்டு போவதை தடுக்க முடியாமல் சிறு மற்றும் தேச விரோத கட்சிகள் செய்வதறியாது திகைக்கும்.
தேசம் இருகட்சி முறைக்கு மாறுவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடக்கும். (தற்போது குரு இடம் பெயர்ந்துவரும் ராசி இரட்டை ராசியான மிதுன ராசி என்பதை கவனிக்கவும்).

எனினும் தமிழ்நாடு துலாம் ராசி அமைப்பில் வருவதாலும், ஏழரைச்சனி தற்போது துலாம் ராசிக்கு நடப்பதாலும் தமிழக மக்கள் இன்னும் சில ஆண்டுகள் வேதனைப்பட நேரும். எனினும் தற்போதைய குருப்பெயர்ச்சி தமிழகத்திற்கு பல உபயோகமான நன்மைகளை அளிப்பது உறுதி. மக்கள் தமிழக அரசியல்வாதிகளால் தாங்கள் எப்படியெல்லாம் துயரங்களுக்கு ஆளாகிறோம் என்பதை உணர்ந்து கட்சி வேறுபாடின்றி நல்ல ஆட்சிமுறைக்கு ஆதரவளிக்க முன்வருவர். மின்வெட்டின் தீவிரம் பெருமளவில் குறையும் என்றாலும் 2014 டிசம்பரில் நடக்கும் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகே தமிழகத்தில் மின்வெட்டு 90%  குறையும்.

உலக நடப்புகளைப் பொருத்தவரை தற்போதைய குருப்பெயர்ச்சி அமெரிக்காவிற்கு பெருமளவில் நன்மைகளை வழங்கும்.அமெரிக்காவின் ராசி மற்றும் லக்னம் இரண்டையும் குரு மிதுனராசிக்கு மாறியவுடன் பார்ப்பார் என்பதுதான் காரணம்.இந்தியாவின் ரிஷப லக்னம் அமெரிக்காவின் தனுசு லக்னத்திற்கு சஷ்டாஷ்டகமாக  (6 – 8 ) வருவதும் இந்தியாவின் கடக ராசிக்கு அமெரிக்காவின் கும்ப ராசி (6 – 8 ) ஆக சஷ்டாஷ்டகமாக அமைந்ததும் இவ்விரு நாடுகளும் எப்போதுமே ஒத்துப்போகாது என்பதைக் காட்டுகிறது. ஒருகையில் ரோஜாவையும் மறுகையில் ஆயுதத்தையும் கொண்டே இவ்விரு நாடுகளின் உறவும் அமையும். அதனால்தான் நமது நிம்மதியைக் குலைக்க பாகிஸ்தானிற்கு இலவசமாகவே பொருளாதார உதவிகளையும்  எண்ணற்ற ஆயுதங்களை வழங்கி வருவதும் தெரிகிறது. ஆனால் கிரகங்களில் ராகு கேதுக்கள்தான் வலுவானவை என்பது எப்போதும் உண்மை. அமெரிக்கா அவ்வாறு அளித்த ஆயுதங்களால் அதன் நிம்மதியே பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் காலச் சூழ்நிலை இவ்விரு நாடுகளையும் இந்தியாவின் திசா புக்தி அடிப்படையில் கடந்த 2009 முதல் நெருங்கி வர வழி செய்துள்ளது. அது மட்டுமல்ல தற்போதைய குருப்பெயர்ச்சி இவ்விரு நாடுகளும் இணைந்து உலக நடப்புகளில் வரும் ஆண்டுகளில் பல பெரும் நிகழ்வுகளை கட்டுப்படுத்த இருப்பதை உறுதி செய்கிறது. தற்போது பல ரௌடி நாடுகள் மற்றும்  தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாகத் திகழும் நாடுகளின் அடிப்படை கட்டமைப்பை இந்தியா, அமெரிக்காவுடன் வேறு சில நாடுகளும் சேர்ந்து செயல்பட்டு மாற்றியமைக்கும் என்பது புலனாகிறது. ஸ்ரீலங்கா, மாலத்திவுகள், மொரீஷியஸ், தாய்லாந்து, வியட்நாம்  போன்ற நாடுகளில் தீவிரவாதம், மதவாதம், பிரிவினைவாதம், ரௌடிசம் தலை தூக்காமல் இந்தியாவினால் பாதுகாக்கப்படும். தமிழகத்துப் பிரிவினை வாதிகள் கடலில் மூழ்கும் மனிதனின் கடைசி நேர கூக்குரல் போல 2016 ஜூன் வரை சப்தமிடுவார்கள் பிறகு  காணாமல் போவார்கள்.


வாழ்த்துக்களுடன்,
பழனியப்பன்.

பின்குறிப்பு:
மேற்சொன்ன கருத்துக்கள் விருப்பு வெறுப்பற்ற தன்மையுடன் எனது ஜோதிட ஆய்வுநோக்கில் கூறப்பட்டவை.. எந்த இன,மத,தேச மக்களையும் சிறுமைப்படுத்தும் எண்ணத்துடன் கூறப்பட்டவைகள் அல்ல என்பதை அறியவும்.

Sunday 19 May 2013

ஆசிரியர் பணி


என்ன படிக்க வைக்கலாம்?
பகுதி – 2
முதல் பகுதியைப் படிக்க இங்கே  சொடுக்கவும்

ஆசிரியர் பணி
இன்று பெரும்பாலோர் விரும்பும் பணியாக ஆசிரியர் பணி உள்ளது.
அதுவும் அரசுப் பள்ளி ஆசிரியராக பணி அமைந்துவிட்டால் ஒருவரது ஜென்மம் கடைத்தேறிவிடும் என இன்று பெரும்பாலோனோர் எண்ணுகின்றனர்.

பணிகளிலே புனிதமான பணி என ஆசிரியர் பணியைக் கூறலாம்.

அரசுப்பணி (GOVT. JOB)
ஒருவருக்கு அரசுப்பணி அமைய வேண்டுமெனில் அவருடைய ஜாதகத்தில் சூரியன் வலுவாக அமைந்திருக்க வேண்டும். இரண்டாமிடம், பத்தாமிடம் அல்லது குறைந்தபட்சம் ஆறாமிடத்துடனாவது சூரியன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். சூரியன் வலுவாக அமைந்திருந்தால்தான் ஒருவர் அரசுத் துறையில் ஜொலிக்க முடியும்.

பத்தாமிடத்துடன் சூரியன் தொடர்பு கொண்டிருந்ததால் அரசுப் பணி அமைந்து ஆனால் அதே சூரியன் வலுவாக அமையாமல் பாவிகள் பார்வையில் இருப்பதால் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணி உயர்வைப் பெற இயலாமல் துறை மேலிடத்தின் மீது நீதி மன்றத்தில் வழக்கு போட்டு நீதிமன்றம் சென்று வருபவரை நானறிவேன். எனவே அரசுப்பணி மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்வில் ஒருவர் உயர வேண்டுமென்றால் கூட  சூரியன் ஜாதகத்தில் நன்றாக அமைந்திருக்க வேண்டும்.

ஆசிரியர் பணி அரசுத் துறையிலா அல்லது தனியார் துறையிலா?  
ஆசிரியர் பணி ஒருவருக்கு அமைய வித்யா காரகன் புதன் மற்றும் நற்போதனைகளுக்கு காரகத்துவம் வகிக்கும் குரு ஆகிய இரண்டு கிரகங்களின் பங்கு மிக அவசியம். இவ்விரண்டு கிரகங்களும் தன (2 ஆமிடம்), ஜீவன (10 ஆமிடம்) ஆகிய பாவங்களுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அல்லது  அடிமைத்தொழிலைக்  குறிக்கும் 6 ஆம் பாவத்துடன் குருவும் புதனும் தொடர்பில் இருக்க வேண்டும். இந்த இரு கிரகங்களுடன் சூரியன் தொடர்பு கொண்டிருந்தால் அரசுப்பள்ளி ஆசிரியர் பணி அமையும். சூரியன் அல்லாமல் வேறு கிரகங்கள் தொடர்பு கொண்டிருந்தால் அந்த கிரகங்களுக்கேற்ற சூழ்நிலையில் செயல்படும் தனியார் பள்ளி அல்லது கல்லூரியில் ஆசிரியர் பணி அமையும் எனக் கொள்ளலாம்.

ஒருவரது  ஜாதகத்தில் புத்திகாரகன் புதனும் தனகாரகன் குருவும் கெட்டிருந்தால் அவர் கற்கும் கல்வி அவருக்கு பொருளீட்ட பயன்படாது. அத்தகைய அமைப்பு ஜாதகத்தில் அமையப்பெற்றவர்கள் உத்தியோக ரீதியான (professional) துறையைத் தேர்ந்தெடுத்து உயர்கல்வி பெறுவதைவிடுத்து BBA, MBA, B.E (HONORS)  போன்ற பொதுவான துறைகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள். ஜாதகர் அரசுப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
                               


இந்த ஜாதகத்தில் லக்னமே குருவினுடைய தனுசுதான். குருவானவர் வித்யாகாரனும் ஒருவரது தொடர்புகளைக் குறிக்கும் 7 மற்றும் ஜீவனத்தைக் குறிக்கும் 10 ஆமிடத்து அதிபதியான புதனின் வீட்டில் இருப்பதைக் கவனியுங்கள். குரு வக்ரகதியில் நின்றதால் குருவுக்கு ஏற்பட்ட கேந்திராதிபத்திய தோஷம் குறைந்துவிட்டது. மேலும் வருமானத்தைக் குறிக்கும் 2 ஆமிடத்தில் அரச கிரகம் சூரியன் கல்விக்கு காரகம் வகிக்கும் புதனுடம் சேர்ந்து அமைந்திருப்பதை கவனியுங்கள். கல்வியை போதித்து அரசு மூலம் வருமானம் ஈட்டுவதை இந்த அமைப்பு காட்டுகிறது. 

சுவாதி நக்ஷத்திரத்தில் பிறந்த ஜாதகரது பால்ய வயதுக் கல்வி, 2 ஆமிடத்தில் பாவக்கிரகம் சூரியன்   அமைந்ததாலும்  2 ஆமதிபதி சனி கெட்டதாலும்  ராகுதிசையின் இறுதியில் ஏழ்மையால் தடைபட்டது. எனினும் அடுத்து வந்த லக்னாதிபதி குருவினது திசை 2 வருட இடைவெளிக்குப் பிறகு கல்வியைத் தொடர வழிசெய்தது. குரு, சூரியன் மற்றும் புதனின் அமைப்பினால் ஜாதகர் ஆசிரியர் பயிற்சி முடித்து அரசுப் பணியில் அமர்ந்தார். லக்னத்தை தனது நேரடிப் பார்வையில் வைத்திருக்கும் லக்னாதிபதி குரு ஜாதகரை தனது அம்சமாகவே மாற்றினார்.ஜாதகரை தலைமை ஆசிரியர் நிலைக்கு உயர்த்தினார்.  அவரை நல்லாசிரியர் விருது பெறவைத்து பெருமைப்படுத்தினார். தற்போதும் தகுதி உடைய எளியோர்களுக்கு அரசு  உதவித் தொகைகளை பெற உதவிகள் புரிந்து தனது வாழ்வை பயனுள்ளதாகப் பேணி வருகிறார். இவரிடம் எனது பால்ய வயதுக் கல்வியைக் கற்றது எனது பாக்யமே.  

கீழே மற்றொரு ஆசிரியரின் ஜாதகத்தை கவனியுங்கள்.







கன்னி லக்னமாக அமைந்து அதில் உச்சகதியில் அமைந்த லக்னாதிபதி புதன் குருவோடு சேர்ந்து புனிதமடைந்தார். ஆனால் இந்தக் கூட்டணியில் கேதுவும் சேர்ந்து லக்னத்தை வலுவடையவிடாமல்  கெடுத்துவிட்டார்.  லக்னாதிபதி புதன் ஜீவனஸ்தானாதிபதியுமாக ஆகிறார். மேலும் புதன் வித்யாகாரகன் என்பதோடு குறிப்பாக கணிதத் திறமைக்கு காரண கர்த்தாவாகிறார். அதனால் ஜாதகர் ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றுகிறார். சூரியன் ராசியில் நீசம் கூடவே குரு அம்சத்தில் நீசமாகியிருப்பதைக் கவனியுங்கள். மேலும் இரண்டாமதிபதி சுக்கிரன் மூன்றில் மறைந்து குரு அம்சத்தில் நீசமாகியிருப்பது ஜாதகர் வாழ்வில் நிறைய பொருளாதாரச் சிரமங்களையும் பொருளாதார இழப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதைக் குறிப்பிடுகிறது.

 சூரியன் தனஸ்தானத்தில் நீசமானதால் தன் தந்தை தேடிவைத்த பொருளாதாரத்தை அழித்து தந்தையின் ஆயுளுக்கு தனது ஜாதக அமைப்பினால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்துவிட்டார். ஜீவன காரகன் சனி அம்சத்தில் நீச குருவுடன் பரிவர்த்தனையில் இருப்பதைக் கவனியுங்கள். இந்த அமைப்புகளெல்லாம்  ஜாதகருக்கு அரசு(சூரியன்) ஆசிரியர்(குரு) பணி அமையாது என்பதைக் குறிக்கிறது. ஆனால் அரசு ஆசிரியர் பணி அமையும் என்ற எண்ணத்தில் தனது வாழ்வின் பெரும்பகுதியை  வீணடித்துவிட்டார். இன்றைய சூழலில் அரசுப்பணி அமைந்துவிட்டால்தான் பொருளாதாரச் சிரமங்களிளிருந்து விடுபட்டுவிடலாமே. முதலில் நாம் ஆராய்ந்த ஜாதகரது புதல்வர் இரண்டாம் ஜாதகத்தவர். இருவருமே ஆசிரியர்கள். ஆனால் யார் எங்கு எத்தகைய பணியாற்றுவது என்பதை ஒருவரது ஜனன நேரம் மூலமாக இறைவனே நிர்ணயிக்கிறான்.

ஒருவரது ஜாதக அமைப்பை ஆராய்ந்து அவருக்கு ஒவ்வாத துறைகளை விலக்கி பொருத்தமான துறைகளை தேர்ந்தெடுக்க மகத்தான வழிகாட்டுதல்களை ஜோதிடத்தால் அளிக்க இயலும். நமது வாழ்வை செம்மையுற அமைத்துக்கொள்ள நமது இந்து தர்மம் அளித்துள்ள மகத்தான பொக்கிஷம் ஜோதிடமாகும்.

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
பழனியப்பன். 

Sunday 5 May 2013

என்ன படிக்க வைக்கலாம்?

 பகுதி : 1

ஓவியக் கலைஞன்







"ஒரு மனிதனது வாழ்வில் வெற்றி தோல்வியை அவன் பிற மனிதனைத் தொடர்பு கொள்ளும் முறைதான் முடிவு செய்கிறது" என்றொரு கருத்து உண்டு.ஆனால் இது தவறான கருத்து. ஏனெனில் ஒரு மனிதனின் வாழ்வில் வெற்றி என்பது எது என்பதிலேயே பல கருத்து  வேறுபாடுகளுண்டு.இன்றைய கால கட்டத்தில்  பணம் சம்பாதிப்பதையே வாழ்வின் வெற்றியாக பெரும்பாலோனோர்     கருதுகின்றனர். பணம் சம்பாதிப்பது வாழ்வின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று அவ்வளவே. அதனால்தான் மேற்சொல்லப்பட்ட கருத்துக்கு மாற்றாக " வாழ்வில் வெற்றி தோல்விகளை ஒருவரது சுய விருப்பமே நிர்ணயிக்கிறது" என்கின்றனர் அறிஞர்கள்.

இதில் சம்பாதிப்பதில் ஒருவரது சுய விருப்பங்களை மீறி அவரது ஜாதக அமைப்பே முன்நிலை வகிக்கிறது. ஒருவன் எத்தகைய கர்மங்களைச் செய்து பொருளீட்டுவான் என்பதை ஒருவரது ஜாதகத்தில் 1,2,6,10 மற்றும் சனியின் நிலையைக் கொண்டு தெளிவாக அறியலாம். ஒருவர் எத்துறையில் பிரகாசிப்பார் என்பதை தகுந்த ஒரு ஜோதிடர் மூலம் அறிந்து அந்தத் துறையை தேர்ந்தெடுத்து உயர்கல்வியில் தங்களது குழந்தைகளை ஈடுபடுத்தினால், கல்விக்கும் உத்தியோகத்திற்கும் தொடர்பில்லாமல் இயந்திரவியல் படித்துவிட்டு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வைத்துப் பிழைக்கும் அவலங்கள் குறையும். இன்று கற்ற கல்விக்கு தொடர்பில்லாத துறைகளில் பெரும்பாலோனோர் ஈடுபடுவதைக் காண முடிகிறது. ஆனால் ஈடுபாடுள்ள தொழிலைச் செய்வதில்தான்  ஒருவர் ஆத்ம திருப்தியடைய முடியும். மேலும்  அந்தத் தொழிலும் அவர்களால் சிறப்படையும். சில புத்திசாலிகள்  பிடிக்காத துறையில் வருவாய்க்காகப் பணிபுரிந்துகொண்டு  விருப்பமுள்ள மாற்றுத் துறையில் ஈடுபட்டுப் புகழடைந்து கொண்டிருப்பதை  வாசகர்கள் தற்காலத்தில் காணலாம்.

ஒருவர் எத்துறையில் ஈடுபட்டிருந்தாலும் அவர் பொருளாதார ரீதியாக எப்படி இருப்பார் என்பதை ஜாதகத்தில் தனகாரகன் குரு, இரண்டாம் பாவம், இரண்டாம் அதிபதி உள்ளிட்ட கிரக அமைப்புகள்தான் முடிவு செய்கின்றன. எனவே ஒருவர் ஈடுபடும் துறைக்கும் பொருளீட்டுதலுக்கும் தொடர்பில்லை என்பதை வாசகர்கள் நன்கு உணர வேண்டும்.

பின்வரும் ஜாதகத்தைக் கவனியுங்கள். ஜாதகி பிறந்தது 31.04.1977. இந்த ஜாதகத்தில் உள்ள ஒரு யோகத்தின் பெயர் காந்தர்வ யோகம். பல கலைகளில் திறமையும் பிரபலமும் அளிக்கும் யோகம் இது.  சுக்கிரன், சூரியன், சந்திரன், சனி இந்த நான்கு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட இடங்களில் அமையப்பெறுவதால் இந்த யோகம் ஒருவருக்கு ஏற்படும். இந்த யோகத்திற்கான விதிகள்.
                           
                                 






1.சூரியன் உச்சமாக இருக்க வேண்டும்.
2.சந்திரன் பாக்கியஸ்தானத்தில் (9 மிடத்தில்) இருக்க வேண்டும்.
3. பத்தாமதிபதி கிரகம் ஏழாமிடத்திற்கு திரிகோணத்தில் இருக்க வேண்டும்.
4. லக்னாதிபதியை குரு பார்க்க வேண்டும்.

இக்கிரகங்களின் தனிப்பட்ட குணாதிசயங்களாவன.
சந்திரன்  - கற்பனா சக்தி
சுக்கிரன் - கலைகளில் ஈடுபாடு
சனி         - சிரத்தை, பொறுமை , உழைப்பு
புதன்       - மேற்கண்ட செயல்களை ஒருங்கிணைத்துச் செயல்படும் புத்திசாதுரியம்.
குரு        - படைப்பு உன்னதமாக வெளிப்பட உதவுபவர், வெற்றி, புகழ்.
சூரியன் - ஆளுமை மற்றும் ஒருங்கிணைத்தல்.

மேற்குறிப்பிட்ட நான்கு விதிகளில் முதல் 3 விதிகள் இந்த ஜாதகத்தின்  ராசிக்கட்டத்தில் அமைந்திருப்பதைக் காணலாம். நான்காவது விதி அம்சத்தில் அமைந்துள்ளது. லக்னாதிபதி சனியை(அம்சத்தில்) குரு ஒன்பதாம் பார்வையாகப் பார்ப்பதைக் கவனியுங்கள்.

இந்த யோகம் தவிர ஜாதகர் செய்யும் தொழிலுக்காண தொடர்புகள் இந்த ஜாதகத்தில் மேலும் சில உண்டு. அவை பின் வருமாறு.

1. ராசி, அம்சம் இரு கட்டங்களிலும் பத்தாமிடம் (செய்யும் தொழிலைக் குறிக்குமிடம்) கலைகளுக்குரிய சுக்கிரனின் வீடாகவே அமைந்திருப்பதைக் கவனியுங்கள்.
2. தனஸ்தானாதிபதியும்  (2 ஆமதிபதி) லக்னாதிபதியுமான  சனியானவர்  கலை மற்றும் கற்பனைகளுக்குரிய  சந்திரனின் வீட்டில் அமர்ந்திருப்பதைக் கவனியுங்கள். 
3. தனகாரகன் குரு சுக்கிரனின் வீட்டில் உள்ளது ஜாதகர் fine arts ல் ஈடுபட்டு பொருளீட்டுவதை உறுதி செய்கிறது.
4.மேலும் சந்திரனுக்கு இரண்டாமிடமும் சுக்கிரனின் வீடுதான் (துலாம்) என்பதையும்         கவனிக்க வேண்டும்.
        

நாம் ஆராய்ந்த ஜாதகத்திற்குரிய ஜாதகி ஓவியத்துறையில் ஈடுபாடுள்ளவர். ஓவியத்தை மாணவர்களுக்கு கற்றுத்தந்து பொருளீட்டுகிறார்.

தலைப்பின் கீழே நீராடும் யுவதியை முதன் முதலாகப் பார்ப்பவர்கள் அவசரப்பட்டு  ஜொள்ளுவிட  வேண்டாம். அந்த யுவதி பென்சில் டிராயிங் என்ற எளிய முறையில் வரைந்த ஒரு ஓவியம். நம்ப இயலாதவர்கள் கீழே அதை கர்ம சிரத்தையுடன் இத்தாலிய இளைஞனொருவன்  வரைவதைக் காணுங்கள்.









இது போன்ற மற்றும் ஒரு பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,


பழனியப்பன்.