Thursday 24 September 2015

ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள்.



சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் 1930 - 2015

சுவாமிகள் 23.09.2015 அன்று இரவு 10.17  மணிக்கு ரிஷிகேஷில் ஜீவ முக்திடடைந்தார்.

பாரத புண்ணிய பூமியை, நமது இந்து தர்மத்தை உய்விக்க வந்த மகான்.ஆனால் பிற்பாடு மதங்களைக்கடந்த மகானானார்.   

சில ஆண்டுகளுக்கு முன் எனது ஆத்ம நண்பரும் பிரபல ஆடிட்டருமான திரு.ரமணி அவர்களை சந்திக்க கோவை சென்றிருந்தபோது இந்த மகானை தரிசிக்க ஆனைகட்டி ஆசிரமத்திற்குச் சென்றிருந்தேன். சுவாமிகள் அப்போது அமெரிக்காவில் தனது ஆசிரமத்தில்  இருந்ததால் தரிசிக்க இயலவில்லை. ஜோதிடனான நான் புதனின் அம்சம். மகான்கள் குருவின் அம்சம். புதனுக்கும் குருவிற்கும் ஜோதிட விதிகளின்படி கடும் கருத்து வேறுபாடுகள் உண்டு. எனினும் ஒன்றையொன்று மிகவும் வசீகரிப்பவை என ஜோதிடத்தில் பல்வேறு ஆய்வுகள் செய்த காலஞ்சென்ற ஜோதிட அறிஞர் நம்புங்கள் நாராயணன் ஒருமுறை குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.  காலச் சூழலில் பிறகு பல முறை முயன்றாலும் எனது கர்மா இவரைப்போன்ற மகான்களை தரிசிக்க எனக்கு பாக்கியமில்லை என்பது போன்று உணர்த்தியது. இவர்போன்ற ஞானிகளை உயிரோடிரிந்தபோது தரிசிக்கும் யோக்கியதையை எனக்கு அருளும் இறைவா என என்னைப்படைத்தவனிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்.


முக்தியடைய சில நாட்களுக்கு முன்பு.


 மிக எளிய கிராமமான மஞ்சுக்குடியில் பிறந்த மகான்.. ஆளால் மகத்தான ஆன்மீகவாதி. இந்த உலகை உய்விக்க வந்த ராகவேந்திரரின் மறு உருவமாகவே அவரை நான் கண்டேன். இவர் போன்ற பரிசுத்த ஞானிகளை இனி வரும் காலத்தில் தரிசிக்க இயலாது. காரணம் காலகட்ட தோஷம். ஜோதிட வரலாற்றை நான் எனது வலைப்பூ துவங்கிய போது இவரை எனது மானசீக வழிகாட்டியாக எண்ணியே எழுதியிருந்தது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.இனியும் நமக்கு வழிகாட்டியாய் நம் மனதில் நிறைந்து நமது வாழ்வை செம்மைப்படுத்துவார். இதற்கு மேலும் இவரைப்பற்றி எழுத எனக்குத் தகுதியில்லை என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

கனத்த இதயத்துடன்,
அன்பன்,

பழனியப்பன்.