Thursday 29 June 2017

நீ வருவாயென...


வாழ்க்கைத்துணை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு ஒரு ஆசை இருக்கும். ஆசைக்கும் கொடுப்பினைக்கும் இடைப்பட்டதுதான் வாழ்க்கையும் அதன் போராட்டமும்..


பொதுவாக வாழ்க்கைத்துணையின் திசையை பற்றி தெரிந்துகொள்ள விரும்புவர் என்பதை தவிர இப்பதிவில் ஜாதக அமைப்பை வைத்து ஒருவரது வாழ்க்கைதுனைவரின் அம்சங்களை கண்டுகொள்ளது பற்றி அலசியிருக்கிறேன். 


மேற்கண்ட ஜாதகத்தில் வாழ்க்கைத்துணைவரை குறிக்கும் ஏழாமிடத்தில் குரு இருக்கிறார். ஏழாமதிபதியும் களத்திர காரகனுமான சுக்கிரன் சூரியனுடன் இணைந்திருக்கிறார்.

ஜாதகரின் மனைவி அரசு வங்கியில் பணி புரிகிறார். குடும்ப பாவம் குருவினுடையதாக இருப்பதால் குடும்ப உறவில் இணையும் மனைவி குருவின் காரகங்களுள் ஒன்றான தனம் புழங்கும் துறை சார்ந்தவர் என எடுத்துக்கொள்ளலாம். ஏழாமதிபதி சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்ததால் ஜாதகரின் மனைவி அரசுப்பணியில் இருப்பார் என அனுமானிக்கலாம்.

நவாம்சம் திருமண பந்ததிற்காகவே விசேஷமாக ஆராயப்பட வேண்டும். ராசியில் 7 ஆமிடம் என்றால் நவாம்சத்தில் 9 ஆம் பாவம் கவனிக்கப்படவேண்டும். ஏனெனில் ராசியில் ஒருவருக்கு அளிக்கப்படும் பாக்கியங்களை தெளிவாக கண்டுகொள்ளவே நவாம்சம். நவாம்சம் பாக்கியஸ்தானத்தின் நீட்சி என்றால் அது மிகையல்ல. அந்தவகையில் மேற்கண்ட ஜாதகத்தில் ஒன்பதாமிடத்தில் சூரியன் நிற்பதால் வாழ்க்கைத்துணை சூரியனோடு தொடர்புடையவர். அதாவது அரசுப்பணியில் உள்ளவர் என்பதை அறுதியிட்டு காட்டுகிறது.  

இரண்டாவதாக ஒரு பெண்ணின் ஜாதகத்தை கவனியுங்கள்.


ஜல ராசியான விருச்சிகம் ஏழாமிடமாகி அதன் அதிபதி செவ்வாய் மற்றோர் ஜல ராசியான கடகத்தில் நீச நிலையில் உள்ளார். அதனை நீசமாகி வக்கிரமடைந்த ஜலக்கோளான குரு பார்வை செய்கிறார். எனவே ஜாதகிக்கு வாய்க்கும் கணவர் வெளிநாடு தொடர்புடையவர் என அனுமானிக்கலாம். செவ்வாய் நீசமும் குரு ராசியில் வலுவடைந்து நவாம்சத்தில் பலவீனமடைந்ததும்  ஜாதகிக்கு திருமணத்தில் ஏற்பட்ட தாமதத்தை குறிப்பிடுகின்றன.

நவாம்சத்தில் ஒன்பதாம் பாவத்தில் அமைந்த கேது ஒரு ஜலக்கோள் அத்துடன் ஒன்பதாம் பாவாதிபதி செவ்வாயும் வெளிநாட்டை குறிக்கும் ராகுவோடு தொடர்பில் இருப்பது கவனிக்கத்தக்கது. குடும்ப ஸ்தானமான 2 ஆமிடத்தில் ஜலக்கோள் சந்திரன் நிற்பது ஜாதகியின் குடும்ப வாழ்வு வெனிநாட்டில் என எடுத்துக்கொள்ளலாம்.

ராசியில் 7 (வாழ்க்கைத் துணை) ஆம் அதிபதியும் 12 (தாம்பத்யம் மற்றும் வெளிநாடு)  ஆம் அதிபதியுமான செவ்வாயின் திசையில் ஜாதகி திருமணம் முடிந்து வெளிநாடு சென்றார். ஜல ராசியான கடகத்தில் வெளிநாடு செல்வதை குறிக்கும் ஒன்பதாம் அதிபதி சனியின் பூசம்-3 ல் நிற்கிறார் என்பது முக்கியமாக குறிப்பிடத்தக்கது.

மூன்றாவதாக மற்றொரு பெண்மணியின் ஜாதகம்.


ஜாதகி ஒரு மருத்துவர்.

ஜீவனத்தை குறிக்கும் 1௦ ஆமதிபதி புதன் சூரியன் மற்றும் செவ்வாயுடன் 9ல் கூடியுள்ளது. இம்மூன்றும் மருத்துவத்துடன் தொடர்புடைய கிரகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தன, குடும்ப பாவாதிபதியும் ஜீவன காரகனுமான சனி 7ல் மருத்துவ கிரகமான புதன் வீட்டில் நின்றது ஜாதகியின் ஜீவனம் மருத்துவம் மூலம் ஏற்படும் என்பதோடு குடும்பத்திற்கு வரும் கணவனும் மருத்துவனே என்பதை குறிப்பிடுகிறது.

ராசியில் ஏழாமதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் செவ்வாயுடன் சேர்ந்ததும் கணவரும் மருத்துவர் என்பதை உறுதி செய்கிறது. புதன், சூரியன், செவ்வாய் மூன்றும் மருத்துவத்தோடு தொடர்புடைய கிரகங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஜாதகியின் கணவர் புகழ் பெற்ற மருத்துவர்.

நவாம்சத்தில் லக்னத்திலேயே மருத்துவக கிரகங்களுள் ஒன்றான செவ்வாய் நின்று ஒன்பதாம் பாவாதிபதியும் ஒளஷத காரகன் எனப்படும் புதனாகி தன்வந்திரி எனப்படும் பிரதான மருத்துவ கிரகமான சூரியனுடன் இணைந்து 7 ல் நின்றது ஜாதகியின் கணவர் மருத்துவர் என்பதை தெளிவாக்குகிறது.

விரைவில் மற்றொரு பதிவில் சிந்திப்போம்,

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி எண்: 7871244501

Sunday 4 June 2017

கிரகங்களின் உச்சநிலை வக்கிரம் & நீசநிலை வக்கிரம் – செயல்பாடு எப்படி?

கிரகங்களில் சூரிய - சந்திரர்கள் மற்றும் நிழல் கிரகங்களான ராகு-கேதுக்கள் ஆகியவை தவிர ஏனைய அனைத்து கிரகங்களுக்கும் வக்கிர மற்றும் அதிசார இயக்கங்கள் உண்டு.

பூமி தனது சஞ்சாச விதிகளின்படி குறிப்பிட்ட கிரகங்களை முந்திச் செல்கையில் குறிப்பிட்ட அக்கிரகங்களுக்கும் பூமிக்குமிடையேயான ஈர்ப்பு விசையில் ஏற்படும் மாறுதலான தோற்ற நிலையே வக்கிரம் எனப்படும்.

இத்தகைய நிலையில் கிரகங்கள்  தாங்கள் நிலைகொண்டுள்ள பாகைக்கு முன்னதாக இருப்பதுபோன்ற நிலைக்கு அதிசாரம் என்றும் பின்னதாக இருப்பது போன்ற நிலைக்கு வக்கிரம் என்றும் பெயர்.
    
வக்கிர அதிசார நிலையை அடையும் கிரகம் பொதுவாக அதன் சுபாவ தன்மைகளை இழந்ததாக கருதப்பட வேண்டும். எனவே ஜனன ஜாதகத்தில் சுபக்கிரகங்கள் வக்ரமடைந்திருக்கக்கூடாது. அப்படி ஜனன ஜாதகத்தில் வக்கிரமடைந்த சுப கிரகங்கள் கோட்சாரத்தில் வக்ரமடைந்தால் கெடு பலன்களை அதிகம் தரும்.

பாவ கிரகங்கள் இதற்கு எதிர்மறை. ஜனன ஜாதகத்தில் வக்கிரமடைந்த பாவ கிரகம் கோட்சாரத்தில் வக்ரமடைந்தால் நல்ல பலன்களையே தர முற்படும்.

கீழே உதாரண ஜாதகம்


உச்சனுடன் கூடும் நீசன் நீச பங்கமடைய வேண்டும் என்பது ஜோதிட விதி. 6 ஆமதிபதி சனி  உச்சமடைந்த 12 ஆமதிபதி சூரியனுடன் 8 ஆமிடத்தில் கூடியது ஒருவகையில் விபரீத ராஜ யோகமே. 6 ஆமதிபதி சனி அஸ்தங்கமடைந்ததும் பெரிய பாதகமில்லை. உண்மையில் ஜீவனகாரகன் இப்படி சூரியனுடனும் வித்யகாரகனான லக்னாதிபதி புதனுடன் கூடியதால் ஜாதகருக்கு அரசுப்பள்ளி ஆசிரியராக பணி வாய்த்தது.  

ஆனால் தன காரகன் குரு வக்ர நிலையில் லக்னத்தில் அமைந்துள்ளார். பாதகாதிபதி லக்னத்தில் அமைவது பாதகாதிபதியின் காரகங்கள் சார்ந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது ஜோதிட விதி. தன ஸ்தானாதிபதி சுக்கிரன் உச்ச நிலையை அடைந்து வக்ரமாகிவிட்டது. உச்சமடைந்து வக்கிரமான கிரகம் நீச பலனையே தரவேண்டும். எனவே இந்த ஜாதகருக்கு பொருளாதாரம் சார்ந்த வகையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதை அறிய முடிகிறது.

ஜாதகர் சனி திசையில் ஏறக்குறைய 22 லட்சத்திற்கும் அதிகமான அளவில் கடும் பொருளாதார இழப்பை சந்தித்தார்.

கீழ மற்றொரு பெண்மணியின் ஜாதகம்


ஜாதகிக்கு புத்திர பாக்யத்தை தரவேண்டிய குரு ஆறில் மறைவு.

நீசமடைந்து வக்கிரமடைந்த கிரகம் உச்சபலனை தரும் என்ற விதிப்படி குரு 6 ஆமிடத்தில் வலு குறையவில்லை. மேலும் குரு அமைந்த பாவாதிபதி சனி உச்சமடைந்துவிட்டதால் குருவும் உச்சமாக உள்ளதாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.  இந்த ஜாதகத்தில் குரு 6 ல் மறைந்த தோஷம் ஜாதகிக்கு புத்திர பாக்கியம் அமைய தடைகளை மட்டுமே ஏற்படுத்தவேண்டும்.

பொதுவாக உச்சமடைந்த கிரகங்கள் சந்தோஷமான மனநிலையில் இருக்கும். எனவே குரு சனி வீட்டில் 6 ல் அமைந்து வலுவடைந்ததால்  சனியின் இயல்புப்படி தாமதமாக புத்திர பாக்கியம் அமையும்.

ஜாதகியின் ராசிக்கு 1௦ ஆமிடத்தில் குருவும் ராசியிலேயே சனியும் உச்சமடைந்த காலத்தில் ஜாதகியின் 29 ஆவது வயதில் பெண் குழந்தை பிறந்தது.  

மீண்டுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்

அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி எண்: 7871244501.