Wednesday 27 March 2019

அஞ்சல் வழிக்கல்விக்கான ஜாதக அமைப்பு.


கல்வி என்பது மனிதனுக்கு கண்களைப் போன்றது. கல்வியில்லாதவன் கண்ணில்லாதவன் என்பது அன்றோர் வாக்கு. சூழ்நிலை சந்தர்பங்களாலும் பொருளாதார சூழ்நிலையின் பொருட்டும் பள்ளிப்படிபோடு கல்வியை விட்டவர்களும் வாழ்வில் நல்ல சூழ்நிலைக்கு வந்த பிறகு கற்காமல் விட்ட காலங்களை நினைத்து ஏங்குவர். அத்தகையோர் தனிப்பட்ட விருப்பங்களின் பேரில் புத்தகங்களை தேடிச் சென்று தங்களது அறிவு தாகத்திற்கு வழி செய்துகொள்கின்றனர்.



சிலர் சமூக அந்தஸ்திற்காகவும் தொழில் சூழ்நிலைகளின் பொருட்டும் அஞ்சல் வழியில் பயின்று தங்களக்கான தகுதியை பட்டங்களின் மூலம் வெளிக்கட்டிக்கொள்கின்றனர். கௌரவ டாக்டர் பட்டங்களை பணம்கொடுத்துப் பெற்று பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி மக்கள் நம்புவதாக தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்பவர்கள் அரசியல்வாதிகள். இதில் திருமணதிற்காக சொல்லப்படும் பொய்யை மெய்ப்பிக்க திருமணப் பத்திரிகையில் பட்டங்களை போட்டுவிட்டு திருமணம் செய்பவர்கள் ஒருவகை. இவர்களை எதிர்கால அரசியல்வாதிகள் எனலாம். அடைப்புக்குறிக்குள் பட்டங்களை அடக்கிவிட்டு மற்றையோரை அடக்க நினைப்போர் ஒருவகை.  

இப்பதிவில் நாம் உயர்கல்வியில் தடைகளை சந்திக்கும்போது அஞ்சல்வழியில் அதை தொடர சாதகமான ஜாதக அமைப்புகளை அலசவிருக்கிறோம்.

கீழே நீங்கள் காண்பது ஒரு ஆணின் ஜாதகம்.


17.09.1977  இரவு 7.24 மணி.

மீன லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி குரு வித்யா ஸ்தானமான ஆமிடத்தில் 2 மற்றும் ஒன்பதாமதிபதி செவ்வாயோடு அமைந்துள்ளார். இதனால் வித்யா ஸ்தானம் பலம் பெறுகிறது. ஆனால் குருவும் செவ்வாயும் தர்ம கர்மாதிபதிகள் என்பதையும் தொழிலுக்கு இது சாதகமான அமைப்பு என்ற ஒரு கோணமும் உள்ளதை கவனிக்க வேண்டும். ஜாதகருக்கு லக்னாதிபதி குருவின் நட்சத்திரமே முதல் திசையாக வந்தது பால்ய வயது யோகமாக இருந்துள்ளதை குறிப்பிடுகிறது.

ஜாதகரின் 10 ஆவது வயதில் சனி திசை ஆரம்பித்துள்ளது. சனி தனது பகை வீட்டில் லக்ன பாதகாதிபதியுடன் இணைந்து வித்யா ஸ்தானமான 4 க்கு விரையாதிபதியும் உயர்கல்வியை குறிப்பிடும் ஸ்தானமான 9 க்கு விரையமான ஆமதிபதியுமான சுக்கிரனுடன் இணைந்து வித்யா காரகனான புதனின் மூலத்திரிகோண வீட்டிற்கும் லக்னத்திற்கு 6 லும் அமைந்து திசை நடந்துவது கல்விக்கு சிறப்பான அமைப்பு என கூறுவதற்கில்லை. திசா நாதனுக்கு வீடு கொடுத்த சூரியன் பாதக ஸ்தானத்தில் பாதகாதிபதியுடன் பரிவர்த்தனை பெற்ற நிலையில் உள்ளது. இது  சூரியன் நிற்கும் பாவ அடிப்படையில் கல்வியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதை குறிப்பிடுகிறது. பரிவர்த்தனை அமைப்பு கோட்சாரத்தில் பலனளிக்கும் திசா புக்தியில் கிரகங்கள் தாங்கள் நின்ற இட பலனையே செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சனி கேது சாரம் பெற்று கேது லக்னத்தில் புதனின் சாரத்தில் நிற்பது சனி திசையில் பாதிப்பு கல்வியில்தான் ஏற்படும் என்பதை இது குறிப்பிடுகிறது.

எப்போது கல்வியில் பாதிப்பு ஏற்படும் என்பதை புதிகார கிரகங்களும் கோட்சாரமும் சுட்டிக்காட்டும். ஜாதகர் சனி திசை சுக்கிர புக்தியில் 1994ம் முற்பகுதியில் ஜாதகர் 12 ஆம் வகுப்பை முடித்தார். அதன்பிறகு ராசியின் மீது ராகுவோடு இணைந்து லக்னாதிபதி குரு லக்னத்திற்கு 8 ல் உயர்கல்வியை குறிக்கும் 9 ஆமிடதிற்கு விரையத்தில் நின்றபோது ஜாதகரின் உயர் கல்வி தடைபட்டது. சனி திசையில் சுக்கிர புக்தியில் பாதக ஸ்தானத்தில் நின்ற சூரியனின் அந்தரத்தில் கல்விக்கு சூரியன் மூலம் தடை ஏற்பட்டது. ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட ஜாதகரின் தந்தை ஒரு ஜோதிடரிடம் ஜாதகத்தை காண்பிக்க அவர் ஜாதகருக்கு உயர்கல்வியை தொடரும் அமைப்பு இல்லை என்று கூற ஜாதகரை தான் நடத்தும் மளிகை கடையை கவனிக்குமாறு பணித்தார். கவனிக்க - புதன் ஜோதிடர், கல்வி, வியாபாரம் இவைகளை குறிக்கும். சுக்கிர புக்தியில் 9 க்கு விரையத்தில் நின்ற சந்திரனின் அந்தரத்திலும் தடை தொடர்ந்தது. கவனிக்க ஜாதகருக்கு யோகியாக குருவும் அவயோகியாக சூரியனும் ஜாதகத்தில் அமைந்துள்ளனர்.

கல்வி தடைபட்ட பிறகு கோட்சார குரு லக்னத்திற்கு 9 ல் சனியின் அனுஷம் நட்சத்திரத்தில் செல்லும்போது கல்வியை தொடர பள்ளி நண்பர் உந்துதலாக இருந்தார். அதனால் ஜாதகர் அஞ்சல் வழியில் இளநிலை தமிழ் பட்டப்படிப்பில் 1996 ஆம் ஆண்டு சேர்ந்தார். அஞ்சல் வழி தொடர்புகளை குறிக்கும் 3 ஆம் இடாதிபதி சுக்கிரனின் புக்தியில் அஞ்சல் வழி தொடர்புகளை குறிக்கும் புதனின் அந்தரத்தில் ஜாதகர் கல்வியை அஞ்சல் வழியில் தொடர்ந்தது கவனிக்கத்தக்கது. பாவ சக்கரத்தில் சனியும் சுக்கிரனும் ஐந்தாமிட தொடர்பு கொண்டதும் ஜாதகருக்கு சுக்கிரன் தனது புக்தியில் உதவியுள்ளது தெரிகிறது. புதனும் 7 ஆமிடமும் நண்பனை குறிக்கும். தொடர்ந்து ஜாதகர் அஞ்சல் வழியிலேயே முதுநிலை தமிழ் பட்டத்தையும் படித்து முடித்தார். 2005 ஆம் ஆண்டு டிசம்பரில்  ஜாதகர் சனி திசையில் லக்னாதிபதி குரு புக்தியில் M Phil பட்டம் பெற்றார்.   

ஜாதகர் 2009 ஜூனில் லக்னத்திற்கு 6 ல் நின்ற புதன் திசை அதே ஆறாமிடத்தில் நின்ற சுக்கிர புக்தியில் தனியார் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். புதன் திசையில் இட மாற்றத்தை குறிக்கும் சந்திரனின் புக்தியில் 2013 ல் ஜாதகர்  வேறொரு கல்லூரிக்கு மாறினார். அங்கு ஜாதகருக்கு முனைவர் பட்டம் ஏற்பட்ட வாய்ப்பை சரியாகப்  பயன்படுத்தினார். 2017 ல் ராகு புக்தியில் ஜாதகர் தமிழில் சங்க இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 201ல் புதன் திசை செவ்வாய் புக்தியில் NET தேர்வில் வெற்றி பெற்றார். பாதகாதிபதியின் வீடுகளான மிதுனமும் கன்னியும் ஜாதகருக்கு திதி சூன்ய வீடுகளானது கவனிக்கத்தக்கது. மேலும் திசா நாதன் புதனின் நிலையால் ஜாதகர் அக்கு பங்சர் மருத்துவமும் பயின்று மருத்துவம் பார்த்து வருகிறார். கல்லூரி சென்று பயிலாத ஜாதகர் கடந்த 10 ஆண்டுகளாக கல்லூரிப் பேராசிரியராக பணிபுரிகிறார் என்றால் அது ஜாதகரின் முயற்சியால் மட்டுமின்றி கிரகங்களின் ஆசீர்வாதத்தால் என்றால்  மிகையல்ல.

எனவே அஞ்சல் வழிக்கல்விக்கு 3 ஆம் பாவமும், தூது மற்றும் அஞ்சல்  போன்றவற்றிற்கு  காரகன் புதனும் சாதகமாக இருப்பது அவசியம் என்பது புலனாகிறது.

லக்னப்புள்ளியும்,  லக்னத்தில் அமைந்த கேதுவும் புதன் சாரம் பெற்றதனாலும் லக்னாதிபதி புதன் வீட்டில் அமைந்து ராகு சாரம் பெற்று அந்த ராகுவும் மலைப்பகுதியை குறிக்கும் சூரியனோடு தொடர்பு கொண்டு புதன் வீட்டில் அமைந்து லக்னத்தை பார்வையிடுவதால் ஜாதகரின் பெயர் மலைமீது இருக்கும் பெருமாளின் பெயராகும்.

ஜாதகத்தில் இரண்டாமிடம் தாய் மொழிக் கல்வியையும் செவ்வாயின் அதிதேவதையான முருகக் கடவுளை தமிழின் வடிவமாகவே தமிழர்களாகிய நாம் வணங்குகிறோம் என்பதையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஜாதகத்தில் உள்ள குரு - மங்கள யோகம் மிகச் சிறப்பான பலனை ஜாதகருக்கு வணங்கியுள்ளது என்றால் அது மிகையல்ல. செவ்வாய் நான்கில் அமைந்து தொடர்புகள் ஸ்தானமான 7 ஆமிடத்தை நான்காம் பார்வையாக பார்ப்பதால் ஜாதகரின் தொடர்புகளில் செவ்வாய் முன்னிலை வகிக்கிறது. மேலும் செவ்வாய் குருவை விட அதிக பாகை பெற்று நின்றதால் இந்த ஜாதகரை வழிநடத்துவதில் முன்னிலை வகிக்கிறது.

எவ்வாறெனில் 
   
ஜாதகரை அஞ்சல் வழிக்கல்வியில் படிப்பை தொடர உந்துதலாக இருந்த பள்ளித் தோழனின் பெயர் முருகநாத பூபதி.

ஜாதகர் முதுநிலை பட்டப்படிப்பில் தமிழை விடுத்து வேறு பாடம் எடுக்க முயன்றபோது அவரது முதுநிலையிலும் தமிழையே எடுத்து படிக்குமாறு தூண்டிய நண்பரின் பெயர் சரவணன்.

ஜாதகருக்கு சுக்கிரனின் சாரம் பெற்ற 7 ஆமதிபதி புதன் திசை துவங்கிய 2 ஆவது மாதமே 2006 ல் திருமணத்தை நடதிவைதுள்ளது. மாமனாரின் பெயர் ஆறுமுகம்.

2008ல் ஜாதகரது திருமண மோதிரம் தொலைந்துவிட்ட அதை கண்டுபிடித்துக் கொடுத்த ஜாதகரின் கடை ஊழியரின் பெயர் தங்கவேல்.

முதலில் சேர்ந்த கல்லூரியில் ஜாதகரின் திறமையை பரிசோதித்து வேலை கொடுத்த  முதல்வரின் பெயர் சிங்காரவேலன்.

ஜாதகரிடன் வேலைக்கான உத்திரவாத கடிதத்தை வழங்கிய நபரின் பெயர் சரவணகுமார்.

ஜாதகரை முதன் முதலில் பாடம் எடுக்க வகுப்பிற்கு அழைத்துச் சென்ற நபரின் பெயர் சிவசுப்பிரமணியன்.

2013 ல் பணிமாறிச் சென்று சேர்ந்த கல்லூரியின் முதல்வர் பெயர் பாலமுருகன்.

 2015 ல் புதிதாய் கட்டிய வீடு உள்ள பகுதி மந்திரகிரி நகர் எனும் முருகனின் பெயர்கொண்டது.

அந்த வீட்டிற்கு தச்சு வேலை செய்த நபரின் பெயர் சக்திவேல்.

வீட்டை கட்டிக்கொடுத்த பொறியாளரின் பெயர் மந்திராசலம் என்ற முருகனின் பெயர்.

வீட்டில் மின்சார வேலை மற்றும் நீர் குழாய் அமைத்துத்தந்த நபரின் பெயர் கார்த்திகேயன்.

ஜாதகர் அக்குபஞ்சர் மருத்துவமனை நடத்த இடன் கொடுத்து உதவிய இடத்தின் உரிமையாளர் மந்த்ராசலம் என்ற முருகனின் பெயர்.

அந்த மருத்துவமனையில் ஜாதகரிடன் மருத்துவம் பார்க்க வந்த முதல் நோயாளியின் பெயர் ஆறுமுகம்.


இந்த ஜாதகத்தை ஆய்வு செய்து உங்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கும் ஜோதிடரான அடியேனது பெயர் பழனியப்பன்.

கிரகங்கள் எப்படி நம் வாழ்வில் பங்காற்றுகின்றன என்பதை இது போன்ற ஜாதகங்களை ஆராயும்போது பிரம்மிப்பாக இருக்கிறது. இந்த ஜாதகத்தை மேலும் சில கோணங்களில் ஆராயும்போது இன்னும் சில ஆச்சரியங்களை காண்கிறேன். பதிவின் நீலம் கருதி இத்துடன் முடிக்கிறேன். 

ஜோதிட ஆர்வலர்களுக்காக - ஜாதகம் K.P அயனாம்சம் கொண்டு ஆராயப்பட்டுள்ளது.  

விரைவில் மீண்டுமொரு பதிவில் சந்திக்கிறேன்,
அதுவரை,
வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 07871244501

Tuesday 19 March 2019

குழந்தைப்பேறு


குழந்தைப்பேறு என்பது இன்றைய காலத்தில் காலம் அளிக்கும் வரம் என்றால் அது மிகையல்ல. திருமணம் நடந்து ஒரு வருஷ காலத்தில் குழந்தை பிறந்துவிட்டால் அந்தக் குடும்பம் பாக்கியம் பெற்ற குடும்பம்.பொருளாதாரத்தால் சிரமப்படும் குடும்பங்கள் கூட திருமணமான அடுத்த வருடத்தில் குருவின் அம்சமான குழந்தை பிறத்துவிட்டால் அந்தக்குடும்பத்துக்கு குருவருள் இருப்பதாக ஐதீகம். குரு துணை இருந்தால் எத்தகைய சிரமங்களையும் எளிதில் கடந்துவிடலாம். அப்படி ஒருவருடத்தில் குழந்தை பிறக்கும் குடும்பங்களில் மணமுறிவு என்பது சில ஆண்டுகள் கழித்து பிறக்கும் குடும்பங்களை விட மிகக்குறைவே. இதை ஒப்பிட்டுப்பார்த்து உணர்ந்துகொள்ளலாம். பொருளாதார காரணங்களுக்காக குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் குடும்பங்கள் பொருளாதாரத்தில் மேன்மை அடைகிறதோ இல்லையோ அத்தகைய குடும்பங்களில் பிரிவினை அதிகம். குழந்தை பிறப்பும் சிக்களுக்கு உள்ளாகிறது. எனவே எக்காரணம் கொண்டும் குழந்தை பிறப்பை அதிலும் குறிப்பாக முதல் குழந்தையை திட்டமிடவே கூடாது.



மேற்கண்ட கூற்றை கடந்த காலத்தில் சென்று பார்க்கவேண்டுமெனில் குழந்தை பிறப்பை கட்டுப்படுத்தும் முறைகள் அறிமுகமான 80 களுக்கு முந்தைய கால மக்களின் குடும்ப உறவு நிலையையும் தற்போதைய காலத்தில் சாதாரணமாகிவிட்ட மணமுறிவு நிலைகளையும்  ஒப்பிட்டுப்  பார்த்தாலே இக்கருத்தின் உண்மை புரிந்துவிடும். பொதுவாக குரு வலிமை குன்றியிருந்தால் பொருளாதாரத்திலோ அல்லது குழந்தை பாக்யத்திலோ  சிரமப்படுத்தும். நாம் பொருளாதார சிரமங்களை கர்ம வினை என்று எடுத்துக்கொண்டு குழந்தைப்பேறை தள்ளிப்போடாமலிருந்தால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும். கவனம் “பொருளைவிட பாக்கியம் முக்கியம்”.

கீழ்க்கண்ட ஜாதகம் ஒரு பெண்மணியுடையது.


மகர லக்ன ஜாதகத்தில் ஐந்தாமிடத்தில் கேதுவுடேன் வக்ரமாகிவிட்ட ஆறாமதிபதி புதன் இணைந்து அந்த பாவத்தை தோஷப்படுதுகிறார்.  சுரப்பிகளை குறிக்கும் ஐந்தாமதிபதியான சுக்கிரன் கடகத்தில் நின்று அவருக்கு இடம் கொடுத்த சந்திரனும் கர்ப்பப்பையை குறிக்கும் சந்திரன் கர்ப்பப்பையை குறிக்கும் 8 ஆவது பாவத்தில் அமைந்துவிட்டது ஜாதகிக்கு கர்ப்பப்பை மற்றும் சுரப்பி வகை பாதிப்புகள் உள்ளதை குறிப்பிடுகிறது. இந்த நிலையில் அஷ்டமத்தில் அமர்ந்துவிட்ட சந்திரனை அஷ்டமாதிபதியோடு இணைந்த லக்னாதிபதி சனி பார்ப்பது கர்ப்பப்பை வகை தோஷத்தை அதிகப்படுத்தும் எனலாம். பொதுவாக சனியோடு சூரியன் இணைவே ஜீவ அணுக்களின் செயல்பாட்டை குறைத்துவிடும் என்பது கவனிக்கத்தக்கது.

மேற்கண்ட அமைப்பில் ஐந்தாமதிபதியை புத்திர காரகன் குரு பார்ப்பது ஒரு நல்ல அம்சம். எனினும் அவர் பாதகாதிபதியோடு இணைந்த நிலையில் ஐந்தாமாதியை பார்பதாலும் ரத்த திசுக்களுக்கு காரகன் செவ்வாயுடன் கொழுப்பு காரகன் குரு இணைந்தாலும் இரத்தத்தில் கொழுப்பு அதிகமாகி அதன் பொருட்டு குழந்தை பிறப்பை தடை செய்யும் என்பதை அனுமானிக்கலாம். குருவுக்கு விரையாதிபத்தியமும் உள்ளதாலும் அவர் பாதகாதிபதியோடு சேர்ந்திருப்பதாலும்  இந்த ஜாதகிக்கு புத்திர பேறுக்கான வாய்ப்பு குறைவே. மேலும் செவ்வாய் கணவனை குறிக்கும் கிரகம் என்பதாலும் 7 ஆமதிபதி சந்திரன் 8 ல் மறைந்து விரையாதிபதி குருவோடு இணைந்த பாதகாதிபதி செவ்வாயின் பார்வை பெற்ற சனி 7 ஆமதிபதி சந்திரனை பார்ப்பதும் கணவன் வகையியிலும் இரத்த வகையில் உள்ள பாரம்பரிய பாதிப்பால் குழந்தை பேறு வாய்ப்பு குறைவே என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. 7 ஆமிடத்தை கணவனாகக்கொண்டு ஆராய்ந்தால் குழந்தை பிறப்பு மற்று குடும்பத்திற்கு குழந்தையின் வரவை குறிப்பிடும் 7 க்கு 5 ஆமிடமான 11 ம்,  7 க்கு 2 ஆமிடமான 8 ம் குழந்தை பிறப்பிற்கு சாதகமான நிலையில் இல்லை. ஆனால் குருவின் பார்வை 7 க்கும் 11 க்கும் உள்ளது மட்டுமே இங்கு ஒரு ஆறுதலான நல்ல விஷயம்.

ஆனால் இங்கு குருவே பாதகாதிபதி தொடர்பு பெற்ற நிலையில் அது எந்த அளவுக்கு உதவும் என்பதே கேள்வி. பாவகத்தில் ராசிக்கு 10 ல் திக்பலம் பெற்ற சூரியன் இருப்பது ராசி ஓராளவு வலுவோடு இருப்பதை குறிப்பிடுகிறது. மேலும் ஜாதகி தன முயற்சியால் சில பாக்கியங்களை அடையலாம் என்பதை அது குறிக்கிறது. ஜாதகிக்கு லக்னத்திற்கு 7 ல் நிற்கும் சுக்கிரனின் சாரம் பெற்ற சந்திரனின் திசையில் குரு புக்தியில் 1997 ல் திருமணம் நடந்தது. அதன்பிறகு குரு தொடர்புகொண்ட செவ்வாய் திசை 2011 ஏப்ரல் வரை உள்ளது.

ஜாதகி என்னிடம் செவ்வாய் திசையில் புதன் புக்தியில்  ஜாதகம் பார்க்க வந்தார். செவ்வாய் பாதகாதிபதி என்றாலும் அவர் பாதகத்தில் குருவோடு கூடி 5 ல் அமைந்த தனது எதிரியும் 6 ஆமதியுமான புதனின் சாரம் பெற்றுள்ளார். இவ்விடத்தில்தான் ஜோதிடர்கள் ஜாதகிக்கு குழந்தை உண்டா இல்லையா என்பதை தீர்க்கமாக ஆராய்ந்து சொல்ல வேண்டும். இந்த ஜாதகத்தில் திசா நாதன் செவ்வாயையும் கோட்சார நிலைகளையும் கவனிக்க வேண்டும்.  செவ்வாய்க்கு விரையாதிபதி தொடர்பு சிறப்புல்லை என்றாலும் குருவோடு இணைந்த கிரகமும் குரு பார்த்த கிரகமும் சுபத்தன்மை அடையும் என்ற விதியையும் கவனிக்க வேண்டும். அதற்கு ஆட்சி வீட்டில் அமைந்த குரு உதவுவது நன்மையே என்றாலும் குரு+செவ்வாய்க்கு திரிகோணத்தில் ராகு இருப்பதால் இயற்கையாக இல்லாமல் செயற்கையாகவும் வழிபாடுகள் மூலமாகவும் புத்திர பாக்கியதிற்கான  வாய்ப்பை அதிகமாக முயற்சியின் பேரில் மேற்கொள்ள வேண்டும். பரிகாரங்கள் எந்த அளவு பலனளிக்கும் என்பதை ஒரு ஜோதிடர் எடைபோட்டு வைத்திருப்பது தேர்ந்த ஒரு ஜோதிடருக்கு மிக அவசியம். அதற்கு அனுபவமும் தேர்ந்த ஜோதிட அறிவும் கைகொடுக்கும்.

இந்த ஜாதகத்தில் குரு ஆட்சியில் இருந்தாலும் பாகை அடிப்படையில் பார்த்தால் திசா நாதன் செவ்வாயின் பாகை 25.24 , குருவின் பாகை 25.55  மற்றும் 6 ஆம் பாவத்தில் அமைந்த லக்னாதிபதி சனியின் பாகை 25.14 ஆகும். இதனால் பாகை அடிப்படையில் நெருக்கமாக அமைந்திருக்கும் இம்மூன்று கிரகங்களும் ஒருங்கிணைந்து செயல்படும் எனலாம். இதில் குரு மற்ற இருவரை விட அதிக பாகை சென்றுள்ளது மற்ற இருவரை விட வலிமையானவர் என்பதையும் தனது சுபாவ சுபத்துவத்தை பாகை அடிப்படையில் தன்னோடு நெருங்கியுள்ள திசா நாதன் செவ்வாய்க்கு வழங்குவார் எனலாம். குரு இப்படி செவ்வாயைவிட அதிக பாகை சென்றுள்ளதால் செவ்வாயின் பாதகாதிபத்திய தோஷத்தின் தீவிரத்தை பெருமளவு குறைத்துவிடுவார் எனலாம்.

இப்படி குருவால் சுபத்துவம் பெற்ற திசா  நாதன் செவ்வாய் புத்திர பாக்கியத்தை தரவேண்டியவராகிறார். குரு+செவ்வாய்க்கு திரிகோணத்தில் ராகு இருப்பதால் முதலில் வழிபாடுகளையும் அதோடு மருத்துவத்தின் உதவியோடு செயற்கை முறைகளிலும் முயற்சிகளை மேற்கொள்ள தம்பதிகள் இருவருக்கும் பரிந்துரை வழங்கப்பட்டது.

3 ஆம் பாவம் செயற்கை முறை கருத்தரிப்பை குறிக்கும் பாவமாகும். 3 ம் பாவம் 5 ஆவது பாவத்திற்கு லாப பாவமாக வருவதால் 3 ஆம் பாவம் சாதகமாக இருந்து லக்னத்திற்கு 2, 3, 5, 11 தொடர்புடைய திசா புக்திகளில் புத்திர பேருக்கு சிறந்த வாய்ப்பு ஏற்படும். இதில் செயற்கை முறை கருத்தரிப்பு எனில் 3 ஆவது பாவ தொடர்புகளை ஒரு ஜோதிடர் கவனமாக கவனிக்க வேண்டும். 3 ஆவது பாவம் சிறப்புற்று செயற்கை முறை கருதரிப்பிற்கு உரிய ராகுவானவர் குரு தொடர்போ அல்லது குருவிற்கு திரிகோணத்திலோ அமைந்திருந்து கோட்சாரத்திலும் அத்தகைய குரு-ராகு தொடர்பு ஏற்பட்டால் செயற்கை முறை கருதரிப்பிற்கு பரிந்துரை செய்யலாம். அப்படி அமையாவிட்டால் செயற்கை முறை கருத்தரிப்பு முயற்சி பலனற்றதாகிவிடும் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. இன்றைக்கு செயற்கை முறை கருத்தரிப்பிற்கு சில லட்சங்கள் செலவாகிறது என்பதை கவனிக்கவும். ஜோதிடர்கள் இதை சரியாக எடைபோடாவிட்டால் குழந்தைக்காக சொத்தை விற்று முயற்சி செய்யும் தம்பதிகளின் நிலை மேலும் பரிதாபத்திற்கு உள்ளாகிவிடும் என்பதை கவனித்து பலன் சொல்ல வேண்டும். 

ஜாதகிக்கு  குருவால் சுபம் பெற்ற செவ்வாய் திசையில் ஐந்தாமதிபதி சுக்கிரனின் புக்தியில் ஐந்தில் நின்ற புதனின் அந்தரத்தில் கோட்சார குரு லக்னத்திற்கு இரண்டில் கும்பத்தில் தனது சுய சாரமான பூரட்டாதியில் நின்றபோது திருமணமாகி 12 ஆண்டுகளுக்குப்பிறகு செயற்கை கருத்தரிப்பு முறையில் ஆண் மகவு பிறந்தது.

ஐந்தாவது பாவகப்புள்ளி சந்திரனாகி அது சூரியனின் வீட்டில் நிற்பதாலும் குரு ஆறாமதிபதி புதன் சாரம் பெற்று புதன் சந்திரனின் நட்சத்திரத்தில் நிற்பதும் பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் பாரம்பரிய வியாதியை கொண்டு பிறக்கும் என்பதை குறிக்கிறது. தந்தைக்கு சர்க்கரை வியாதி உண்டு. இந்நிலையில் செயற்கை முறையில் பிறக்கும் குழந்தைக்கு தந்தை காரணமாக இல்லாவிட்டால் குழந்தைக்கு இவ்வமைப்பை சொல்ல வேண்டியதில்லை.

மேற்படி ஜாதகம் K.P முறையில் ஆய்வு செய்யப்பட்டது. 

அடுத்த பதிவு

யோகமும் தோஷமும் இரட்டை பிறவிகளா?

அதுவரை

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்,
கைபேசி: 07871244501

Tuesday 5 March 2019

பாவகப் புள்ளி ஆச்சரியங்கள்?


ஜாதகத்தில் ஒரு பாவக பலனை அல்லது ஒரு கிரகம் செயல்படுவதை நிர்ணயிக்க பல்வேறு யுக்திகள் ஜோதிட அறிஞர்களால் பயன்படுத்தப்படுகின்றன. அதில் ஒவ்வொரு முறையும் ஒரு தனிச்சிறப்பைக் கொண்டிருக்கும். ஜாதக பலன்களை நிர்ணயிப்பதற்கு பல்வேறு முறைகளில் ஆராய்ந்து அவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக  தெரியும் சூழலில் ஜோதிடர் திகைத்து நிற்பதும் உண்டு. பெரும்பாலான ஜோதிடர்கள் கையாள்வது திசா புக்தி நிலையோடு கோட்சாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து பலன் சொல்வதுதான். ஜாதகம் காட்டும் சூழலில் ஜாதகர் தோற்றம் அமைப்பு, வேலை போன்றவைகளை உறுதி செய்துகொண்டு ஜோதிடர்கள் பலன் கூறுவர். இதிலும் ஒரு சிக்கல் உண்டு ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டிருக்காவிட்டாலும் ஜனன நேரம் தவறுதலாக குறிக்கப்பட்டிருந்தாலும் பலன் கூற முடியாத சூழலில் நாடி முறைகளை அனுசரித்து பலன் கூறுவது ஒரு முறை.



இப்பதிவில் நாம் பல்வேறு ஜாதக அலசல் யுக்திகளில் ஒன்றான ஒரு பாவகத்தின் துவக்கப்புள்ளி அமைந்த நட்சத்திர நாதனைக்கொண்டு அந்த பாவகத்தின் பலனை அலசும் முறை பற்றி காண இருக்கிறோம். K.P முறையில் உப நட்சத்திரத்தை கொண்டு பாவகப் புள்ளியை வைத்து பலன் நிர்ணயிப்பவர்கள் “சார ஜோதிடம்” என்று இம்முறையை அழைக்கிறார்கள்.  நாம் இங்கு K.P உப நட்சத்திர முறையை தவிர்த்து பாரம்பரிய முறையில் அதாவது பாவகப்புள்ளி விழுந்த நட்சத்திர நாதனைகொண்டு  பலன் நிர்ணயிக்கும் முறையை காண்போம்.



மேற்கண்ட ஜாதகர் ஒரு ஆண். இவருக்கு லக்னம் மகரத்தில் 12.21 பாகையில் திருவோணம் முதல் பாதத்தில் அமைந்துள்ளத்து. இவரது ஜீவன கர்மா என்னவென்று பார்ப்போம். இவருக்கு 10 ஆவது பாவகம் துலாமின் தொடக்கப்புள்ளி ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் அமைகிறது. ராகு கடக ராசியில் அமைந்துள்ளார். ஜாதகர் கடல் கடந்த தொடர்பில் ஜீவனம் செய்கிறார் என்பதை இது குறிக்கிறது. ராகு புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் அமைந்துள்ளதால் ஜாதகர் புதன் குறிக்கும் தகவல் தொழில் நுட்பவியலாளராக பணிபுரிவதை இது குறிப்பிடும். சனியின் நிலையை கொண்டும் இதை அனுமானிக்கலாம் என்றாலும் இம்முறையால் சனியை தொடர்புபடுத்தி உறுதி செய்துகொள்ளலாம்.

இரண்டாவதாக கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.


லக்னம் 23 பாகையில் ஆயில்ய நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. எனவே இரண்டாவது பாவகப்புள்ளி சிம்மத்தில் 23 பாகை லக்ன பாதகாதிபதியான சுக்கிரனின் பூரத்தில்  அமையும். 2 ஆமிடத்தில் பிரிவினையை குறிப்பிடும் கேது அமைந்து விரையாதிபதி  புதனுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. பாதகாதிபதி சுக்கிரன் லக்னாதிபதியுடன் சேர்ந்து விரையத்தில் அமைந்து 2 ஆமதிபதி சூரியன் 2க்கு விரையத்தில்  லக்னத்தில் விரையாதிபதியான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் அமைந்துவிட்டதும் 2 ஆமிடம் கடுமையாக இந்த ஜாதகிக்கு பாதிக்கும் எனவும் அது கர்ம வினை என்பதையும் தெள்ளத்தெளிவாக குறிப்பிடுகிறது. எப்போது குடும்ப பாவம் பாதிக்கும் என்பதை திசா புக்திகளை கொண்டு அறியவேண்டும். இந்த ஜாதகிக்கு 2 ஆமிடத்தில் நிற்கும் கேதுவின் சாரம் பெற்ற சனி திசையில் புதன் புக்தியில் திருமணம் நடந்து கேது புக்தியில் விவாகரத்தானது.

கீழே மற்றொரு நபரின் ஜாதகம்.


லக்னப்புள்ளி துலாத்தில் 26 பாகையில் அமைகிறது. ஜாதகருக்கு புதன் திசை நடக்கிறது. திசை பாவகப்புள்ளியை சார்ந்து எப்படி செயல்படுகிறது என்பதை இந்த ஜாதகம் கொண்டு ஆராய்வோம். ஜாதகருக்கு புதன் நிற்கும் 10 ஆவது பாவக துவக்கப்புள்ளி புதனின் சொந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் அமைகிறது. ஜாதகருக்கு திசை நடத்தும் கிரகமும் புதன் என்பதால் புதன் தனது திசா காலம் முழுவதும் தனது, காரக, ஆதிபத்திய பலன்களை தான் நிற்கும் 10 ஆவது பாவம் சார்ந்து அழுத்தம் திருத்தமாக வழங்கும் எனலாம். திசா நாதன் புதன்  சூரியனோடு இணைந்திருப்பதால் உயர்ந்த நிலையிலான பணி. உச்ச குருவோடு சேர்ந்திருப்பதால் நிறைந்த தனம் புழங்குமிடத்திலும் கடக ராசி என்பதால் வெளிநாட்டுத் தொடர்புடன் கூடிய  நிறுவனத்திலும் பணி. உச்ச குரு குறிப்பிடும் ஆயுள் காப்பீட்டுத்துறையில் உயர்நிலை வரவு செலவு தணிக்கையாளராக  ஜாதகர் பணிபுரிகிறார். 

புதன் கால புருஷனுக்கு 6 ஆமிடாதிபதி மற்றும் லக்னத்துக்கு 9 ஆமாதிபதி என்பதாலும் ஜாதகர் தந்தை வழி பூர்வீக பூமி வகையில் விவகாரங்களை சந்தித்தார். 9 ஆம் பாவாதிபதியான புதன் லக்ன பாதகாதிபதி சூரியன் குருவோடு இணைந்து திசை நடத்வதால் ஜாதகரின் தந்தைக்கு உயிர் கொல்லி நோயான புற்றுநோய்  வந்து மரணத்தை தந்தது. (9 ஆமதிபதி + குரு + சூரியன் இணைவு தந்தைக்கு புற்றுநோயை தரும்). கடக ராசியில் புதன் நின்று பாதகாதிபதி, ரோகாதிபதி தொடர்பு கொண்டு திசை நடத்துவதால் தந்தை வழி பாரம்பரிய ரத்த தொடர்புடைய வியாதியான சர்க்கரை வியாதிக்கு ஜாதகர் ஆட்பட்டார். 

புதன் இளைய சகோதரியையும் சுக்கிரன் மூத்த சகோதரியையும் குறிக்கும். புதன் பாதகாதிபதி சூரியன் மற்றும் சகோதர-சத்ரு ஸ்தானாதிபதி குருவோடு தொடர்புகொண்டு திசை நடந்துவதாலும் சகோதர சகோதரிகள் வகையில் ஜாதகருக்கு அதிருப்தி உண்டு. முதல் மகளை குறிப்பிடும் சுக்கிரன் பாதகம் பெற்று அமர்ந்ததாலும்  முதல் குழந்தையை குறிக்கும் 5 ஆவது பாவத்திற்கு 6 அமர்ந்து புதன் திசை நடத்துவதாலும் ஜாதகரின் முதன் பெண் மகளோடு ஜாதகருக்கு சரியான புரிதல் இல்லை.

ஒரு ஜோதிடர் ஜாதக பலன்களை நிர்ணயம் செய்ய எவ்வளவு முறைகளை பயன்படுதினாலும் எந்த அளவு அவற்றில் தனது திறமையை, சுய ஆய்வை, அனுபவத்தை பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்தே அவரை வெற்றிகரமான ஜோதிராக உருவெடுக்கிறார் என்பதை மறத்தல்  கூடாது.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை,

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 07871244501.