Friday 19 April 2019

வழக்கும் ஜோதிடமும்.


ஜோதிடத்தில் ராகு-கேதுக்களே நமது கர்மங்களின் பதிவை தெளிவாக எடுத்துக்கூறக்கூடியவை. ராகு-கேதுக்கள் மனித வாழ்வில் தடைகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தவல்லவை. நமது இந்து புராணத்தில் மனிதர்களின் செயல்களை குறிப்பெடுத்து வைக்கும் எமதர்மராஜனின் கணக்குப் பிள்ளையாக குறிப்பிடப்படும் சித்திரகுப்தனை கேதுவின் அம்சமாக ஜோதிடம் குறிப்பிடுகிறது. கேது சுட்டிக்காட்டும் கர்ம வினைகளை ராகு அனுபவித்துக் கழிக்க வைக்கும். உண்மையில் நாம் நமது கர்மங்களை அனுபவித்துக் கழிக்கவே இப்பிறவி எடுத்திருக்கிறோம். இதனால்தான் இப்பூமியை கர்ம பூமி என நமது மதம் குறிப்பிடுகிறது.


ராகு கேதுக்கள் ஜாதகத்தில் தனித்த நிலையில் யாருடைய தொடர்பிலும் இல்லாமல் இருப்பது சிறப்பு. ராகு கேதுக்களுக்கு திரிகோணங்களிலும் அவற்றின் நட்சத்திரங்களிலும் எந்தவொரு கிரகமும் இல்லாத நிலையில் ஜாதகத்தில் அமையப்பெற்றிருந்தால் அந்த ஜாதகர் புண்ணியவானே.  அத்தகைய ஜாதகருக்கு தீய கர்ம வினைகள் மிகக்  குறைவு எனத்தீர்மானிக்கலாம். இன்றைய நிலையில் சம்பாத்தியம், குடும்பம், ஆரோக்கியம், புத்திரம் இவைகளை அடையவே ஒவ்வொரு மனிதனும் போராடிக்கொண்டிருக்கிறான். இவைகளை போராடி அமைத்துக்கொண்டாலும்  அவற்றில் வம்பு வழக்குகள் இல்லாமல் ஒரு மனிதன் கடந்தானாகில் அவனே உலகில் பாக்கியவான்.

இப்பதிவில் நாம் ஒரு மனிதன் வாழ்வில் வழக்குகளை எதிர்கொள்ளவதற்கான ஜாதக காரணங்களை ஆராய்வோம். கேது நமது ஜாதகத்தில் ஆறாவது பாவத்தையும் கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியையும் இயக்கும் கிரகமாகும். ஆறாம் பாவம் கடன், வழக்குகள், வியாதிகள் ஆகியவற்றை குறிப்பிடும். எனவே கேது வழக்குகளுக்கு காரக  கிரகமாகிறது. புதன் திசை நடப்பவர்களும் கேது திசை நடப்பவர்களும் ஜாதக அமைப்பின் அடிப்படையில் வழக்குகளை எதிர்கொள்வதிலிருந்து இதை உணரலாம்.

கீழே ஒரு ஆணின்  ஜாதகம்.


ஜாதகத்தில் கேது லக்னத்திலேயே அமைந்துள்ளது ஜாதகர் தனது வாழ்வில் வழக்கினை எதிர்கொண்டே ஆக வேண்டும் என்பதை இது குறிக்கிறது. அது எந்த வகை வழக்கு எனும் கேள்வி எழும்போது கேது ஒன்பதாம் பாவாதிபதி சூரியனின் உத்திர நட்சத்திரத்தில் அமைந்து சூரியனும் ஆறாமிடத்தில் கால புருஷனுக்கு ஆறாமதிபதி புதனுடன்   அமைந்ததாலும் தந்தைவழி வழக்கு என அனுமானிக்க வழியுண்டு. ஒரு ஜாதகர் வழக்கை சந்திப்பார் எனில் எப்போது சந்திப்பார் என்பதைக் கூற கால புருஷனுக்கு ஆறாமிடமான கன்னியையும், புதனையும், கேதுவையும் இவைகளின் சாரம் பெற்ற கிரகங்களையும் கவனித்தால்  புரிந்துவிடும். ஜாதகத்தில் பூமி காரகன் செவ்வாயும், காலி  மனைகளைக் குறிக்கும் புதனும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். மேலும் பூமி  பாக்கியங்களுக்கு உரிய 4 ஆம் பாவாதிபதி குரு பாதகாதிபதி புதனின் ரேவதி நட்சத்திர சாரம் பெற்று அமைந்துள்ளது. அதனால் ஜாதகர் குரு திசையில் தந்தையின் பூர்வீக நிலத்திற்கான வழக்கை எதிர்கொண்டார். அடுத்துவந்த சனி திசை புதனுக்கு பாதகத்தில் அமைந்ததாலும், சனி பூமி காரகன் செவ்வாயின் அவிட்டம் சாரத்தில் செவ்வாயை நீச பங்கப்படுத்தும் அமைப்பில்  சந்திரனோடு இணைந்தது திசை நடத்துவதாலும் ஜாதகர் வழக்கில் வெற்றி பெற்றார்.

கீழே மற்றொரு பெண்ணின் ஜாதகம்.


மகர லக்ன ஜாதகத்தில் கால புருஷ ஆறாம் பாவாதிபதி புதனே லக்னத்திற்கு ஆறாம் பாவாதிபதியாகி லக்னாதிபதியுடன் பரிவர்த்தனை அமைப்பில் உள்ளார். லக்னத்தில் அமைந்த புதன் உச்ச நிலையில் வழக்கு காரகன் கேதுவுடன் இணைந்த சந்திரனின் திருவோணம் சாரம் பெறுகிறார். சனி  ஜீவனத்தை குறிப்பிடும். புதன் கணக்குவகை பதிவுகளை குறிப்பிடும் என்பதாலும், இரண்டில் சூரியன் நின்றதாலும் ஜாதகி அரசு வங்கியில் பணி புரிகிறார். ஆறாமிட சனியை பாதகாதிபதி செவ்வாய் விரைய ஸ்தானத்தில் இரண்டில் நிற்கும் அஷ்டமாதிபதி சூரியனின் உத்திராடம்  நட்சத்திரத்தில் நின்று பார்க்கிறார். இரண்டில் நிற்கும் அஷ்டமாதிபதி சூரியன் பாதகத்தில் அமைந்த ராகுவின் சாரம் பெற்றுள்ளார். 10 ஆம் பாவாதிபதி சுக்கிரன் விரையாதிபதி குருவுடன் அமைந்து உச்சம் பெற்றாலும் பாதகாதிபதி செவ்வாய் பார்வையையும் பாதகாதிபதி செவ்வாய் பார்வை பெற்ற சனி பார்வையையும் ஒருங்கே பெறுகிறார். இத்தகைய அமைப்புகள் ஜாதகி ஜீவன வகை வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதை குறிக்கிறது.

ஜாதகிக்கு குரு திசை சூரிய புக்தியில் அரசு வங்கிப்பணி கிடைத்தது. ஜாதகி குரு திசை முடிந்து ஆறாமிடத்தில் அமைந்த சனி திசையில் வங்கி விதிமுறைகளுக்கு முரணான வழியில் பணியில் சேர்ந்ததற்கான வழக்கை எதிர்கொண்டுள்ளார்.

கீழே மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.


கும்ப லக்ன ஜாதகத்தில் லக்னத்திலேயே வழக்கு காரகன் கேது வழக்கு பாவமான ஆறாமிடத்தில் அமையப் பெற்ற இரண்டாமதிபதி குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறார். எனவே ஜாதகர் குடும்ப விஷயங்களுக்காக வழக்கை எதிர்கொள்வார் என எளிதாக அனுமானிக்கலாம். குடும்ப பாவாதிபதி குரு உச்சமாகி வக்ரமானதால் நீசத்திற்கொப்பான நிலையில் ஆறாம் பாவாதிபதி சந்திரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். ஏழாமிடத்தில் லக்னம் மற்றும் விரைய ஆதிபத்தியம் பெற்ற சனி ராகுவுடன் இணைந்ததால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது திக்பலம் பலனற்றதாகிறது. ஏழாம் அதிபதி கால புருஷ ஆறாம் அதிபதி புதனுடன் 10 ஆமிடத்தில் இணைந்து  பாதிக்கப்பட்ட குருவின் பார்வையை பெறுகிறார்..

ஜாதகர் குடும்ப உறவு சிதைந்த நிலையில் பாதகத்தில் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் ஆட்சி பெற்ற சுக்ரனின் திசையில் விவாகரத்து வழக்கை சந்தித்து குடும்ப உறவை இழந்தார். சுக ஸ்தானாதிபதியாகி ஏழில் நிற்கும் ராகுவின் சாரம் பெற்றதால் திருமண உறவு அமைய காரணமான சுக்கிரனே பாதக ஆதிபத்தியமும் பெற்றதால் ஏழாவது பாவமும் பாதிக்கப்பட நிலையில் குடும்ப வாழ்வை இழக்கவும் காரணமாகியுள்ளார்.

கீழே மற்றொரு ஆணின் ஜாதகம்.


சிம்ம லக்ன ஜாதகத்தில் லக்ன புள்ளி கேதுவின் மக நட்சத்திர சாரம் பெறுகிறது. சுபாவ பாவியான லக்னாதிபதி சூரியன் நான்காமிடத்தில் ஆறாமதிபதி சனியின் அனுஷம் சாரத்தில் நின்று ஆராமதிபதி சனியின் பார்வையை பெறுகிறார். இந்த அமைப்பு ஜாதகர் வழக்கை சந்திப்பார் என குறிப்பிடுகிறது. தற்போதைய திசா நாதன் சுக்கிரன்  கால புருஷ ஆறாமதிபதி புதனுடன் இணைந்து திசை நடத்துகிறார். எனவே தற்போதைய திசையிலேயே வாழக்கை சந்திப்பார் எனலாம். ஜாதகர் வீடு கட்ட வாங்கிய வங்கி கடனை கட்ட கால தாமதமானதற்காக வங்கியினரின் கடுமையான வார்த்தைகளால் மன உழைச்சலுக்கு ஆழாகி வங்கி மீது வழக்கு தொடர்ந்தார். நீதிபதி ஜாதகரின் இயலாமையால் ஏற்பட்ட தாமதத்தின் காரணத்தை புரிந்துகொண்டு வங்கிமீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தார். இதனையடுத்து வங்கி பணிந்தது.

இதற்கு கால புருஷ ஆறாமதிபதி புதன் திசா நாதன் சுக்கிரனுக்கும் சூரியனுக்கும் நட்பாகி பாவ கர்தாரி யோகத்தில் புதனும் சுக்கிரனும் அகப்பட்டுக்கொண்டதாலும் லக்னாதிபதி சூரியன் லக்ன கேந்திரத்தில் பஞ்சமாதிபதி குருவுடன் இணைந்து  வழுவாக நின்று இவர்கள் நின்ற ஸ்தானாதிபதி செவ்வாய்  சூரியன் – குருவிற்கு கேந்திரத்தில் நின்று ஆறாமதிபதி சனியோடு பரஸ்பர பார்வையை பரிமாறிக்கொள்வதும் முக்கிய காரணம். சூரியன் குருவோடு இணைந்து ஆறாமதிபதி சனியை நேர்பார்வை பார்த்து கட்டுப்படுத்துவதோடு சனியோடு சூரியன் சார பரிவர்த்தனை பெறுகிறார். இதனால் எனது அறிவுரையை ஏற்று ஜாதகர் நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றமும்  ஜாதகருக்கு உதவியது என்றால் அது கிரகங்களின் அருளன்றி வேறு என்னவாக இருக்க முடியும்.

குறிப்பு: ஜாதகங்கள் K.P அயனாம்சம் கொண்டு ஆய்வுசெய்யப்பட்டவை.
ராசி – நவாம்ச ஜாதக கிரக நிலைகளை வைத்து ஜனன தேதிகளை அறியமுடியும்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 07871244501 ,  08300124501 (Whatsapp)

Friday 5 April 2019

வேலையும் ஜோதிடமும்


இன்றைய சூழலில் ஒருவரின் மதிப்பு அவர் செய்யும் வேலையைக்கொண்டே அளவிடப்படுகிறது. ஒருவர் செய்யும் வேலை மற்றும் அதன் சாதக பாதகங்கள் ஜாதகத்தில் 12 பாவங்களோடும் 9 கிரகங்களோடும் தொடர்புகொள்கின்றன. குறிப்பாக 



ஜாதகத்தில் 2, 6, 10 பாவங்கள் வேலையோடு நேரடி தொடர்பை பெறுபவை.

வேலையில் ஏற்படும் இட மாற்றத்தை 3, 9, 10, 12 ஆகியவை குறிப்பிடுகின்றன.

பதவி உயர்வு எனில் 2, 6, 10, 11 ஆகியவையும் 

பணி இழப்பை 1,5,9,12 ஆகியவையும் குறிப்பிடுகின்றன.

பணி  இழப்பிற்குப்பின்  வேலை பெறுவதை 2, 6, 10, 11 ஆகிய பாவங்களும்

வேலைக்கு முக்கிய கிரகங்களாக சனியும், புதனும், குருவும் திகழ்கின்றன.

வெளி நாட்டு வேலைக்கு உரிய பாவங்களாக 9, 12 ம் உள்ளன. நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனமும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெளிநாட்டு வேலைக்கு கிரகங்களில் நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு கேதுக்களும் காரணமாகின்றன.

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.


தொலை தகவல் தொடர்பை குறிக்கும் 3 ஆம் பாவாதிபதி குரு ஏழாமதிபதி சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரம் பெற்று அமர்ந்துள்ளார். குருவின் சார நாதன் சந்திரன் கால புருஷனுக்கு 3 ஆமிடமான புதனின் மிதுனத்தில் லக்னத்திற்கு 3 ஆமிடத்தில் நிற்கும் செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நிற்கிறார். ஜீவன காரகன் சனி லக்னத்திற்கு 12 ஆமிடத்தில் நிற்கிறார். சனிக்கு 10 ல் தூது, அஞ்சலை குறிக்கும் புதன் உச்சகதியில் குரு பார்வையில் நிற்கிறார். இரண்டாமிடத்தில் நிற்கும் ராகுவும் குருவின் சாரம் பெறுகிறார். 10 ஆமதிபதி சுக்கிரன் குருவின் பூச நட்சத்திர சாரம் பெற்று தொடர்பு ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். அவருக்கு வீடு கொடுத்த சந்திரன் புதனின் வீட்டில் மிதுனத்தில் அமர்ந்துள்ளார். இந்த ஜாதகத்தில் 2, 6, 10  பாவ தொடர்புகளாலும் 3 ஆம் பாவ மற்றும் , புதனின் வலிமையாலும் ஜாதகருக்கு குரு திசை சனி புக்தியில் அஞ்சல் துறையில் 2011 ல் பணி கிடைத்தது.  

இரண்டாவதாக கீழே மற்றொரு ஜாதகம்.



இந்த ஜாதகிக்கு சந்திரன் கன்னி லக்னத்திற்கு பாதக ஸ்தானமான மீனத்தில் சனியின் உத்திரட்டாதி – 4 ல் இருந்து திசை நடத்துகிறார். சந்திரன் சனியோடு இணைந்து குருவோடு பரிவர்த்தனை பெற்றுள்ளது. சந்திரன் மாற்றத்திற்கு காரக கிரகம் என்பதாலும் பாதகத்தில் நின்று பாதகாதியோடு பரிவர்த்தனை பெற்று சந்திரனும் குருவும் சனியின் பூரட்டாதி மற்றும் பூசம் சாரம் பெற்றதாலும் பல வருடங்கள் சௌகரியமாக வேலை பார்த்த இடத்திலிருந்து சந்திர திசை துவங்கியதுமே தொலைவிற்கு இடமாறுதல் பெற்றுச்செல்ல வைத்தது. ஜாதகி மீண்டும் முந்தைய இடம் போன்ற சௌகரியமானதொரு இடத்திற்கு வர தற்போது கடும் முயற்சி செய்கிறார். இந்த ஜாதகத்தில் பாதகம் என்பது வேலை மாற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலமான அசௌகரியங்களை  கொடுத்துள்ளது. இந்த ஜாதகத்தில் பாவ அடிப்படையில் மூன்றாமதிபதியோடு இணைந்த குரு மாற்ற காரகன் சந்திரனோடு ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்பு ஒரு புறமிருக்க மூன்றாமிடத்தை பாதகாதிபதியான குரு பார்த்து பணி மாற்றம் கிடைக்காதவாறு தடை செய்கிறார். சூரியன 12 ஆமிடாதிபதியாகி அவரும் சந்திரனை பார்ப்பதும் ஒரு காரணமாகும்.

மற்றொரு ஜாதகம் பின்வருமாறு.


இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் 10 ஆமிடத்தில் திக்பலம் பெற்று 11 ஆமிடாதிபதியுடனும் திசா நாதனும் 6 ஆமதிபதியுமான சனியுடனும் இணைந்துள்ளார். பாக்ய ஸ்தானத்தில் 10 ஆமதிபதி சுக்கிரன் அமர்ந்து அதன் அதிபதி செவ்வாய் லக்னத்திற்கு 6 ஆமிடத்தில் உச்சமாகியுள்ளார். ஜாதகருக்கு சனி திசை சுக்கிர புக்தியில் மாற்றத்தோடு கூடிய பணி உயர்வை அடைந்தார். . இதற்கு ஜாதகத்தில் 6, 10, 11 தொடர்புகளே காரணம் என்றால் அது மிகையல்ல.
  
நான்காவதாக மற்றுமொரு ஜாதகம் கீழே.


இந்த ஜாதகத்தில் ஐந்தாமதிபதி சந்திரன் திக்பலம்  பெற்ற ஆறாமதிபதி சூரியனுடனும் பாவச்சக்கரத்தில் பாதகாதிபதி புதனுடனும் 10 ஆமிடத்தில் அமர்ந்து திசை நடத்துகிறார். ஐந்தாமிடம் வேலை ஸ்தானமான ஆறாமிடத்திற்கு விரைய பாவம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சந்திரன் பணி இழப்பிற்கு முக்கிய கிரகமான கேதுவின் மூல நட்சத்திரத்தில் நிற்கிறார். லக்னாதிபதியும் 10 ஆம் பாவதிபதியுமான குரு ராசியில் ஆட்சி பெற்று பாவத்தில் நீசம் பெற்றுள்ளார். இதனால் 10 ஆமிடம் தொடர்புடைய திசா புக்தி வரும்போது பணியிழப்பு ஏற்படும் என்பதை அனுமானிக்கலாம். கோட்சாரத்தில் இந்த ஜாதகருக்கு சந்திர திசையில் ராசியில் 11 லிலும் பாவத்தில் செவ்வாயோடு  விரையத்திலும் நிற்கும் அஷ்டமாதிபதி சுக்கிரனின் புக்தியில் கோட்சார கேது ஆறாமதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் நின்று கோட்சார சனியை தொடர்புகொள்ளவிருந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் ஏழரை சனியில் பணி இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

எப்படி திசா புக்திகளும் கோட்சாரமும் இணைந்து செயல்படுகிறது என்பதற்கு இந்த ஜாதகம் சாட்சி. புக்தி  நாதன் சுக்கிரன் பாவச்சக்கரத்தில்  தன வருவாய்க்குரிய ஸ்தானம் மேஷத்திற்கு பாதகமான கும்பத்தில் இருப்பதும் கவனிக்கத்தக்கது. இங்கு பணி இழப்பிற்கு முக்கியமாக வரவு பாவமான 2, வேலை பாவமான 6, லாப பாவமான 11க்கு விரைய பாவங்களோடு (அதாவது 1, 5, 9)  இவற்றோடு லக்னத்திற்கு விரைய பாவமான 12 ஆவது பாவமும் முக்கிய காரணங்கள் என்பது உறுதி செய்யப்படுகிறது.

வாழ்க்கையில் திசா புக்தி மாறுதல்கள் நம் சூழ்நிலைகளை மாற்றி அமைக்கின்றன. அவற்றை ஏற்று செயல்படுத்துவதில் கோட்சார கிரகங்கள் முக்கியமாக வருட கிரகங்களான சனி, குரு, ராகு-கேதுவின் பெயர்சிகள் முக்கிய பங்காற்றுகின்றன என்றால் அது மிகையல்ல.

இவற்றை தெரிந்துகொள்வதால் என்ன நன்மை என்றொரு கேள்வி எழும். மேற்கண்ட ஜாதகங்களிளிருந்து நமது வாழ்வில் நமது பணிச் சூழ்நிலைகளுக்கு மட்டுமல்ல அணைத்து சூழ்நிலைகளுக்கும் கிரகங்களே காரணம் என்பது புரியும். இந்த உண்மை புரிந்தால் கிரகங்கள் நமக்கு வழங்கும் வாழ்க்கையின் மாறுதல்களை சலனமின்றி எதிர்கொள்ளலாம்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சிந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 07871244501 , பகிரி 08300124501