Sunday 8 December 2013

ஜாதகத்தில் கிரகங்களின் சூட்சும வலுவை அளவிடுவது எப்படி?


பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.




மிருகசீரிஷம் – 4 ல் லக்னம்
ஆயில்யம் – 2 ல் சூரியன்
மகம் - 2 ல் சந்திரன்
பூராடம் - 2 ல் செவ்வாய் (வக்ரம்)
புனர்பூசம் – 4 ல் புதன்
பூரட்டதி - 3 ல் குரு (வக்ரம்)
உத்திரம் -  3 ல் சுக்கிரன்
அனுஷம் – 2 ல் சனி
அஸ்வினி – 1 ல் ராகு
சித்திரை – 3 ல் கேது
புனர்பூஷம் – 1 ல் மாந்தி

கேது திசை இருப்பு 5 வருடம் 1 மாதம் 12 நாட்கள்.

Ø  மேற்கண்ட ஜாதகத்தில் 2 ல் சூரியன் நின்று இரண்டாம் பாவத்தை கெடுத்தார்.

Ø  7 ஆம் பாவத்தில் மிதுன லக்னத்திற்கு சத்துருவான செவ்வாய் நின்று 7 ஆம் பாவத்தைக் கெடுத்தார்.

Ø  5 ஆமிடத்தில் கேது நின்று 5, 12 க்குரிய சுக்கிரன் நீசம் பெற்று 5,12 ஆம் பாவங்களும் கெட்டுவிட்டன.

Ø  குடும்ப, புத்திர காரகன் குருவும் தனது சம வீட்டில் வக்கிர கதியில் வலுவில்லாமல் அமைந்துவிட்டார்.

மேற்குறிப்பிட்ட விதத்தில் இந்த ஜாதகத்தை ஆராய்ந்தால்,

இந்த ஜாதகிக்கு திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் அமைவது சிரமமே எனத்தோன்றும்.

பல்வேறு ஜோதிடர்களால் திருமண விஷயத்தில் இப்படி ஒதுக்கித் தள்ளப்பட்ட ஜாதகம் இது.
என்னிடம் 2011 துவக்கத்தில் இந்த ஜாதகம் வந்த போது 7 1/2 விலகும் 2011 இறுதியை ஒட்டி ஜாதகிக்கு திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியமும் தவறாமல் கிடைக்கும் என்றேன்.

2011 செப்டம்பரில் ஜாதகிக்கு திருமணம் நடந்து 2013 மத்தியில் குழந்தையைப் பெற்றார்.

நான் இந்த ஜாதகத்தை ஆராய்ந்த விதம் பின்வருமாறு.

எவ்வளவு கடுமையான தோஷங்களைக் கொண்டிருக்கும் ஜாதகங்களிலும் அந்த தோஷங்களின் தீவிர காலம் ஒரு கட்டத்தில் நிறைவைப் பெறும்.
சில சாபக்கேடான ஜாதகங்கள் இவற்றிற்கு விதி விளக்காக அமையும்.  

குறிப்பிட்ட தோஷங்களின் தீவிரம் எப்போது தணியும் என்பதை திசா-புக்தி, கோட்சாரத்தில் சனி மற்றும் குருவின் நிலையைக் கொண்டு துல்லியமாக அறிய இயலும். அதற்கான மிகச்சிறந்த குறிப்புகள் பண்டைய நமது ஜோதிட நூல்களில் உள்ளன. தேவை பொறுமையும் நிதானமுமே.

மேற்கண்ட ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் தனது நண்பனான சூரியனுடன் 2 ஆம் பாவத்தில் இணைந்து அஸ்தங்கமடையாமல் வர்கோத்தமும் பெற்று 7 ஆம் அதிபதியான குரு சாரத்தில் நின்று நல்ல நிலையில் உள்ளார்.

2 ஆம் பாவத்தில் லக்னாதிபதி சாரத்தில் (ஆயில்யம் – 2 ல்) நின்ற சூரியன் அந்த பாவ அதிபதி சந்திரனுடன் பரிவர்த்தனை பெற்று சிறப்பான யோகத்தை தர வேண்டியவராகிறார்.

2 ஆம் பாபத்தை லக்னாதிபதி வலுப்படுத்துவதோடு பரிவர்த்தனையான சூரிய- சந்திரர்களால் 2 மற்றும் 3 ஆம் பாவங்களும் வலுவடைந்தன.

2 ஆமதிபதி சந்திரன் அம்சத்தில் உச்சமடைந்து அதீத வலுவுடனே உள்ளார். இது ஜாதகியின் வெளிநாட்டு வாசத்தைக் குறிப்பிடுகிறது.

சூரியனும் சூரியனது பாவமான சிம்ம ராசியும் வலுவடைந்ததால் சூரியனின் நட்சத்திரத்தில் (உத்திரம் - 3 ) நின்ற சுக்கிரனும் வலுவடைந்து நீச பங்கம் பெற்றார்.

மேலும் சுக்கிரனது உப நட்சத்திராதிபதி புதனாக அமைந்தது கூடுதல் சிறப்பு.

ஒரு கிரகமும் அதன் பாவமும் வலுவடையும்போது அந்த கிரகத்தின் சாரத்தில் நிற்கும் கிரகங்களும் வலுவடையும் என்பது ஒரு முக்கிய ஜோதிட விதி.

பகை வீட்டில் வக்கிரமடையும் கிரகங்கள் நல்ல பலனைத் தரவேண்டும் என்ற அடிப்படையில் சனி 6 ஆவது பாவத்தில் தனது சுய சாரத்தில் (அனுஷம் – 2) ல் நன்றாக அமைந்துள்ளார். மேலும் 6 ஆமதிபதி 8 ல் அமைவது விபரீத ராஜ யோகங்களில் ஒரு வகை என்பதோடு சனி போன்ற சுபாவ பாவிகளுக்கு 6 ஆமிடம் மிகச் சிறப்பானது.

இதன் பொருட்டு சனி தனது சுய பாவங்களையும் அவற்றில் அமைந்த கிரகங்களையும் வலுப்படுத்த வேண்டும்.

எனவே சனி வீட்டில் வக்கிர கதியில் இருந்தாலும் குரு வலுவாக உள்ளதாகவே கொள்ளவேண்டும். மேலும் தனது சுய சாரத்தில் (பூரட்டதி – 3) ல் குரு அமைந்துள்ளது கூடுதல் சிறப்பே. மேலும் குரு 1,5,9 ஆம் பாவங்களில் அமைவது மிகச் சிறப்பானது  ஆகும்.

7 ல் நின்ற செவ்வயாலும் 2 ல் நின்ற சூரியனும் கன்னியில் அமைந்த சுக்கிரனும் திருமணத்தை தாமதப்படுத்தினார்களே தவிர சிறப்பானதொரு வெளிநாட்டு வரனுக்கு ஜாதகியை மனம் முடிக்க வைத்தனர்.

முந்தைய சச்சின் பற்றிய பதிவில் குறிப்பிட்டதுபோல் 5 ஆம் இடத்தில் நிற்கும் ராகு-கேதுக்கள் அவை நிற்கும் பாவதிபதியை சார்ந்தே பலனளிக்கும் என்பதால் இங்கு நீச பங்கமடைந்த சுக்கிரனின் வீடான ஐந்தாம் பாவத்தில் நின்று குருவால் பார்க்கப்படும் கேது புத்திர பாக்கியத்தை தடை செய்யவில்லை.



இப்படி கிரகங்களையும் அவற்றின் பாவங்களின் வலுவையும் அவை நிற்கும்  சாரத்தின் அடிப்படையில் உள்ளார்ந்து ஆராய்ந்து கணக்கிடுவதையே ஜோதிடத்தில் சூட்சும வலு என்கிறோம்.

மற்றும் ஒரு பதிவில் சிந்திப்போம்,

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,

பழனியப்பன்.

Saturday 16 November 2013

சாதனைச் சிகரம் சச்சின் டெண்டுல்கர்




இந்தியாவில் அதிகம் அலசப்பட்ட ஜாதகங்களுள் ஒன்று நமது சச்சினின் ஜாதகம். காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தேசத்தில் பிரச்சனைகள் பல இருக்க, பெரும்பாலான ஜோதிடர்களால் ஆய்வு செய்யப்பட்ட ஜாதகத்தை நாமும் அலசுவது அரைத்த மாவையே அரைப்பது போன்றிருக்கும்  என்ற எனது எண்ணத்தையும் மீறி அவரது ஜாதகத்தை இங்கு நான் ஆய்வுக்கு உட்படுத்தியிருப்பது, எனக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்பதோடு மற்றுமின்றி எனது பள்ளி நாட்களிலிருந்து என்னை வசீகரித்த கிரிக்கெட் வீரர் சச்சின் என்பதும் அவரது ஜாதகத்தை எனது நோக்கில் ஆராய வேண்டும் என்பதும் ஒரு காரணம். அவரது கடைசி டெஸ்ட்டின் போது இப்பதிவை எழுதுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதும் மற்றொரு முக்கிய காரணம்.


இந்தியர்களால் மட்டுமல்ல எதிரணி வீரர்களாலும் கூட மிகவும் நேசிக்கப்பட்டவர் சாதனைச் சிகரம் நமது சச்சின் டெண்டுல்கர் என்றால் அது மிகையல்ல. பின்வரும் அவரது ஜாதகத்தைக் கவனியுங்கள்.

சிம்ம லக்னம் என்பது சாதனையாளர்களுக்கான லக்னம் சென்றால் அது மிகையல்ல. பொதுவாகவே ஒருவர் எந்தத் துறையில் ஈடுபட்டிருந்தாலும் தான் சாரத்த துறையில் சாதிக்க வேண்டும் எனில் அவர் சிம்ம லக்னத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். இது ஒரு முக்கியமான பொது விதி.

சாதனையாளர்களுக்கே உரித்த சிம்ம லக்னத்தில்  பிறந்த சச்சினின் ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் பாக்கியஸ்தானத்தில் உச்சம். லக்னாதிபதியைப் பாக்யாதிபதி பார்ப்பதே சிறப்பு என்ற நிலையில், சூரியனுக்கு வீடு கொடுத்த பாக்யாதிபதி செவ்வாயும் உட்சமடைந்து தனது வீட்தில் உட்சமடைந்த சூரியனைப் பார்ப்பது கூடுதல் சிறப்பு. கூடவே இரு கிரகங்களும் நட்பு என்பது அபரிமிதமான ராஜயோகத்தை ஏற்படுத்தும் அமைப்பு.  ராஜ்யத்தைக் குறிக்கும் சூரியனுடன் ராஜ்ய ஸ்தானாதிபதி (10 ஆம் அதிபதி) சுக்கிரன் கூடியிருப்பது மற்றுமொரு சிறப்பு.




விளையாட்டுத்துறையில் ஒருவர் ஜொலிக்க வேண்டுமெனில் அதற்கு

1.காரகத்துவம் பெற்ற புதன் சிறப்பாக இருக்க வேண்டும்.
2.துடிப்பான செயல் வேகத்திற்கு சந்திரன் சிறப்பாக இருக்க வேண்டும்.
3.போர்க்குணத்திற்கும் விடா முயற்சிக்கும் உரிய  செவ்வாய் சிறப்புற்றிருக்க வேண்டும்.

இந்த மூன்று விதிகளும் ஒருங்கே அமைந்த ஜாதகம் சச்சினுடையது.

உட்சன் செவ்வாயுடன் கூடியதால் நீச குரு தனது நீச நிலையிலிருந்து விடுபட்டு  ராஜ யோகத்தைத் தரவேண்டியவராகிறார்.

ஒரு கிரகம் நீச நிலையிலிருந்து விடுபடும்போது அக்கிரகத்திற்குரிய பாவங்களும் வலுவடையும். அதனால் அந்த அக்கிரகத்தினது பாவத்திலமைந்த கிரகங்களும் வலுவடையும் என்பது விதி.

அந்த வகையில் சந்திரன் வலுவடைந்தார். மேலும் புதனும் தனது நீச நிலையிலிருந்து விடுபட்டுள்ளார்.

புதன் தனது நீச நிலையில் இருந்து விடுபட்டதால் ஜாதகர் தான் சார்ந்த துறையில் ஜொலிக்க உதவி புரிந்தார். தன, குடும்ப காரகன் குருவும் தன குடும்ப பாவதிபதி புதனும் ஜாதகருக்கு சிறப்பான குடும்ப வாழ்க்கையையும் அபரிமிதமான செல்வச் செழிப்பையும் கொடுத்தார்கள். ஜாதகரின் செல்வச் செழிப்பிற்கு, குரு ராஜயோகத்தில் அமைந்து தனஸ்தானத்தை 9 ஆம் பார்வையாகப் பார்ப்பதும் குருவின் வீட்டில்  தன ஸ்தானாதிபதி அமர்ந்ததும் முக்கிய காரணம். ரேவதி நட்ச்திரத்தில் தனது சுய சாரத்தில் அமைந்த புதன் தனது பாவத்தையே பார்த்து அதனை சிறப்புச் செய்கிறார்.

புதன் தனது நீச நிலையில் இருந்து விடுபட்டாலும் அது குருவினது நீச பங்கத்தைப் போல (உச்சனுடன் கூடி நீச பங்கப்பட்டது போன்ற) மிக வலுவான நிலையில் இல்லை. மேலும் அவர் அஷடமத்தில் மறைந்துவிட்டார். புதன் ஜாதகருக்கு நற்பலன்களை வழங்கும்படி  இக்கட்டில் குருவால் தள்ளப்பட்டார். அதனால் தனது காரகத்துவங்களில் ஒன்றான கல்வியில் ஜாதகரை கைவிட்டு விட்டார்.  (சச்சின் பள்ளி இறுதியில் தோல்வியுற்று படிப்பை நிறுத்தினார். அதற்கு காலச் சூழ்நிலையும் ஒரு காரணம்). புதன் வாக்குகாரகனும் கூட என்பதால் சச்சின் வாக்கு வன்மை இன்றி சற்றே பெண்மைத்தனமாகப் பேசுவார் என்பது அனைவரும் அறிந்ததே.

இவ்விடத்தில் ஒரு ஜோதிட நுட்பத்தினை ஜோதிட ஆர்வலர்கள் கவனிக்க வேண்டும். ஒரு கிரகம் தோஷப்பட்டு ஜாதகருக்கு நன்மை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டால் அக்கிரகமானது அதன் காரகங்களில் ஒன்றைக் கை விட்டு அதன் மற்ற காரகங்களில் நன்மை செய்யும்.
பாக்கிய ஸ்தானமும் வலுவடைந்து பாக்கியாதிபதியும் வலுவடைந்ததால் ஜாதகர் தான் விரும்பிய காதல் மனைவியை அடைந்தார். 5 ஆம் இடத்தில் ராகுவுடன் நல்ல நிலையில் அமைந்த சந்திரன் ஜாதகருக்கு காதல் உணர்வுகளை தூண்டினார். லக்னாதிபதியுடன் கூடிய காதல்காரகன் சுக்கிரனும், சுக்கிரனின் வீட்டில் அமர்ந்த 7 ஆமதிபதி சனியும் ஜாதகரின் மனதில் இருந்த காதலை வெளிக்கொணர்ந்தார்கள் எனலாம். 

திருமணத்தோடு தொடர்புடைய 12, 2 மற்றும் 7 ஆவது பாவங்களுடன் சனி செவ்வாய் சம்பந்தம் பெற்றால் தனது குலத்தை (ஜாதியை) விட்டு வேறு குலத்தில் காதல் திருமணம் புரிவார் என்பது ஒரு ஜோதிட விதி. இந்த ஜாதகத்தில் சனி களத்திர பாவாதிபதியாகி 12 ம் பாவத்தை பார்வை செய்கிறார். அதே 12 ஆம் பாவத்தை  செவ்வாயும் பார்த்ததால் காதல் மணம் ஏற்பட்டுள்ளது. இந்த அமைப்பில் குடும்ப காரகன் குருவும் இணைந்ததால் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தேறியுள்ளது. 

குடும்ப பாவாதிபதி 8 ல் மறைந்தால் குடும்பம் அமையும் போது சில வருந்தமான, அவமானகரமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது ஒரு ஜோதிட விதி


இந்த ஜாதகத்தில் புதன் 8ல் குரு வீட்டில் மறைந்துள்ளார். குருவினது வீடு என்பதாலும் குரு வலுவடைந்தார் என்பதாலும் பெரிதாக அவமானகரமான சூழ்நிலை திருமணத்தில் ஏற்படவில்லை எனினும் சச்சினின் மனைவி வயதில் மூத்தவர் என்பது இன்றுவரை விமர்சிக்கப்படுகிறது. சனி 10 ஆம் பார்வையாக தனது களத்திர பாவத்தை பார்த்ததால் ஜாதகரைவிட அவரது மனைவி  வயதில் மூத்தவர் என்பது இதற்கு முக்கியமான காரணமாகும்.

சச்சினின் சாதனைகளுக்கு சூரியன், செவ்வாய், புதன், சந்திரன், சுக்கிரன், கர்ம ஸ்தானத்தில் நட்புவீட்டில் அமைந்த சனி, ஜாதகத்தில் நல்ல நிலையில் அமைந்த ராகு – கேதுக்களுமாகும். மேலும் வீர, தீர , வெற்றி ஜெயங்களைக்குறிக்கும் 3 ஆம் இடத்தின் அதிபதி சுக்கிரன் லக்னாதிபதியுடன் பாக்கியஸ்தானத்தில் கூடியது ஜாதகரின் பல சாதனைகளுக்கும்  வெற்றிகளுக்கும் காரணமாக அமைந்தது.

ராகு – கேதுக்கள் இரண்டுமே நல்ல நிலையில் அமைந்துள்ளன. இவை தாங்கள்  அமர்ந்த பாவங்களின் அதிபதிகளை அடியொற்றியே தங்கள் பலன்களை வழங்குவர். 

ராகு மற்றும் கேது இரண்டுமே 5 ல் சுபர்களின் வீட்டில் இருப்பது குறையல்ல. அவர்கள் அமைந்த வீட்டில் சுபர்கள் கெட்டல் மட்டுமே பாவத்தைக் கெடுப்பார்கள். அதுவே பாவிகள் வீடானால் அவ்வீட்டின் பலன் கெட்டுவிடும். (இது ஒரு முக்கியமான ஜோதிட விதி. இவ்விதியை சரியாகப் புரிந்துகொள்ளாமல் சில அரைகுறை ஜோதிடர்கள் திருமணப் பொறுத்த விஷயத்தில் விளையாடுவது வேதனைக்குரியது.)

சச்சினின் ஜாதகத்தில் வலுவடைந்த கிரகங்களால் பெரும்பாலும் அணைத்து பாவங்களுமே வலுவடைந்திருப்பத்தைக் காணலாம்.
இப்படி வலுவடைந்த கிரகங்களும் பாவங்களும் சச்சினின் சாதனைகளுக்கு, செல்வச் செழிப்பிற்கு,குடும்ப வாழ்க்கை உள்ளிட்டவற்றிற்கு காரணமாகும்.

அதோடு லக்னம் கேதுவின் மக நட்சத்திரத்தில் அமைந்ததால் சச்சின் உலகின் ஒப்பற்ற சந்யாசி ஸ்ரீசத்யசாய்பாபாவின் சீடராக உள்ளார்.

ஜீவன காரகன் சனி நட்பு வீட்டில் அமைந்தால் ஜாதகர் தான் செய்யும் கர்மாவை (வேலையை) ரசித்துச் செய்வார் என்பது ஒரு ஜோதிட விதி. சச்சின் கிரிக்கெட்டை தனது உயிர் மூச்சாக நினைப்பதால்தான் அதை அவரால் ரசித்து அனுபவித்து விளையாட முடிகிறது. இதனால் அவருக்கு பல சாதனைகள் தேடி வந்தன.

சச்சின் போன்ற சாதனையாளர்கள் படைத்தவனால் ஆசீர்வதிக்கப்பட்டு அனுப்பப்பட்டவர்கள்.

சச்சின் ஒரு சகாப்தம்.

நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிப்பூ.

இதனை நான் அவர்மீதுள்ள அபிமானத்தால் குறிப்பிடவில்லை.

நாம் அலசிய அவரது ஜாதகத்திலிருந்து இவ்வாசகங்கள் மிகையல்ல என்பது புரியும்.

அவரது சாதனைகளை விடுங்கள்.

அவர் ஒரு நல்ல மனிதர்.

முறையாக வருமான வரி செலுத்துபவர்.

மனிதாபிமானி என்பதால் அவர் பல்லாண்டு வாழ உலகில் அனைவராலும் வேண்டப்படுகிறது.

சச்சின் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று பெருமையாக நினைக்கும் அவரது பலகோடி ரசிகர்களுள் நானும் ஒருவன் என்று இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.


இதற்கு மேலும் அவரது தொழில், உறவுகள், ஆரோக்கியம், ஆயுள் போன்றவற்றை ஆராய இயலும் என்றாலும் அது விரும்பத்தக்கது அல்ல என்பதால் இத்துடன் பதிவை நிறைவு செய்கிறேன்.

வாழ்க சச்சின்!

மற்றுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்.
அன்பன்.
பழனியப்பன்.

Wednesday 6 November 2013

ஐப்பசியில் சூரிய நமஸ்காரம்

நாம் நன்கு ஆராய்ந்து  பார்த்தோமானால் பரிகாரங்கள் என்று நம் சனாதன வேத தர்மம் கூறுபவை பெரும்பாலும் செயலோடு இணைந்தவைகளே. ஏனையவை மனோரீதியானவை  எனப் புரிந்து கொள்ளலாம்.





உதாரணமாக ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாம் உடல் ரீதியான ஏதேனும் ஒரு குறைபாடு இருப்பதை நன்கு அறியலாம். இன்றைய விஞ்ஞானமும் இதை ஒப்புக்கொள்கிறது. எலும்புகள் பலகீனமாகவும் அதனால் உடலமைப்பில் வலுவற்ற ஒரு தன்மையும் இருக்கும். இவற்றிற்கு காரணம் வைட்டமின் D யை கிரகிக்கும் தன்மை ஐப்பசி மாதத்தில் பிறந்தோற்கு மிகக்குறைவாக இருப்பதுதான். வைட்டமின் D யானது உடலின் கட்டமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்தகைய குறைபாடுகளை போக்கிக் கொள்ள நமது வேதம் ஆரோக்கியத்திற்கு ஆதித்தனை வணங்கு என்றதோடு மட்டுமின்றி சூரியனைப் போற்றிப் பாடும் ஆதித்ய ஹிருதயத்தையும் சூரிய நமஸ்காரம் எனும் வழிபாட்டு முறையையும் வழங்கியுள்ளது.

இந்த சூரிய நமஸ்காரம் செய்வதில்தான் நமது முன்னோர்களின் சாதுரியம் வெளிப்படுகிறது. நன்கு குனிந்து நிமிர்ந்து மூச்சை முறையாக இழுத்துவிட்டுச் செய்யப்படும் சூரிய நமஸ்காரத்தினை நாம் நன்கு கவனித்தோமானால் உடலின் அனைத்து பாகங்களிலும் சூரிய ஒளி நன்றாக விழுமாறும் சூரியன் பதமாக இளம் வெயிலாக விழும் அதிகாலை வேளையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடியுமாறு இவ்வழிபாடு அமைந்திருப்பதை அறியலாம்.(குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் நீடித்தால் வெயில் கடுமையாகி பித்தம் ஏறும்). இதனால் உடலின் அணைத்து பகுதிகளும் சூரியக்கதிர்களிலிருந்து வைட்டமின் D ஐ ஈர்த்து நமக்கு தேவையான வைட்டமின் D கிடைக்கிறது.  

இதே போன்றுதான் ஒரு குறிப்பிட்ட கதியமைப்பில் உச்சரிக்கப்படும் ஆதித்ய ஹிருதயத்தால் நமது உடலின் உஷ்ணாதிக்க உணர்வுகள் தூண்டப்பட்டு அதன்பொருட்டு நமக்குத் தேவையான வைட்டமின் D யை நமது உடலே உற்பத்தி செய்ய வழிவகை செய்திருக்கிறார்கள்.

   உடல் ஆரோக்கியத்தைப் பேண உடற்பயிற்சியை மனதோடு ஒருமுகப் படுத்திச் செய்யும் போது நமக்கு உடலும் உள்ளமும் பலனடைகிறது. இன்றைய நவீன யுகத்தில் செய்யப்படும் எந்த உடற்பயிற்சிக்கும் இது மேலானது இந்த நமது பாரம்பரிய சூரிய நமஸ்காரம். இது நமது ஆயுள் முழுமைக்குமான ஆரோக்கிய வழிபாட்டு முறை.

  ஐப்பசி மாதத்தில் சூரியன் நீச்சமாவதால் இம்மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனின் வலு குறைந்திருக்கும். எனினும் அனைவருமே சூரியன் சாந்த சொரூபமாகக் காட்சியளிக்கும்  இந்த ஐப்பசி மாதத்திலிருந்து இந்தப் பயிற்சியை துவங்கலாம்.

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,
அன்பன்,
பழனியப்பன். 

Sunday 20 October 2013

மாமா உன் பொண்ணக்கொடு

ஒருவரது ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து அவருக்கு அமையவிருக்கும் வாழ்க்கைத் துணைவரின் லக்ஷணங்களை தெளிவாகக் கூற முடியும். அதற்கான தெளிவான வழிகாட்டு முறைகள் பண்டைய ஜோதிட நூல்களின் உள்ளன. இப்பதிவில் நாம் அதில் ஒருவகையான சொந்தங்களுக்குள் திருமண உறவு பற்றி ஆராய்வோம்.

பின்வரும் ஜாதகத்தைக் கவனியுங்கள்.


குடும்ப ஸ்தானத்தில் மாதுல காரகன் (தாய் மாமாவைக் குறிக்கும் கிரகம்) புதன் உச்ச குருவின் நட்சத்திரம் பூரட்டாதியில் அமர்ந்து நீசபங்க ராஜ யோகத்தில் உள்ளார். புதனுடன் லக்னாதிபதியும் விரையாதிபதியுமான சனி மற்றும் களத்திர ஸ்தானாதிபதி சூரியனும் அமைந்துள்ளனர். குடும்ப காரகனும் குடும்ப பாவாதிபதியுமான குரு தாய்   மாமனைக் குறிப்பிடும் 6 வது பாவத்தில் உச்சத்தில் உள்ளார். மாதுல காரகன் குடும்ப   ஸ்தானத்திலும் குடும்ப காரகன் தாய்மாமனைக் குறிப்பிடும் 6 வது பாவத்திலும் அமர்ந்ததால் இந்த ஜாதகிக்கு மாமன் வகையில்தான் திருமணம் அமையும் என்பது மிகத் தெளிவாக விளங்குகிறது. ஜாதகி அத்தை மகனை மணம் முடித்தவர்.

இது தவிர சூரியன் களத்திர பாவாதிபதியாகி குடும்ப பாவத்தில் அமர்ந்ததால் கணவர் அரசுத் துறையோடு தொடர்புடையவர். மேலும் சூரியன் புள்ளிவிவரம், விஷய, ஆவணத் தொகுப்பு போன்றவற்றைக் குறிப்பிடும் புதனுடன் இணைந்து தனகாரகனின் (குரு) வீட்டில் அமர்ந்ததால் கணவர் பணத்தோடு தொடர்புடைய விஷயத் தொகுப்பு தொடர்பான பணி புரியலாம் என அனுமானிக்கலாம். கணவர் கூட்டுறவு வங்கி அதிகாரியாகப் பணிபுரிகிறார்.

தன, போதனை காரகன் குருவின் வீடு 2 வது பாவமாகி அதில் அரசுத் துறையைக் குறிப்பிடும் சூரியனானவர் வித்யாகாரகன் புதனுடன் அமர்ந்ததால் ஜாதகிக்கு கல்வித்துறையில் அரசுப்பணி அமையும் என அனுமானிக்கலாம். அதுவே உண்மையும் கூட. நான் மிகச்சரியாகவே இதைக்  குறிப்பிட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். சனி 2 வது பாவத்தில் அமர்ந்தால் திருமணம் தாமதபடலாம் என்பது ஜோதிட விதி. நடந்ததும் அப்படியே..

பின்வரும் இரண்டாவது ஜாதகத்தைக் கவனியுங்கள். ஜாதகர் ஒரு பெண்.
தாய் மாமனைக் குறிக்கும்  6 ஆம் பாவ அதிபதி சந்திரன் மாதுலகாரகன் புதனின் சாரத்தில் கேட்டை நட்சத்திரத்தில் உள்ளார். உச்சன் புதனின் சாரம் பெற்றதால் சந்திரன் நீச பங்க ராஜஜோகத்தில் உள்ளார். அது மட்டுமல்ல குடும்ப காரனும் குடும்ப பாவாதிபதியுமான குருவுடன் சந்திரன் இணைந்து உள்ளதால் மாமன் வகையில்தான் குடும்பம் அமையவேண்டும். இந்த ஜாதகியும் அத்தை மகனை மணம் முடித்தவர்தான்.

புதனும் சனியும் உச்சம். சந்திரன் உச்ச புதனின் சாரம் பெற்றதோடு குருவும் உச்சனான சனியின் சாரம் (அனுஷம்) பெற்றது சிறப்பு. சூரியன் வித்யாகாரனான உச்சம் பெற்ற புதனுடன் இணைந்து 2 வது பாவத்தைப் பார்ப்பதால் இவருக்கும் ஆசிரியர் பணி அரசுத்துறையில் அமையும் என்பது உறுதி. ஜாதகியின் உடல் எண் 1 ஆகவும் உயிர் எண் 5 ஆகவும் அமைந்தது ஜாதகிக்கு அமையவிருக்கும் அரசு ஆசிரியைப் பணியில் தலைமைப் பொறுப்புக்கு முன்னேறுவார் என்பதைக் குறிப்பிடுகிறது. உச்சம் பெற்ற சனியும் புத- ஆதித்ய யோகமும் இதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. புத-ஆதித்ய யோகம் மற்ற பாவங்களைவிட 1,4,8 பாவங்களில்தான் மிகச் சிறப்பான பலனை அளிக்கும் என்பது அனுபவ உண்மை.

முதல் மற்றும் இரண்டாம் ஜாதகத்திற்கு உள்ள ஒற்றுமை, இரண்டுமே கும்ப லக்னம் என்பதோடு புதனும் குருவும் 2,6 ஆம் பாவ சம்பந்தம் பெற்றதால் இரு ஜாதகியரும் அத்தை மகனைத் திருமணம் புரிந்துள்ளனர் என்பதோடு இருவருக்கும் அரசு ஆசிரியர் பணி அமைப்பு உள்ளது கவனிக்கத்தக்கது. முதலாம் ஜாதகிக்கு அரசு ஆசிரியர் பணி அமைந்துவிட்டது. இரண்டாமவருக்கு அமையும் வாய்ப்பு உறுதியாக உள்ளது.

பின்வரும் சற்று மாறுபட்ட மூன்றாவது ஜாதகத்தை கவனியுங்கள். இவரும் பெண்தான்.

லக்னாதிபதியும் மாத்ரு ஸ்தானதிபதியுமான குரு, தாய் மாமனைக் குறிக்கும் 6 வது பாவத்தில் உள்ளார். குடும்ப காரனுமாக லக்னாதிபதி திகழ்வதால் குடும்பம் தாய் மாமன் வகையில் அமையும் என்பதை இந்த அமைப்பு குறிப்பிடுகிறது. மாத்ரு (தாய்) ஸ்தானாதிபதி 6 வது பாவத்தில் அமர்ந்தால் தாய்மாமன்தான் கணவன் என்பதை அனுமானிக்கலாம். இது மட்டுமல்ல குரு நின்ற 6 வது பாவத்திற்கு 6 ல் மாதுல காரகன் புதன் நிற்பது இதனை உறுதிப்படுத்துகிறது.

குரு, புதன் மற்றும் செவ்வாய் மூன்றும் வக்ரகதியில் இருப்பதும், விருட்சிக-தனுசு ராசி சந்தியில் சனி நின்று களத்திர பாவத்தை பார்ப்பதும், நான் ஜாதகிக்கு தாய்மாமன் மணமகனாக வருவார் என்பதை கணக்கிடத் தவறினேன் என்பதை இவ்விடம் ஒப்புக் கொள்ள வேண்டும். மாதுல காரகன் புதன் பஞ்சமாதிபதி செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் நின்றது, ஜாதகிக்கு தாய்மாமனின் மேல் ஈர்ப்பு உள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது. சனி களத்திர பாவத்தை பார்ப்பது வாழ்க்கைத் துணைவர் வயது வித்தியாசமானவராக அமைவார் என்பதைக் குறிக்கிறது.

அடுத்த பதிவில் சந்திப்போம். 

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,

பழனியப்பன்.

Thursday 17 October 2013

ஐப்பசியில் அற்புதங்களை நிகழ்த்தும் சூரியன்

ஐப்பசி மாதம் வானியல் சுற்று விதிகளின் படி சூரியனின் கதிர்வீச்சு பூமிக்கு மிகக் குறைவாகவே கிடைக்கும். ஏனெனில் சூரியனைவிட்டு வெகு தொலைவில் பூமி தனது நீள்வட்டப் பாதையில் பயணிக்கும்.

சூரியனானவர்  தந்தை, உடல் வலு, அரசு விவகாரங்கள், அதிகார வர்க்கம், தமக்கு வேலையளித்துள்ள முதலாளி,முன்னேற்றத் துடிப்பு, முயற்சி வெற்றி போன்றவற்றிற்கு காரணமானவர். ஜனன ஜாதகத்தில் சூரியனின் பலத்தைப் பொறுத்து மேற்குறிப்பிட்டவற்றிலும் சூரியனின் ஆதிபத்திய வகையிலும் சாதக பாதக பலன்களை அளிப்பார்.

சூரியன் இயல்பில், ஜோதிட விதிகளின்படி பாதி சுபக்கிரகம் பாதி அசுபக்கிரகமாவார். மேலும் தனது சுபாவப்படி சூரியன் சந்நியாசக் கிரகமாவார். அதனால் குடும்ப வாழ்க்கையோடு தொடர்புடைய பாவங்களான 2,4,7,8,12 ஆகியவற்றோடு தொடர்புகொள்ளும்போது குடும்ப வாழ்வில் சிக்கல்களைத் தருவார். எனினும் சில ஜோதிடர்கள் பயமுறுத்துவது போல் சூரியன் விவாகரத்துக்கு ஆதிபத்தியம் பெற்றவறல்ல

பின்வரும் ஜாதகத்தைக் கவனியுங்கள்.

குடும்பகாரகனும் 1,4க்கு உரியருமான குருவானவர் 7,10 பாவங்களுக்கு அதிபதியான புதனுடன் இணைந்து லக்னத்திற்கு  மூன்றில் மறைந்துள்ளார். மேலும் 6,11 பாவங்களுக்கு அதிபதியும் லக்னாதிபதிக்கு பகையானவருமான வக்ரகதியிலுள்ள சுக்கிரனுடன், பாக்யாதிபதியும் லக்னாதிபதிக்கு நண்பருமான சூரியன் குடும்ப ஸ்தானத்தில் அமைந்துள்ளார். களத்திர பாவம் சனி, கேது போன்ற பாவிகளால் கெட்டுள்ளது. இந்த ஜாதகத்தை மேலோட்டமாகப் பார்த்தால் ஜாதகரின் குடும்ப வாழ்வு சிக்கலை சந்திக்கும் என்பதுபோல் தோன்றும். குடும்ப, களத்திர பாவங்கள் கெட்டு சூரியன் 2ல் அமைத்தால் குடும்பம் கெடும் என்பது ஓரளவிற்கே உண்மை. காரணம் சூரியன் லக்னாதிபதிக்கு நண்பன் என்பது மட்டுமின்றி அவர் பாக்யாதிபதி என்பதால் ஜாதகருக்கு இல்லறத்தில் அதிக ஈடுபாடில்லாத சாதாரண இயல்பைக் கொடுத்ததோடு தனது கடுமையை குறைத்துக் கொண்டார்.மேலும் குரு உப ஜெய ஸ்தானத்தில் (3 ல்) அமைந்துள்ளார். புதன் குருவுடன் அதே உப ஜெய ஸ்தானத்தில் அமைந்து வக்ர சனியுடன் பரிவர்த்தனையில் உள்ளார். மேலும் இரு கேந்த்ராதிபதிகள் (குரு, புதன்) இணைந்து உப ஜெய ஸ்தானத்தில் அமைந்தது நன்மையையே தரும்.

களத்திர பாவாதிபதி பரிவர்த்தனையில் அமைந்து தனது பாவத்திற்கு 9 ல் நின்றது நன்மையை அளிக்கும் அமைப்பு. களத்திர பாவத்தில் அமைந்த சனி பரிவர்த்தனை பெற்று குரு பார்வையும் பெற்றதால் ஜாதகருக்கு களத்திர வகையில் அதிக சிரமங்களை தர முடியாதவராகிறார். லக்னத்தோடு ராகு – கேதுக்கள் தொடர்பு கொண்டதன் பலனாவது ஜாதகர் தேசாந்திரம் செல்வார் என்பதாகும். ஜாதகர் தமது தொழில் நிமித்தம் தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பல்வேறு தேசங்களுக்கும் சென்று வருபவர்.

பின்வரும் ஒரு பெண்மணியின் ஜாதகத்தைக் கவனியுங்கள்.
லக்னம் மற்றும் குடும்ப பாவாதிபதி சனி வக்ரமாகி சனியின் பரம சத்ருவும் லக்னத்திற்கு பாதகாதியுமான வக்ர கதியிலிருக்கும் செவ்வாயுடன் சேர்ந்து கெட்டுவிட்டார். குடும்ப காரகன் குருவும் வக்ரமாகி மாந்தியுடன் சேர்ந்து கெட்டுவிட்டார். சந்திரன் 6 ஆம் அதிபதி புதனின் ஆயில்ய நக்ஷத்திரத்தில் அமர்ந்துவிட்டதால் கணவனே எதிரியானான். இந்த நிலையில் சூரியன் அஷ்டமாதிபதியாகி குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்ததால் தயவு தாட்சன்யமின்றி குடும்ப பிரிவினையை விவாகரத்து மூலம் ஏற்படுத்திவிட்டார். 6, 9 ஆம் பாவங்கள் கெட்டு அதன் அதிபதி புதனுடன் சுக்ரன் சேர்ந்து 7 ஆம் பாவத்தை பார்த்ததால் சுக்கிரனால் திருமணத்தை மட்டுமே நடத்தி வைக்க முடிந்தது. திருமண உறவு நீடிக்க வைக்க இயலவில்லை.
  
கீழுள்ள மூன்றாவது ஜாதகத்தை கவனியுங்கள். ஜாதகர் ஒரு பெண்மணி.

இரண்டாம் பாவாதிபதி புதன் வக்ரமாகி கேந்திர பாவியான சூரியனுடன் சேர்ந்து குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து புத ஆதித்ய யோகத்தில் உள்ளார். சூரியன் கேந்திர பாவியானதால் இந்த லக்னத்திற்கு சுபத்தை செய்ய வேண்டியவராகிறார். சுக்கிரன் மூன்றில் அமர்ந்து ராகுவுடன் சேர்ந்து கெட்டதால் தாமத திருமணத்திற்கு வகை செய்தார். குடும்ப காரகன் குருவும் தர்ம கர்மாதிபதி சனியும் நல்ல நிலையில் உள்ளார்கள். சூரியன்  தனது இஷ்ட நண்பன் புதனை அஸ்தமனப்படுத்திவிட்டாலும் சிறிது தாமதத்துடன் திருமணத்தை சிறப்புற நடத்த வழிவிட்டார். அதுவும் எப்படி?. தான் ஒளி குறைந்து, கடுமை குறையும்  மாதமான ஐப்பசியில் திருமணத்தை நடத்திட வழிவிட்டார்.

மருத்துவ கிரகமான புதனுடன் ஆரோக்யத்திற்கு அதிபதியான சூரியன் இணைந்து வருமான ஸ்தானமான 2 ஆம் பாவத்தில் அமர்ந்ததால் ஜாதகியை மருத்துவத்துறையோடு தொடர்புபடுத்தினார்.  ஜாதகி ஒரு சிறந்த நர்ஸ் எனப் பெயரெடுத்தவர் ஆவார். இரண்டாவது பாவத்தில் சூரியன் அமர்ந்ததால் ஆண் வாரிசற்ற தனது வயோதிகப் பெற்றோரைப் பிரிய மனமின்றி தனக்கமைந்த முதலாவது திருமண முயற்சியில் அழைப்பிதழ்களை கிழித்தெறிந்து திருமணத்தை நிறுத்தினார். பிறகு நல்லோர் சிலரது முயற்சியில் மணமுடித்து பெற்றோர்களையும் கண்ணுற கவனித்துவரும் புண்ணியவதி இவர்.

முடிவாக இங்கு குறிப்பிடுவது எண்ணற்ற ஜாதகங்களை ஆராயந்தவகையில் என்னைப் பொருத்தவரை சூரியன் ஒருவரது ஜாதகத்தில் 2வது மற்றும் 7வது பாவங்களும் அவற்றின் பாவாதிபதிகளோடு முக்கியமாக சுக்கிரனும் குருவும் கெட்டிருந்தால் மட்டுமே விவாகரத்துக்கு துணை புரிகிறார்.சூரியனே திருமணத்தை நடத்திவைக்கும் கிரகமாக வந்து அவர் குடும்ப, களத்திர பாவங்களுடன் தொடர்புகொண்டிருந்தால் அவர் சாந்த சொரூபமாக விளங்கும் ஐப்பசி மாதம் திருமணத்தை நடத்திவைப்பதை பல ஜாதகங்களை ஆராயும்போது உணரமுடிகிறது.

இந்த ஐப்பசியில் துலாம் ராசியில் பிரவேசிக்கும் சூரியனால் நற்பலன்களை அடைய துலா ஸ்நானம் காவிரிக்கரையில் செய்வோம்.

மற்றுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்
பழனியப்பன். 

Sunday 30 June 2013

பஞ்ச பூதங்கள்


               
காலையில் நான் எழும் முன்பே அவன் தன் பணியைத் துவங்கிவிட்டான்.
நெருப்பாய்ச் சுடும் அவனால் மதியம் உடம்பெல்லாம் வியர்வை
மாலை ஆறுமணிவரை அவனுடனான கோபம் தீரவில்லை
அந்திச் சூரியன் சாயுமுன் அளவில்லா இதம்!

சைக்கிளோடு என்னை தூக்கிக் கடாசிவிடுவானா?
அவ்வளவு பலசாலியா அவன்?
நான் பலசாலியா அவன் பலசாலியா பார்த்துவிடுவோம்
இந்தக் காற்றுக்காலம் ஒரே தொல்லை!

மனசும் உடலும் மட்டற்ற சுகம்
மாலை நேர நதி மனதை அள்ளுகிறது 
எழுந்து வீட்டிற்குச் செல்லவே மனசில்லை
இந்தக் காவிரியில் வருஷமெல்லாம் நீர்வறாதா?

இந்த மண்தான் என்னை மனிதனாக்கியது
நல்ல சில மனிதர்களோடு வாழும் வாய்ப்பைத் தந்தது
இப்போது அது வேறு உலகமாகத் தெரிகிறது!
எண்பதுகளின் எங்கள் அக்ரஹாரம் தற்போது அடியோடு மாறிவிட்டது

எண்ணில்லா நட்சத்திரங்கள் இந்த ஆகாயத்தில்
எவ்வளவு பிரம்மாண்டம் இந்தப் பிரபஞ்சம்?
எனது வாழ்நாளில் இவற்றின் சூச்சுமத்தை அறிந்துவிடுவேனா?
முடியாது என்கிறது மனம் இருந்தாலும் பேராசைதான்?

அன்பன்,

பழனியப்பன்.

Wednesday 29 May 2013

குருப்பெயர்ச்சியும் மக்களின் எதிர்பார்ப்புகளும்


வாக்கியப்படி நேற்றும் 28.05.13 திருக்கணிதப்படி 31.05.13 அன்றும் குருப்பெயர்ச்சி .

இந்த குருப்பெயர்ச்சியாவது தங்களின் துயர்களைத் தீர்க்குமா?           தங்களால் இனியும் இந்த தேசத்தில் பாதுகாப்பாக வாழ இயலுமா?                தங்கள் குழந்தைகள் இந்த தேசத்தில் நேர்மையாக சம்பாதிக்க முடியுமா?        என்பது போன்ற எண்ணற்ற கேள்விகளை என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற வருபவர்கள் அனைவரும் கேட்கின்றனர். வயதானவர்கள் மற்றுமின்றி சாதாரண குடும்பஸ்தன் கூட தற்போது தேசத்தில் பாதுகாப்புக்கும், நேர்மைக்கு ஏற்பட்டிருக்கும் சோதனைகளினாலும் பெண்கள் – குழந்தைகளின் மீதான  தாக்குதல்களினாலும் அரண்டு போயிருப்பது கண்கூடு.

இந்தக் கேள்விகள் அணைத்திற்கும் பதில்  மேலே உள்ள நமது சுதந்திர பாரதத்தின் ஜாதகத்தில் உள்ளது.

என்னைப்போன்ற எண்ணற்ற ஜோதிட ஆய்வர்களாலும் தேச பக்தர்களாலும் நித்தம் அலசப்படும் ஜாதகம் இது.

தேச விடுதலையின் பொருட்டு நமது ஒட்டுமொத்த தேசத்தின் நலனுக்கான பிரதிநிதியாக கோடானு கோடி மக்கள் காந்திஜியைப் பார்த்தனர்.காந்திஜிக்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அது அவரது தனிப்பட்ட விஷயம். ஆனால் ஒரு தேசத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் நிகழ்வு நேரத்தில் தனது தனிப்பட்ட அபிப்ராயங்களை விலக்கிவிட்டு தேச நலனின் பொருட்டு நல்லதொரு நேரத்தை அவர் தெரிவு செய்திருக்க வேண்டும். எந்தப் புண்ணியவான் தேர்ந்தெடுத்தானோ அந்த நேரத்தை.

லக்னத்தில் ஒரு குரூர பாவி (ராகு) உட்சம். பரம சுபக்கிரகமான குரு பகவான் லக்னத்திற்கு ஆறில் மறைந்தது மகா கொடுமை. ஏனைய கிரகங்களும் யுத்த களத்தில் (லக்னத்திற்கு மூன்றில்). லக்னத்தில் பாவியான ராகு வலுவாக அமைத்ததால்தான் நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் உத்தம புத்திரர்களாக (!) இருக்கிறார்கள். அது மட்டுமா, சொந்த மக்களின் நலன்களை ஒதுக்கிவிட்டு அந்நியர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் கொடுமைகளுக்கெல்லாம் ராகுவே காரணம். சூழ்ச்சிக்காரர்களும் அயோக்கியர்களும் நமது தேசத்தை ஆள்வதற்கும் ராகுவே காரணம். பல வேறு தேசங்களால் சூழப்பட்ட சிறிய நாடுகள் கூட தங்கள் தேசத்திற்கும் தேச மக்களுக்கும் பாதுகாப்பான நல்லாச்சியை வழங்கிவரும் நிலையில், தங்கள் நலனே முக்கியம், மக்கள் எக்கேடு கெட்டால் என்ன? என துணிந்து அரசியல்வாதிகள் இந்த தேசத்தை கொள்ளையடித்துக் கொண்டிருப்பதற்கு ராகுவே காரணம். ரிஷப லக்னத்திற்கு பரம சுபனான சனி மூன்றில் கிரக யுத்தத்தில் அமைந்து சுதத்திரமடைந்த நாளின் கூட்டுத் தொகையும் ஆக (1+5+8+1+9+4+7 = 8) அமைந்தது  மக்களின் துயரங்களுக்கு விடிவே இல்லாமல் செய்துவிட்டது.
நமது தேசத்தை ஆள்பவர்கள் ராகுவின் அம்சங்களாகவே இருப்பதன் காரணம் சுதந்திர இந்தியாவின் லக்னத்தில் ராகு வலுவாக அமைந்ததனால்தான்.

ராகுவானவர்  சூழ்ச்சி, பித்தலாட்டம், விதவை, தாதாயிசம், கள்ளக்கடத்தல்,இஸ்லாமியம், மறைமுக செயல்பாடு, பின்னாலிருந்து இயக்குதல் (கேது – கிறிஸ்தவர்களைக் குறிக்கும்) போன்றவற்றைக் குறிக்கும்.

இந்தியாவை அதிகக் காலம் கட்டுப்பாட்டுடன் வெற்றிகரமாக ஆட்சி செய்தவர் இந்திரா பிரியதர்சினி என்ற இயற்பெயர் கொண்ட இந்திரா காந்தி. பெரோஷ்கான் என்ற இஸ்லாமியரைத் திருமணம்  செய்ய முஸ்லிமாக மதம் மாறி மைமூனா பேகம் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டவரே. காஷ்மீரி பண்டிட்கள் எந்த முஸ்லிம்களால் காஷ்மீரிலிருந்து விரட்டப் பட்டார்களோ அதே முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த பெரோஷ்கானை காஷ்மீரி பண்டிட் இனத்தைச் சேர்ந்த இந்திரா மனம் புரிந்தது காலத்தின் அதிசயங்களில் ஒன்றுதான். எனவே இஸ்லாமியப் பெண்மணியாக மதம் மாறிய இந்திரா  ஒரு முழுமையான ராகுவின் அம்சமே. பிற்பாடு தனது தாய் மதத்திற்கு இந்துவாக மாறி தனது கணவர் பெரோஷ்கானையும் இந்துவாக மதம் மாற்றி பெரோஸ் காந்தியாக்கினார். ஆனால் தேசத்தை ஆட்சிசெய்பவர் தனது அம்சமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரை ராகு விதவைப் பெண்மணியாக மாற்றிவிட்டது கொடுமை.(விதவைப் பெண் ராகுவின் அம்சம்). இந்தியாவை தற்போது பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருக்கும் சோனியா காந்தி, 13 ஆம் தேதி பிறந்த வாஜ்பாய் (1+3 = 4 ராகுவைக் குறிக்கும் எண்) உள்ளிட்ட அணைவரும் ராகுவின் அம்சங்கள்தான். இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர்களின் ஜாதகங்களை ஆராய்ந்தால் அவர்கள் ராகுவின் அம்சங்களாகவோ அல்லது ராகு திசை அல்லது ராகு புக்தியில் ஆட்சி செய்தவர்களாகவோ இருப்பதைக் காணலாம்.

இப்படி சனியாலும் ராகுவினாலும் ஆட்டுவிக்கப்பட்ட நமது தேசம் 2009 ன் மத்தியில் உலகை இயக்கும் சக்திகளுள் ஒன்றான வல்லரசாக மாறி விட்டதை சுதந்திர இந்தியாவின் ஜாதகம் உணர்த்துகிறது. தற்போது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு திசா புக்தியின் அடிப்படையிலும் கோள்சாரத்தினடிப்படையிலும் தேச மக்களுக்கு ஒரு நல்ல காலம் பிறந்துள்ளது. இந்த குருப் பெயர்ச்சி நமது தேசத்திற்கு செய்யவிருக்கும் நன்மைகள் பல.

அவற்றுள் ஒரு சில இதோ.

சூழ்ச்சி, பதுக்கல்,தாதாயிசம் படிப்படியாக ஒழிக்கப்படும்.
பொருளீட்ட குறுக்கு வழியைக் கையாளுபவர்கள் ஒடுக்கப்படுவர் & தண்டிக்கப்படுவர்.

தேச விரோத சக்திகளை ஒதுக்கி சிறந்த ஒரு முடிவை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளிக்க முன்வருவர்.

நீதித்துறை, கல்வி, மனித வளம் போன்ற துறைகள் சிறப்பாகச் சீரமைக்கப்படும்.

முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனின் பொருட்டு புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு அவை உடனடியான பயன்பாட்டுக்கு வரும்.

பெண்கள், குழந்தைகள் தொடர்பான வழக்குகள் தீவிர முனைப்புடன் செயல்படுத்தப்படும்.

தொலைக்காட்சி, பத்திரிகை, கம்ப்யூட்டர்  போன்ற ஊடகத்  துறைகளை மத்திய அரசு புதிய சட்டங்களை இயற்றி கட்டுப்படுத்தும்.

ராணுவம், காவல், உள்நாட்டுப் பாதுகாப்பில் நவீனத்துவம் புகுத்தப்படும்.

பாரம்பரியத் தொழில்களில் நவீனமான மாறுதல்கள் ஏற்படும்.

விவசாயம், நீர் மேலாண்மை போன்ற துறைகள் அயல்நாடுகளின் ஒத்துழைப்புடன் சிறப்பான மாறுதல்களைக் காணும்.

சிறு தொழில்கள் அரசின் கனிவான பார்வையால் முன்னேறும்.

தங்கத்தின் மதிப்பு கட்டுப்படுத்தப்படும்.

பங்கு வணிகம் மேலும் சில சீர்திருத்தங்களைக் காணும்.

மேலை நாடுகள் தங்களது இந்திய பங்குச் சந்தை முதலீடுகளை பெருமளவில் குறைத்துக் கொள்ளும்.(தனகாரகன் குரு இந்தியாவின் கடக ராசிக்கு 12 ல் மறைவதால் இது ஏற்படும்)

இதனால் ஏற்படும் பாதிப்புகளை சில சிரமங்களுடன் தேசம் 

சமாளித்துவிடும்.(கடக ராசிக்கு 6 ஆமதிபதி குரு 12 ல் மறைவதால் விபரீத ராஜயோகம் செயல்படும்)




காங்கிரஸ் கட்சி  ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தியாவை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதைக் கண்டு உலக நாடுகள் ஆச்சரியப்படும்.

சிறு, குறும் கட்சிகள் தலையெடுக்காமல் காங்கிரஸ் பார்த்துக் கொள்ளும்.
காங்கிரசின் சூழ்ச்சியால் தாங்கள் சிதறுண்டு போவதை தடுக்க முடியாமல் சிறு மற்றும் தேச விரோத கட்சிகள் செய்வதறியாது திகைக்கும்.
தேசம் இருகட்சி முறைக்கு மாறுவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடக்கும். (தற்போது குரு இடம் பெயர்ந்துவரும் ராசி இரட்டை ராசியான மிதுன ராசி என்பதை கவனிக்கவும்).

எனினும் தமிழ்நாடு துலாம் ராசி அமைப்பில் வருவதாலும், ஏழரைச்சனி தற்போது துலாம் ராசிக்கு நடப்பதாலும் தமிழக மக்கள் இன்னும் சில ஆண்டுகள் வேதனைப்பட நேரும். எனினும் தற்போதைய குருப்பெயர்ச்சி தமிழகத்திற்கு பல உபயோகமான நன்மைகளை அளிப்பது உறுதி. மக்கள் தமிழக அரசியல்வாதிகளால் தாங்கள் எப்படியெல்லாம் துயரங்களுக்கு ஆளாகிறோம் என்பதை உணர்ந்து கட்சி வேறுபாடின்றி நல்ல ஆட்சிமுறைக்கு ஆதரவளிக்க முன்வருவர். மின்வெட்டின் தீவிரம் பெருமளவில் குறையும் என்றாலும் 2014 டிசம்பரில் நடக்கும் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகே தமிழகத்தில் மின்வெட்டு 90%  குறையும்.

உலக நடப்புகளைப் பொருத்தவரை தற்போதைய குருப்பெயர்ச்சி அமெரிக்காவிற்கு பெருமளவில் நன்மைகளை வழங்கும்.அமெரிக்காவின் ராசி மற்றும் லக்னம் இரண்டையும் குரு மிதுனராசிக்கு மாறியவுடன் பார்ப்பார் என்பதுதான் காரணம்.இந்தியாவின் ரிஷப லக்னம் அமெரிக்காவின் தனுசு லக்னத்திற்கு சஷ்டாஷ்டகமாக  (6 – 8 ) வருவதும் இந்தியாவின் கடக ராசிக்கு அமெரிக்காவின் கும்ப ராசி (6 – 8 ) ஆக சஷ்டாஷ்டகமாக அமைந்ததும் இவ்விரு நாடுகளும் எப்போதுமே ஒத்துப்போகாது என்பதைக் காட்டுகிறது. ஒருகையில் ரோஜாவையும் மறுகையில் ஆயுதத்தையும் கொண்டே இவ்விரு நாடுகளின் உறவும் அமையும். அதனால்தான் நமது நிம்மதியைக் குலைக்க பாகிஸ்தானிற்கு இலவசமாகவே பொருளாதார உதவிகளையும்  எண்ணற்ற ஆயுதங்களை வழங்கி வருவதும் தெரிகிறது. ஆனால் கிரகங்களில் ராகு கேதுக்கள்தான் வலுவானவை என்பது எப்போதும் உண்மை. அமெரிக்கா அவ்வாறு அளித்த ஆயுதங்களால் அதன் நிம்மதியே பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் காலச் சூழ்நிலை இவ்விரு நாடுகளையும் இந்தியாவின் திசா புக்தி அடிப்படையில் கடந்த 2009 முதல் நெருங்கி வர வழி செய்துள்ளது. அது மட்டுமல்ல தற்போதைய குருப்பெயர்ச்சி இவ்விரு நாடுகளும் இணைந்து உலக நடப்புகளில் வரும் ஆண்டுகளில் பல பெரும் நிகழ்வுகளை கட்டுப்படுத்த இருப்பதை உறுதி செய்கிறது. தற்போது பல ரௌடி நாடுகள் மற்றும்  தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாகத் திகழும் நாடுகளின் அடிப்படை கட்டமைப்பை இந்தியா, அமெரிக்காவுடன் வேறு சில நாடுகளும் சேர்ந்து செயல்பட்டு மாற்றியமைக்கும் என்பது புலனாகிறது. ஸ்ரீலங்கா, மாலத்திவுகள், மொரீஷியஸ், தாய்லாந்து, வியட்நாம்  போன்ற நாடுகளில் தீவிரவாதம், மதவாதம், பிரிவினைவாதம், ரௌடிசம் தலை தூக்காமல் இந்தியாவினால் பாதுகாக்கப்படும். தமிழகத்துப் பிரிவினை வாதிகள் கடலில் மூழ்கும் மனிதனின் கடைசி நேர கூக்குரல் போல 2016 ஜூன் வரை சப்தமிடுவார்கள் பிறகு  காணாமல் போவார்கள்.


வாழ்த்துக்களுடன்,
பழனியப்பன்.

பின்குறிப்பு:
மேற்சொன்ன கருத்துக்கள் விருப்பு வெறுப்பற்ற தன்மையுடன் எனது ஜோதிட ஆய்வுநோக்கில் கூறப்பட்டவை.. எந்த இன,மத,தேச மக்களையும் சிறுமைப்படுத்தும் எண்ணத்துடன் கூறப்பட்டவைகள் அல்ல என்பதை அறியவும்.