Friday 31 July 2020

உயர் கல்வியும் வேலை வாய்ப்புகளும்!



கல்வியின் நோக்கம் மனிதனை பண்புடையவனாக உருவாக்குவதே என்ற நிலையிலிருந்து வேலை வாய்ப்பை வழங்குவதே என்றொரு கருத்து இன்று நிலைபெற்றுவிட்டது. இன்றைய காலத்தில் கல்வியையும் கருத்தில்கொண்டே ஒருவரின் சமுதாய தகுதி அமைகிறது. ஞானிகளின் கல்வி இந்த வரையறைகளுக்கு அப்பாற்பட்டது. அவர்களின் கல்வித்தேடல் ஆன்மாவிற்கானது. உயர் கல்வியை தேர்ந்தெடுக்கையில் அது ஒருவரின் தகுதியை உயர்த்துவதற்கானது என்பதைத்தாண்டி அது சம்பாத்தியத்தை வழங்கும் அமைப்புகளோடு ஜாதகத்தில் தொடர்பாகிறதா என பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் உயர்கல்வியால் பயனற்ற நிலைதான் ஏற்படும். இக்கருத்தை ஆராய்வது மாணவ மாணவிகள் உயர்கல்வியை தேர்ந்தெடுக்க உறுதுணையாக இருக்கும்.  தேர்வு முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையின் இன்றைய பதிவு முக்கியத்துவம் வாய்ந்தது.


மேக்கண்ட ஜாதகம் ஒரு ஆணினுடையது. லக்னத்தில் ராகு உள்ளது. ராகு வளர்ச்சிக்கான முதன்மைக்கிரகம் என்பதால் ஜாதகர் எதிலும் தீவிர முனைப்பில் இருப்பார் எனலாம். ஜாதகத்தில் குருவும் சனியும் பரஸ்பர பார்வையில் உள்ளன. இது  ஜாதகருக்கு ஜீவனச்சிறப்பை தரவல்லது. ஜோதிடத்தில் 2 ஆம் பாவம் பால்ய கல்வியையும் 4 ஆம் பாவம் பள்ளிக்கல்வியையும் 9 ஆம் பாவம் உயர் கல்வியையும் குறிப்பிடும் பாவங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஜாதகர் பள்ளிக் கல்வியைத்தாண்டி உயர் கல்வியில் பொறியியல் படித்தார். உயர் கல்வியை ஆராய 9 ஆம் பாவத்தோடு 9 ன் திரிகோணங்களையும் குறிப்பாக 9 க்கு 9 ஆம் பாவமான 5 ஆம் பாவத்தையும் ஆராய வேண்டும். 5 ஆம் பாவம் புதனின் வீடாகி அங்கு செவ்வாய் அமைகிறார். இதனால் புதன் செவ்வாய் தொடர்பு குறிப்பிடும் பொறியியலை உயர் கல்வியில் ஜாதகர் தேர்ந்தெடுத்தார். அங்கு சூரியனும் செவ்வாயோடு இணைந்து நிற்பதால் பொறியியலில் உயர்நிலை (M.Tech) வரை  ஜாதகர்  படித்தார். 5 ஆமிடத்தில் 1௦ ஆமதிபதி செவ்வாய், வர்கோத்தம சூரியனோடு இணைந்து நிற்பதால் ஜாதகர் உயர் கல்வி மூலம் அரசு வேலை பெறுவார் என்பது புலனாகிறது.

இப்போது ஜாதகரின் சம்பாத்திய நிலையை காண்போம். ஜாதகரின் சம்பாத்திய நிலையை குறிப்பிடும் பாவங்கள் 6 மற்றும் 1௦ ஆம் பாவங்களாகும். சம்பாத்தியத்தை ஆராய பொதுவாக 6 ஆம் பாவத்தோடு  1௦ ஆம் பாவத்தையும் 1௦ க்கு 1௦ ஆன 7 ஆம் பாவத்தையும் ஆராய வேண்டும்.  6 ஆம் பாவத்தில் புதன் நிற்கிறார். 1௦ ஆம் பாவாதிபதி செவ்வாய் வாயு பாவமான மிதுனத்தில் நிற்கிறார். ஜாதகரின் லக்னமே வாயு பாவமான கும்பமாகும். 1௦ க்கு 1௦ ஆம் பாவமான சிம்மத்தில் சுக்கிரன் கேதுவோடு இணைந்து நிற்கிறார். வாயு ராசிகளும்  ராகு-கேதுக்களும்  விண்வெளியையும் சுக்கிரன் வானவூர்த்தியையும் குறிப்பிடுபவை. ஜாதகர் ISRO வில் விஞ்ஞானியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இரண்டாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம்.


இந்த ஜாதகியும் M.Tech படித்தவர்தான். ஜாதகத்தில் சந்திரன் உச்சமாகி ராசியாதிபதி சுக்கிரன், புதனோடு பரிவர்த்தனையும் ஆகியுள்ளதால் ராசியே வலுவாக அமைந்துள்ளது. இதனால் ராசியே ஜாதகியை வழிநடத்தும். ராசிப்படி உயர்கல்வியை குறிக்கும் 9 ஆமிடமான மகரத்திற்கு 9 ஆமிடம் புதனுடைய வீடான கன்னி அமைகிறது. கன்னியை  ராகுவோடு இணைந்த செவ்வாய் 8 ஆம் பார்வையாக பார்ப்பதால் ஜாதகி பொறியியலில் M.Tech  படித்தார். உண்மையில் ஜாதகி மருத்துவம் படிக்க விரும்பினார். ஆனால் ஜாதகத்தில் சூரியன், புதன், கேது ஆகியவை சாதகமாக அமையாததால் அது சாத்தியமில்லாமல் போய்விட்டது.

இப்போது ஜீவனத்திற்கு வருவோம். ராசியில் சந்திரன் சூரியனோடு இணைந்து உச்சமாகியுள்ளார். சூரியன் 3 பாகையிலும் சந்திரன் 22 பாகையிலும் புதன் 25 பாகையிலும் அமைந்துள்ளனர். சுக்கிரன் 6 பாகையில் அமைந்துள்ளது. பரிவர்த்தனைக்குப்பின் புதனின் பாகைக்கு சுக்கிரன் வருவதால் சுக்கிரன் அஸ்தங்கமடையாது. ராசியாதிபதி சுக்கிரனுக்கு சூரியனால் சுயதொழில் எண்ணமும் உச்ச வளர்பிறை சந்திரனால் சந்திரன் சார்ந்த தொழில் சிந்தனையும் ஏற்படும். இக்கிரகங்கள் ராசிக்கு 1௦க்கு 1௦ ஆகிய விருட்சிகத்தை பார்க்கின்றனர். இதனால் இக்கிரகங்களே ஜாதகியின் வருமான வகையை தீர்மானிக்கின்றன. சந்திரனின் தாக்கமே இதில் அதிகம் இருக்குகிறது. அந்த தாக்கத்தால் ஜாதகி சந்திரன் குறிக்கும் ஆடை வியாபாரம் செய்துவருகிறார்.  

கீழே மற்றொரு பெண்ணின் ஜாதகம்.


இந்த ஜாதகத்திலும் சந்திரன் உச்சமாகியுள்ளது. கேது சந்திரனை கடந்துவிட்டது. பாவத்தில் கேது மேஷத்தில் அமைத்துள்ளார். லக்னாதிபதி சூரியனும் சந்திரனின் ஹஸ்தத்திலேயே நிற்கிறது. இதனால் ராசியே ஜாதகியை வழிநடத்தும்.  உயர் கல்வியை குறிக்கும் ராசிக்கு 9 ல் எந்த கிரகமும் இல்லை. 9 க்கு 9 ஆம் பாவமான கன்னியில் சூரியனுடன் குரு இணைந்துள்ளார். இதனால் கன்னியைக்கொண்டே உயர்கல்வியை தீர்மானிக்கவேண்டும். உச்ச சந்திரன் கேது தொடர்புபெற்று கன்னி உயர்கல்வியை தீர்மானிப்பதால் இந்த ஜாதகி கேது, சூரியன் மற்றும் கன்னி ராசி குறிப்பிடும் மருத்துவம் (MBBS) பயின்றார். இப்போது மருத்துவத்தில் உயர் கல்வி பயிலவுள்ளார். இப்போது உயர்கல்வியில் ஜாதகப்படி என்ன கல்வியை தேர்ந்தெடுத்தால் ஜீவனத்தில் சிறந்த நிலை அமையும் என 4 பிரிவுகளை மனதில்கொண்டு ஜாதகி சார்பாக ஆலோசனை கேட்கப்பட்டது. ஜாதகி சார்பாக ராகு குறிப்பிடும் கதிர்வீச்சியல் (Radiology), கேது+சந்திரன் சேர்க்கை குறிப்பிடும் மனநிலை மருத்துவம் (Psychiatry), மயக்க மருந்தியல் (Anesthesia), சூரிய சந்திரர்கள் குறிப்பிடும் கண்ணொளியியல் (Ophthalmology) ஆகியவற்றை வாய்ப்புக்களாக ஜாதகி கேட்டிருந்தார். இப்போது ஜீவனத்தில் முக்கிய பங்காற்றும் கிரகம் எது என பார்ப்போம்.

ஜாதகத்தில் முக்கிய ஒளி கிரகங்களான சூரியனும் சந்திரனும் அமைந்துள்ளனர். கேது சந்திரனை கடந்துவிட்டதால் கேது சந்திரன் குறிப்பிடும் மயக்க மருந்தியலும் மனோவியலும் புறந்தள்ளப்படலாம். சந்திரன் லக்னத்திற்கு 1௦ ல் அமைந்து உச்ச சந்திரனின் சாரத்தில் சூரியன் அமைவதால் கண்ணொளி மருத்துவத்தில் சிறப்பு ஏற்படலாம். ஜீவனத்தைப்பொறுத்தவரை ராசிக்கு 1௦ ஆமிடத்தில் சனி செவ்வாயின் அவிட்டம்-3 ல் வக்கிரம் பெற்ற நிலையில் அமைந்துள்ளது. ஆனால் ராசிக்கு 1௦ க்கு 1௦ ஆன விருட்சிகத்தில் ராகு, சனியின் அனுஷம் – 3 ல் அமைந்துள்ளார். பொதுவாக வக்கிரம் பெற்ற கிரகங்கள் நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு-கேதுக்களை சார்ந்தே   செயல்படும். இதனால் ஜீவனத்தை ராகு தீர்மானிக்க வாய்ப்புள்ளது. இதனடிப்படையில் கண்ணொளி மருத்துவம் (Ophthalmology) மற்றும் கதிர்வீச்சியல் (Radiology) ஆகியவை பறிந்துரைக்கப்பட்டது.  ஜாதகி தற்போது Radiology ல் இணைந்துள்ளார்.

உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனமும் நிதானமும் இருக்கவேண்டும். ஏனெனில் அதன் அடிப்படையில்தான் வேலைவாய்ப்பும் சமுதாய மதிப்பும் வாழ்வியல் உயர்வுகளும் ஏற்படுகின்றன. இன்றைய நிலையில் வேலை வாய்ப்பினை பொறுத்தவரை எண்ணற்ற வாய்ப்புகளும், துறைகளும் பெருகிவிட்டன. இதனால் வேலைதரும் துறைகளை துல்லியமாக அளவிடுவதில் ஜோதிடர்களுக்கு சிரமங்கள் ஏற்படும்  என்றாலும் அதில் சரியான வாய்ப்புகளை ஒரு தேர்ந்த ஜோதிடரால் பரிந்துரைக்க முடியும்.

உங்களுக்கான வாய்ப்புகளை தெரிந்துகொள்ள என்னை தொடர்புகொள்ளலாம்.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,


அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501

Saturday 25 July 2020

காம புதனின் காதல் சேட்டைகள்!



ஜோதிடத்தில் புதன் ஒரு முக்கிய கிரகம். புதன் ஜோதிடத்தில் புத்திகாரகன் என வர்ணிக்கப்படுகிறார். புத்தியைக்கொண்டு எதையும் சாதிக்கலாம் என்பதால்தான் “பலவான் புத்திமான்” என்கிறார்கள்.  புதன் காதலுக்கு உரிய கிரகமாகவும் கருதப்படுகிறது. "எத்தனை பெரிய புத்திசாலியும் காதல் வயப்பட்டுவிட்டால் முட்டாளாகிவிடுகிறான்" என நகைச்சுவையாக ஒரு கருத்து சொல்லப்படுவதுண்டு. காதலில் புத்தியை உணர்வுகள் வென்றுவிடுகின்றன. ஆனால் காதலுக்கும் புத்திக்கும் உரிய ஒரு கிரகம் தனது காரகத்துவங்களிலேயே ஒன்றை வென்று ஒன்றை தோல்வியடைய வைக்கிறது. இது ஒரு ஆச்சரியமான விஷயம். புதன் காதலன்-காதலி, நண்பர்கள் ஆகியவர்களையும் குறிப்பிடும் கிரகமாகும். புதனால் ஒரு காதல் ஏற்பட்டால் அது ஒரு காலத்தில் வெற்றியடையாமல் விலகிச்சென்றாலும் மீண்டுமொருமுறை தேடிவரும். நல்ல நண்பர்களையே காதலர்களாக அடைபவர்கள் கொடுப்பினைகொண்டவர்கள். அவர்களையே திருமணம் செய்பவர்கள் பாக்கியசாலிகள். புதன் ராகுவோடு தொடர்புகொண்டு 7 ல் நின்று அங்கு களத்திர காரகர்களும் கெட்டிருந்தால் அங்கு காமக்களியாட்டம்தான். சொல்ல, எண்ண முடியாத  நிகழ்வுகளையெல்லாம் இச்சேர்க்கை நடத்திக்காட்டும். கயிலாயத்தையே இலங்கைக்கு பெயர்த்துவரத் துணிந்தான் ராவணன். ஆனால் சீதை மீது கொண்ட முறையற்ற காதலால் அனைத்தையும் இழந்தான். புத்தியால் வெல்ல இயலாத எதிரியைக்கூட காதலும் காமமும் வென்றுவிடுகின்றன.  

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம். 


விருட்சிக லக்னத்திற்கு 6 ல் கேது சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. கேதுவின் திரிகோணத்தில் சந்திரன் சுக்கிரனின் பூராடத்தில் அமைந்துள்ளது. சந்திரனின் திரிகோணத்தில் கேது அமைந்து இருவரும் ஒரு கிரக சாரம் பெற்றதால் இவர்களுக்கிடையேயான தொடர்பு வலுவானதாக அமைகிறது. சந்திரன் பாதகாதிபதியாகி குடும்ப ஸ்தானத்தில் வந்து அமைவதால் ஒரு பெண்ணால் பாதிப்பு வரும் என அனுமானிக்கலாம். நட்பு, காதலர்களை குறிப்பிடும் புதன் உச்சமாகி காதல் பாவமான 5 ஆமிடத்தை பார்க்கிறது. புதனின் இந்த அமைப்பால் இந்தப்பெண்ணுக்கு இயல்பாகவே காதலுணர்வு இருக்கும். ராகு காம, களத்திர ஸ்தானாதிபதி சுக்கிரனோடும் குடும்ப காரகன் குருவோடும் இணைந்து தாம்பத்ய ஸ்தானமான 12 ஆமிடத்தில் நிற்கிறது.  இந்த ராகு புதனுக்கு அடுத்த ராசியில் இருந்து புதனை நோக்கி வருகிறார். இதனால் இந்த ஜாதகியின் இயல்பான காதலுணர்வில் விபரீதமான எண்ணங்கள் எழும்.

நட்பு பாவமான 4 ஆமதிபதி சனி, சதயம்-3 ல் நின்று ராகுவோடு தொடர்பாகிறது. இதனால் நட்பையே காதலாக என்னும் எண்ணம் இப்பெண்ணுக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் ராகுவோடு இணைந்த களத்திர பாவாதிபதி சுக்கிரனின் பூராடம்-3 ல் உணர்ச்சிகளுக்குரிய சந்திரன் நிற்கிறார். உச்ச புதன் ஹஸ்தம்-4 ல் நின்று  2 ஆமிட சந்திரனோடு தொடர்புகொள்கிறார். சந்திரன் மற்றும் புதனின் இத்தகைய தொடர்பால்  ஏற்படும் உணர்ச்சித்தூண்டலில்  காதல் மூலம் குடும்பத்தில் சில விபரீத எண்ணங்கள் ஜாதகிக்கு எழும். கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருட்சிகமே காம உணர்வுகளை பிரதிபலிக்கும் ராசியாகும். காரணம் 8 ஆமிடம் என்பது உடலுறவை குறிப்பிடும் இடம் என்பதால்தான். இந்நிலையில் லக்னாதிபதி செவ்வாய் லக்னத்திற்கு 8 ல் கால புருஷனுக்கு போக ஸ்தானாமான மிதுனத்தில் அமைந்து அதன் அதிபதி உச்ச புதனை பார்க்கிறது. லக்னாதிபதி செவ்வாய் இப்படி அமைவதால் ஜாதகிக்கு புதனின் காரகத்துவங்ளான நட்பு மற்றும் காதலில் அதிக தூண்டுதலை ஏற்படுத்தும்  12 ஆமிட ராகுவும் புதனை நோக்கி வருகிறது. மூலத்திரிகோணத்தில் உச்சம் பெற்ற தனித்த புதன் சிறப்பாக அமைத்திருப்பது போல இருந்தாலும் செவ்வாயும் ராகுவும் புதனை அதன் இயல்பிலிருந்து மாற்றுகின்றன. இதனால் புதன் காமத்தில் மாறுபட்ட பல்வேறு கோணங்களை ஜாதகியை எண்ண வைக்கிறது.

இந்த ஜாதகிக்கு 2 ஆமிடதில் நிற்கும் சந்திரனின் திசையில் சந்திரன் சாரம் பெற்ற லாபாதிபதி புதனின் புக்தியில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த பிறகு ராசிக்கு காதல் பாவமான 5 ஆமிடத்தில் மேஷத்தில் நிற்கும் காதலை குறிக்கும் மற்றொரு கிரகம் கேதுவின் புக்தி துவங்கியது. கேது சுக்கிரனின் சாரம் பரணி-4 ல் நிற்கிறது. 7 ஆமதிபதி சுக்கிரனுக்கு திரிகோணத்தில் பள்ளி நட்பை குறிக்கும் 4 ஆம் பாவத்தில் சனி நிற்கிறது. இதனால் மணமான பின்னும் பள்ளி நட்பு காதலெனும் தீயாய் சுடுகிறது. புதன் விட்டுப்போன தொடர்பை ஒரு காலத்தில் மீண்டும் தேடிவரச்செய்யும். அப்படி பள்ளி நட்புகள் மீண்டும் சில வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்டன. ஆனால் வாழ்க்கைச்சூழல்கள் இருவருக்கும் திருமணம் எனும் நிலையால் மாறியிருந்தன. இப்போது சந்திர புக்தியில்   கேது புக்தியில் ஜாதகி தனது பள்ளி நட்பை எண்ணி கணவரை பிரிகிறார். சுக்கிரனின் புக்தியிலும் ஜாதகி கணவரை பிரிந்துதான் இருந்தார்.

சுக்கிரனின் திரிகோணத்தில் நின்று குரு பார்வை பெறும் கணவரான செவ்வாய் தனது மனைவியை புரிந்துகொள்ள முயற்சிக்கிறார். செவ்வாய்க்கு குரு பார்வை இருந்ததால் கணவர் ஜாதகியின் நிலையை புரிந்துகொண்டார். ஜாதகிக்கு சந்திர திசையில் திக்பலம் பெற்ற சூரியனின் திசை துவங்கியதும் கணவர் ஜாதகியை உளவியல் முறையில் அணுகி பள்ளிக்காதலில் இருந்து தனது மனைவியை மீட்டெடுத்தார். நட்பை குறிக்கு 4 ஆம் பாவாதிபதி சனி தனது பாவத்திலேயே வக்கிரமாகியுள்ளது. இதனால் திருமணமான பள்ளி நண்பர் ஜாதகியின் எண்ணங்களை புறந்தள்ளினார். திக்பலம் பெற்ற சூரியன் பாதகாதிபதி சந்திரனுக்கு திரிகோணத்திலும் 12 ஆம் பாவ ராகு, சுக்கிரனுக்கு பாதகத்திலும் உச்ச புதனுக்கு விரையதிலும் நின்று புக்தி நடத்தியதால் அது சாத்தியமாயிற்று.  

இந்த ஜாதகி திருமணமான பின்னும் தனது பள்ளிதோழியை மறக்க இயலாமல் தோழியுடன் இணைந்து வாழ எண்ணி தனது கணவரை பிரிந்து சென்றார். தோழிக்கும் திருமணமான நிலையில் இப்பெண்ணின் கருத்தை நிராகரித்தார். ஜாதகியின் குடும்ப வாழ்வை சூரியன் காப்பாற்றினார். தற்போது ஜாதகி கணவருடன் இணைந்து வாழ்கிறார்.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501

Saturday 11 July 2020

இன்பக்கவி!



நமக்கு ரத்தத்தொடர்பு இல்லாவிட்டாலும் எதோ ஒரு வகையில் நம்மை பாதித்த ஒருசிலரை  நினைக்கும்போது மனம் கனிவுகொள்ளும். ஆனால் தமிழறிந்த அனைவருக்கும் அப்படி ஒருவரே இருந்தார் என்றால் அது ஆச்சரியம்தான். கவிஞர் கண்ணதாசன் அப்படி தமிழர்கள் அனைவராலும் நினைவுகூறத்தக்கவர். தமிழகத்தில் அடையாளங்கள் என்று ஒரு பட்டியலிட்டால் அதில் கவிஞர் கண்ணதாசன் முக்கிய இடம் வகிப்பார். அவர் நூறாண்டுகளுக்கு ஒருமுறை மலரும் அபூர்வு மலர் எனலாம். அண்ணாரது ஜாதகத்தை எனது பாணியில் இப்பதிவில் ஆராய்ந்திருக்கிறேன்.    


கவிஞரின் ஜாதகத்தில் மேஷச்சந்திரனும் கடக்கச்செவ்வாயும் பரிவர்த்தனை. கவிஞர் மேஷ ராசி என எடுத்துக்கொண்டால் ஜாதகர் முரட்டுப்பிடிவாதமும் மூர்க்கத்தனமும் முன்கோபமும் கொண்டவராக இருக்கவேண்டும். மேஷ ராசிக்காரர்களை சண்டைக்கோழி என குறிப்பிடுவது சரியாகப்பொருந்தும். பரிவர்தனைக்குப்பின் சந்திரன் கடகத்தில் ஆட்சி பெறுகிறது என எடுத்துக்கொண்டால் தாய்மை உள்ளம், கஷ்டத்தை கண்டு கண்ணீர் சிந்துவது, அழகியல், கற்பனைவளம், குடும்பப்பற்று, அபாரமான நினைவுத்திறன், அரசியல், உணர்ச்சித்தூண்டல் என சொல்லிக்கொண்டே போகலாம். கவிஞரின் ஜாதகத்தில் சந்திரன் கடகத்தில் நின்று செயல்பட்டுள்ளதை நாமறிந்த அவரது வாழ்க்கை அடிப்படையில் அனைவரும் உணரலாம். பரிவர்த்தனைக்குப்பிறகு சென்று அமரும்  இடத்திற்கே கிரகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படும் என்பதற்கு இவரது ஜாதகம் ஒரு மிகச்சிறத்த எடுத்துக்காட்டு. ராசி பரிவர்த்தனையாகி பரிவர்த்தனை கிரகத்தோடு திக்பலமடைவதால் லக்னத்தைவிட ராசி வலுவடைகிறது. லக்னம் செயல்பட்டால் ஜாதகருக்கான சூழல் தானாக அமையும். ராசி செயல்பட்டால் ஜாதகர் தனக்கான சூழலை தானே உருவாக்கிக்கொள்வார். கண்ணதாசன் தனது வாழ்க்கைக்கான வாய்ப்புகளை தானே உருவாக்கிக்கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.  

ஜாதகத்தில் சந்திரன் கேதுவின் அஸ்வினி நட்சத்திரத்தில் நிற்கிறது. கேது சந்திரனுக்கு திரிகோணத்தில் நிற்கிறது. இதனால் சந்திரன் கேதுவால் முழுமையாக பாதிக்கப்படும். ஆனால் பரிவர்தனைக்குப்பின் செவ்வாய் கேதுவின் நட்சத்திரத்தில் வந்து அமைவதால்   சந்திரனுக்கு ஏற்படவேண்டிய தோஷம் செவ்வாய்க்கு இடம் மாறுகிறது. செவ்வாய் தாய்,  தந்தை, பந்துக்களை குறிக்கும் 4, 9 க்குரிய பாவாதிபதியாவதால் ஜாதகர் இளம் வயதில் பெற்றோரால் உறவினருக்கு தத்துக்கொடுக்கப்பட்டார். பரிவர்த்தனை ஆகும் கிரகங்கள் முதலில் ஜாதகரை பரிதவிக்கவிட்டு பிறகே சிறப்பான பலன்களை வழங்கும். கண்ணதாசன் சிறுவயதில் கடினமான சூழலில் வளர்ந்து படிப்பை தொடர இயலாமல் பரிதவித்து பிறகே சென்னை வந்தார். சிறுவயதில் தான் கண்ணீர் சிந்திய அனுபவங்களையே பாடல்களாக்கி நமது கண்களை குளமாக்கினார். 2 ஆமதிபதி புதன் விரையத்திலும் 5 ஆமிடத்தில் கேதுவும் அமைந்ததால்  2, 5 ஆமிடங்கள் பாதித்தவர்கள் சொந்த ஊரின் இருந்தால் முன்னேற இயலாது என்ற விதியும் இங்கு செயல்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.  

பரிவர்த்தனைக்குப்பின் பின் கால புருஷனுக்கு சுக ஸ்தானமான கடகத்தில், ஜாதகருக்கு படுக்கை சுகத்தை வழங்கவேண்டிய 12 ஆம் பாவத்தில், புதன்+சுக்கிரன் சேர்க்கையால் ஏற்படும் மதனகோபால யோகத்தின் மையத்தில் உணர்சிகளுக்குரிய சந்திரன் வந்து ஆட்சி பெறுகிறார். உணர்சிகளுக்குரிய பெண் கிரகமான சந்திரன் இரு காம-மோக கிரகங்களுடன் குருவின் பார்வையில் இணைகிறது. ஜாதகர் வாழ்க்கை பெண் இன்பத்தை அனுபவிப்பதற்கே என எண்ணி வாழ்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்காக  தாசிப்பெண்களை நாடியவரே தவிர அடுத்தவர் மனைவியை அடைய எண்ணியவரில்லை. சந்திரன்+சுக்கிரன்+குரு இந்த மூன்று கிரக சேர்க்கை அளப்பரிய கற்பனைத்திறனை ஜாதகருக்கு கொடுத்தது. பெண்  இன்பம், வர்ணனை மட்டுமல்ல வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் இவரது கவிதைகளுக்குள் கைகட்டி நின்றது. குருவின் பார்வை பெரும் இடங்ககளான 2, 4 மற்றும் 12 ஆகிய பாவங்கள் சம்பாத்தியம், சுகத்திற்காக செலவுகள் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. கடகத்தில் அமைந்த கிரகச் சேர்க்கையை குரு பார்ப்பதால் கற்பனை ஊற்று பீய்ச்சி அடித்தது என்றால் அது மிகையல்ல. லக்னாதிபதி சூரியன் இசை ராசியான மிதுனத்தில் ராகுவோடு அமைந்ததால் ஜாதகர் இசையோடு தொடர்புகொள்ள அவதரித்தவர் என்பது புலனாகிறது. ராகு எதையும் அதிகப்படுத்தும் கிரகம் என்பதால் ஜாதகருக்கு லாப ஸ்தானத்தில் அமைந்த ராகு இசை வாழ்வில் அதீத பாண்டித்தியத்தை அமைத்துக்கொடுத்துள்ளார். இந்த முக்கிய அமைப்பே ஜாதகர்  உலகப்புகழ் பெற்றவராக தமிழ் இருக்கும் வரை நினைவு கூறத்தக்க கவிஞராக உருவெடுத்ததற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

7 ஆமதிபதி சனி பரிவர்த்தனை செவ்வாயின் மற்றொரு வீடான விருட்சிகத்தில் வக்கிரம் பெற்று அமைந்ததால் ஜாதகருக்கு இல்லற வகையில் பல தொடர்புகள் அமைந்தது. விருச்சிகத்தை சாராயம் காயச்சுமிடம் என ஜோதிடம் வரையறுக்கிறது. சந்திரன் நீசமாகும் கால புருஷனுக்கு உடலுறவு ஸ்தானமான விருட்சிகத்தில் வக்கிர சனி அமைந்து அதன் திரிகோணம் கடகமாக வருவதால் ஜாதகர் மதுவோடு மாதுக்களின் தொடர்பிலும் இருக்க வேண்டும் என்பதன் விதிக்குட்பட்டு வாழ்ந்தார். சூரியன் ராகு தொடர்பு அரசியலிலும் இயக்கப்பணிகளிலும் ஈடுபடுத்தும் அமைப்பாகும். ஜாதகரின் அரசியல் தொடர்புகள் அனைவரும் அறிந்ததே. முக்கிய கிரக சேர்க்கைகள் அமைந்தது உணர்சிகளுக்குரிய நீர் ராசிகள் என்பது கவனிக்கத்தக்கது. இதில் காம கிரகங்களோடு செவ்வாயும் தொடர்பானதால் இவர் தொட்டுப்பார்க்காத மது இல்லை என்றே கூறலாம். லக்னத்திற்கு வீழ்ச்சி ஸ்தானம் கடகம் என்பதால் இவரது மரணம் கூட வெளிநாட்டிலேயே நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. உடல் அளவில் அவர் மரணித்துவிட்டார். ஆனால் புகழ் அளவில் அவர் ஒரு சிரஞ்சீவி. அவர் வார்த்தைகளாலேயே சொல்வதானால் "நிரந்தரமானவர்கள் அழிவதில்லை."  

மீண்டும் விரைவில் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 8300124501 

Saturday 4 July 2020

மருந்து வில்லை உறக்கம்!




கடக லக்னத்திற்கு 1௦ ல் சந்திரன் கேதுவின் அஸ்வினி-3 ல் நிற்கிறார். கேதுவிற்கும் சந்திரனுக்கும் இடையே கிரகங்கள் எதுவுமில்லை. கேது தந்தையை குறிக்கும் சூரியனின் உத்திரம்-4 ல் நின்று தந்தையை குறிக்கும் 9 ஆம் பாவாதிபதி குருவோடு இணைந்துள்ளார். சூரியன் லக்னத்திற்கு 8 ல் மறைந்துள்ளார். இதனால்  ஜாதகியின் தந்தை முதலில் மரணமடைந்தார். லக்னத்திற்கு 5 ல் செவ்வாய் இருப்பதால் தந்தையின் காலத்திற்கு பிறகே ஜாதகியின் வாழ்வு சிறப்படைய வேண்டும் என்பது விதி. கேது 9 ஆமதிபதி குருவை பாதித்த பிறகு பிறகு லக்னத்தையும் சந்திரனையும் தொடுகிறது. இதனால் ஜாதகியின் தாயும் லக்னாதிபதி என்ற அடிப்படையில் ஜாதகியும் அடுத்து கேதுவால் பாதிக்கபடுவார்கள் எனலாம்.


ஜாதகிக்கு திருமணமாகிவிட்டது. ஜாதகிக்கு தற்போது ராகு திசை நடக்கிறது. லக்னாதிபதி சந்திரன் கேது சாரம் பெற்றதால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் ராசியதிபதி செவ்வாய் தனது மற்றொரு வீடான விருட்சிகத்தில் ஆட்சி பெற்றுள்ளார். இதனால் இந்த ஜாதகத்தில் லக்னத்தைவிட ராசியின் வலுவே மேலோங்கி நிற்கிறது. எனவே இந்த ஜாதகத்திற்கு பலன் கூறுகையில்  ராசியை முன்னிறுத்தி பலன் கூறுவதே சிறப்பு.  ராகு, கால புருஷனுக்கு 12 ல் ராசிக்கு 12 ல் இருந்து திசை நடத்துகிறார். 12 ஆமிடம் என்பது படுக்கை, தாம்பத்யம், தூக்கம் போன்றவற்றை குறிக்கக்கூடியது. தாயை தனித்து விட்டுவிட்டு மணமாகி வந்த ஜாதகியால் தாயின் தனிமையை நினைத்து கணவரோடு நல்ல தாம்பத்யத்தை அனுபவிக்க இயலவில்லை. உடல் ரீதியாக மன ரீதியாக ஒருவர் சுகமடைய வேண்டுமெனில் ஜாதகத்தில் உடல் & மன காரகன் சந்திரன் சந்நியாசி காரகன் கேதுவின் சாரம் பெறக்கூடாது என்பது விதி. சன்யாச தர்மத்தை ஏற்றுக்கொண்டோருக்கு வேண்டுமானால் அது நன்மை செய்யலாம். குடும்ப வாழ்வில் ஈடுபட்டுள்ளோருக்கு நன்மை செய்யும் அமைப்பல்ல. 


கூடுதலாக   இந்த ஜாதகத்தில் ராகு-கேதுவின் அட்சின் வெளியே சந்திரன் மட்டும் தனியாக நிற்கிறது. ராகு-கேதுவின் அச்சுக்கு வெளியே இப்படி ஒரு கிரகம் தனித்து நின்றால் அந்த கிரகம் குறிக்கும் உறவுடன் ஜாதகர் ஒன்றிவிட இயலாத சூழல் ஏற்படும். ஜாதகியின் தாயும் மகளுடன் வந்து தங்குவது உசிதமல்ல என்ற நிலையில் தனிமையில் தனது முதுமையை கழிக்கிறார். மேலும் கேது என்பது வயதான விதவையை குறிக்கும் கிரகமாகும். இதனால் விதவையான ஜாதகியின் தாயார் தனது முதுமைக்காலத்தில் கேது குறிப்பிடும் தனிமையில் வாட நேரிடும். தாயை ஏற்றுக்கொள்ள ஜாதகி முனையும் சூழலில் தாய் அதை நிராகரிக்கிறார். தனது தாயின் இந்த நிலையால் ஏற்பட்ட மன உழைச்சலால் ஜாதகி உறக்கமின்றி தவிக்கிறார். இதனால் ஜாதகி உறக்கத்திற்காக மருந்து வில்லைகளை உட்கொள்கிறார். இத்தகையோருக்கு வழிகாட்ட முயலும்போதுதான் ஒரு ஜோதிடராக நான் திகைத்துப்போகிறேன். 


கேது – மருந்து.


உட்கொள்ளல் – சந்திரன்.


நிம்மதியான உறக்கம் – கேது. 



மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,


அதுவரை வாழ்த்துக்களுடன்,


அன்பன்,


பழனியப்பன்,

கைபேசி: 8300124501